*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Saturday, March 13, 2010

மனித உலகும் அசுர உலகும் விண்வெளியில் நேரடி மோதல்?


புதிய ஆய்வுத் தகவல் ஒன்று சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் தமது சுற்றுவட்டப் பாதையி்ன் கலகம் காரணமாக இந்தக் கணத்தில் இருந்து இன்னமும் எவ்வளவு காலத்தில் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளக் கூடும் என்ற பல ஆச்சரியமான முடிவுகளைத் தந்துள்ளது. 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன் உருவானதாக நம்பப்படும் நமது சூரியக் குடும்பத்தின் மையசக்தியான சூரியன் இன்னும் 5 பில்லியன் வருடங்களில் சிவப்பு இராட்சதனாக மாறி (அதாவது Redgiant நட்சத்திரமாக விரிவடைந்து) பூமி உட்பட உள் வட்டப் பாதையிலுள்ள புதன்,செவ்வாய்,வெள்ளி ஆகிய கிரகங்களையும் விழுங்கி விடும் என்பது ஏற்கனேவே வானவியலாளர்களுக்குத் தெரிந்த விடயம்.
அதற்குள் நம் பூமி அழிவதற்கு வாய்ப்பிருக்கின்றதா என்ற ஆவலுடைய ஜக் லாக்சர் மற்றும் மைக்கல் கஸ்டினௌவ் ஆகிய இரு விஞ்ஞானிகள் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கொள்கை அடிப்படையில் (General theory of relativity) பாரிஸ் நகரிலுள்ள விண்வெளி ஆய்வகத்தில் இந்த 5 பில்லியன் வருடங்களில் இக்கிரகங்கள் யாவும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா என ஆராய்ந்துள்ளனர்.
இவ்வாய்வு சூப்பர் கம்பியூட்டர்களின் துணையுடன் எண்கணித சிமுலேசன் முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் வெளியான முக்கிய தகவல் நாம் வாழும் பூமியுடன் வெள்ளிக் கிரகம் அல்லது செவ்வாய்க் கிரகம் மோதுவதற்கான வாய்ப்புக்கள் சில மில்லியன் வருடங்களில் உள்ளது என்பதாகும்.
அதாவது இன்னும் 3.34 மில்லியன் வருடங்களிற்குப் பின் பூமிக்கு 794 Km அண்மையில் வரும் செவ்வாய்க் கிரகம் பூமியுடன் உரசிப் பார்க்காமல் விடாது என்று இவர்கள் கூறுகின்றனர்.
மேலும் இவர்கள் புதன் கிரகத்தை மையமாகக் கொண்டு செய்த இந்த ஆய்வில் ஏனைய கிரகங்கள் தமது சுற்றுப்பாதையில் வரும் 2501 சந்தர்ப்பங்கள் புதனின் ஒர்பிட்டில்(orbit) 0.38 mm அளவேயுடைய மிகச்சிறிய நகர்வை ஏற்படுத்தும் என்று உறுதி படக் கூறுகின்றனர்.
அதனால் என்ன என்று கேட்கிறீர்களா?
வேறொன்றும் இல்லை இச்சந்தர்ப்பங்கள் சூரிய குடும்பத்தையே தலைகீழாக்கப் போகின்றன.
விரிவாகச் சொன்னால் இதில் 25 சந்தர்ப்பங்களில் சூரியனின் ஈர்ப்பு விசையால் கிரகங்களுக்கிடையே ஏற்படும் மோதல்களில் சூரியனின் உள்வட்டப் பாதையிலுள்ள நிலக் கிரகங்களான (Terrestrial rocky planets) செவ்வாய், பூமி, வெள்ளி என்பன நிலை குலைந்து விடும்.
5 சந்தர்ப்பங்களில் சூரியன்,பூமி,புதன்,வெள்ளி அல்லது செவ்வாய் என்பன இரு வழிகளில் மோதிக்கொள்ளும்.
இறுதியாக மொத்த எண்ணிக்கையில் காற் பங்கு(25%) சந்தர்ப்பங்கள் பூமியைத் துண்டு துண்டாகச் சிதறச் செய்கின்ற மோதல்களை உருவாக்குவதாகவும் விளக்கம் தரப்பட்டுள்ளது.எனினும் அஞ்சுமளவுக்கு இவை விரைவில் நடைபெறப் போவதில்லை என்பதுடன் 3.5 பில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை 2500 இற்கு 1 வீதமே இச்சந்தர்ப்பங்கள் அமையும் என்ற தகவலும் தரப்பட்டுள்ளது.சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய கிரகமான புதனின் சுற்றுவட்டப்பாதையின் சமச்சீரற்ற தன்மையைக் கருத்திற் கொண்டு கலிபோர்னியாப் பல்கலைக் கழக விஞ்ஞானியான கிரெகரி 'மிகச்சிறிய பையனான புதன் தனது ஒழுங்கீனத்தால் எல்லாப் பெரியவர்களும் தமக்குள் சண்டையிட்டுக் கொள்ளுமாறு பண்ணுறான்' என நகைச்சுவையாகக் கூறியிருக்கின்றார்.சரி! இனி தலைப்பிற்கு வருவோம். அது என்ன அசுர உலகு என்று கேட்கிறீர்களா? கரடுமுரடான மேற்பரப்பாலும் எரிமலைகளாலும் புராதன காலத்தில் கிரேக்கர்களால் மட்டுமன்றி இன்றைய விஞ்ஞானிகளாலும் அசுரர்களின் கிரகம் என்று அழைக்கப்படும் பூமியின் சகோதரியே அவள்.
இன்னமும் தெரியவில்லையா? சந்திரனுக்கு அடுத்ததாக வானில் பிரகாசமாகத் தெரியும் பொருள். ஏதோ ஒரு நட்சத்திரமல்ல. அது விடிவெள்ளியோ மாலை வெள்ளியோ நீங்கள் பார்க்கும் நேரத்தைப் பொறுத்தது.





உலகம் உருவான கதை


மண்ணுலகம் உருவமில்லாமல், விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் இருந்தது. எங்கும் இருளும் தண்ணீரும் மட்டுமே நிறைந்திருந்தன. கடவுளின் ஆவி மட்டும் தண்ணீரின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தது. வெளிச்சம் இன்னும் மண்ணுலகுக்கு அறிமுகமாகியிருக்கவில்லை.
ஒரு நல்ல உலகைப் படைக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்தார். அவருடைய கற்பனைகளில் ஒரு உலகம் விரிந்தது. அந்த உலகை நிஜத்தில் கொண்டு வரவேண்டும் என்று கடவுள் நினைத்தார். அதற்கு முதல் தேவை வெளிச்சம். இருளுக்குள் கிடக்கும் உலகைத் தூசு தட்ட முதல் தேவை வெளிச்சம்.
ஒளி தோன்றுக !
இதுதான் படைப்பின் துவக்கத்தில் கடவுள் உச்சரித்த முதல் வார்த்தை. அதுவரை இருளுடன் மட்டுமே அறிமுகம் கொண்டிருந்த உலகத்தின் மீது முதன் முதலாக ஒரு வெளிச்சக் கீற்று வானிலிருந்து வந்து விழுந்தது. அந்த வெளிச்சம் மெல்ல மெல்ல பூமியின் மேலிருந்த இருளை வெளியேற்றியது.
கடவுள் வெளிச்சத்தைப் பார்த்தார். உருவமற்ற பூமி முதன் முறையாக தன் அழகற்ற முகத்தை வெளிச்சத்தில் காட்டியது. முதல் படைப்பான ஒளி கடவுளுக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்தது. ஆனாலும் எப்போதுமே வெளிச்சமாய் இருப்பது நல்லதல்ல, வெளிச்சமும் இருளும் மாறிமாறி வரவேண்டும் அப்போது தான் நன்றாக இருக்கும் என்று கடவுள் நினைத்தார்.
அதன்படியே கொஞ்சநேரம் வெளிச்சம், கொஞ்ச நேரம் இருள் என ஒரு நாளை இரண்டாகப் பிரித்தார். இப்போது கடவுளுக்கு முழு திருப்தி ! வெளிச்சமாய் இருக்கும் காலத்தைப் பகல் என்றும் இருளாய் இருக்கும் காலத்தை இரவு என்றும் கடவுள் பெயரிட்டார். அது தான் உலகில் நடந்த முதல் பெயர்சூட்டு விழா. அந்த நிகழ்ச்சி முடிந்தபோது முதல் நாள் முடிவுறிருந்தது.
மறு நாள் கடவுள் வெளிச்சத்தில் இருந்த பூமியைப் பார்த்தார். தண்ணீரும், தரையும் பின்னிப் பிணைந்து ஒரு அழகற்ற, பயனற்ற நிலையில் இருந்தது பூமி. இந்தத் தண்ணீரை இரண்டாகப் பிரித்து வானத்துக்கு மேலே ஒரு பாகத்தையும் பூமியிலே இன்னொரு பாகத்தையும் வைத்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் நினைத்தார்.அப்படியே செய்தார்.
பூமியிலிருந்த தண்ணீரின் ஒருபகுதி வானத்துக்கு மேலே இடம்பெயர்ந்தது. மிச்ச தண்ணீர் தாய்வீடான பூமியிலேயே தங்கிவிட்டது. வானத்தைக் கடவுள் விண்ணுலகம் என்றும், பூமியை மண்ணுலகம் என்றும் பெயரிட்டார். படைத்தலின் இரண்டாம் நாள் பணி அத்துடன் முடிவடைந்தது.
தண்ணீரும் தரையும் ஆங்காங்கே சிதறிச் சிதறிக் கிடப்பதை விட தண்ணீர் ஓரிடத்திலும், தரை ஓரிடத்திலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் எண்ணினார். ‘பூமியிலே ஆங்காங்கே கிடக்கும் தண்ணீர் எல்லாம் ஒரே இடத்தில் வந்து சேரட்டும்’ என்று கட்டளையிட்டார்.
பூமியில் கிடந்த தண்ணீரெல்லாம் உடனே ஓடி ஓரிடத்தில் வந்து சேர்ந்தது. மிகப்பெரிய தண்ணீர்ப் பரப்பு ஒன்று உருவானது. தண்ணீரெல்லாம் கைகோர்த்து நின்ற மிகப் பெரிய நீர் நிலையைக் கடவுள் பெருங்கடல் என்று பெயரிட்டார். இப்போது தண்ணீர் வடிந்து போன கட்டாந்தரை மிகப் பெரிய அளவில் அவருடைய முன்னால் கிடந்தது. கடவுள் மகிழ்ந்தார். ஆனால் தரை அழகில்லாமல் வெறுமையாக இருந்தது. அழகில்லாமல் இருக்கும் தரையை எப்படி அழகாக்குவது என்று கடவுள் யோசித்தார்.
நிலத்தில் ஏராளமான புல்வெளிகளையும், செடிகளையும், மரங்களையும் கடவுள் வளரச் செய்தார். வெறுமையாய்க் கிடந்த தரையில் திடீரென விதவிதமான செடிகளும், மரங்களும், அழகிய புல்வெளிகளும் தோன்றின. இப்போது தரை வெறுமையாக இல்லாமல் அழகானதாக மாறியது. மண்ணுலகு தன் பரப்பு முழுவதும் பச்சை போர்த்திச் சிரித்த போது காலையும் மாலையும் சேர்ந்து மூன்றாம் நாள் முடிவுற்றிருந்தது.
உலகத்துக்குப் பகலையும் இருளையும் கொண்டு வந்த கடவுள், இரண்டையும் ஆட்சி செய்ய இரண்டு ஒளிப் பிழம்புகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கணித்தார். ஒளிப்பிழம்புகள் மாறி மாறி வருவதை வைத்துக் காலங்களைக் கணிக்கவும் முடியும் என்று கடவுள் உணர்ந்தார்.
எனவே பகலை ஆள ஒரு மிகப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள இன்னொரு ஒளிப்பிழம்பையும் கடவுள் நான்காவது நாளில் படைத்தார். அந்த இரண்டு ஒளிப்பிழம்புகளையும் வானத்திலிருந்து ஆட்சி செய்யுமாறு கட்டளையிட்டார். வானம் ஒளிப்பிழம்பைச் சுமந்ததும் அழகானதாக மாறியது.
இப்போது பூமியில் வெளிச்சம் தேவையான அளவுக்குக் கிடைத்தது. வானத்தின் பரப்பில் ஒளிப்பிழம்புகளுடன் ஏராளமான விண்மீன்களையுன் கடவுள் படைத்தார். இப்போது வானம் வெளிச்ச மயமாக எழிலின் இருப்பிடமாக மாறியது. நான்காவது நாள் படைப்பில் கடவுள் மிகவும் திருப்தியடைந்தார்.
தன்னுடைய நான்கு நாள் படைப்பையும் ஐந்தாவது நாளில் பார்வையிட்டார் கடவுள். அழகிய பூமி, நீள் கடல், வெளிச்ச வானம் என எல்லாம் மிக அழகாக இருந்தன. தண்ணீரிலும் தரையிலும் இனிமேல் உயிரினங்கள் தோன்றினால் அது பூமியை மேலும் அழகுபடுத்தும் என்று கடவுள் ஏராளமான கடல்வாழ் உயிரினங்களையும், வானத்துப் பறவைகளையும் படைத்தார்.
கடல் முழுவதும் மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் நீத்தத் துவங்கின, அவை தண்ணீரின் மேல் குதித்தும், நீர்த்தாவரங்களின் இடையே ஓடியும் விளையாடியதைக் கண்ட கடவுள் ஆனந்தமடைந்தார். வானத்துப் பறவைகள் அழகழகான சிறகுகளை அடித்து மரங்களிடையே ஆனந்தமாய் சுற்றித் திரிவதைக் கண்டு கடவுள் மிகவும் திருப்தியடைந்தார். நீங்கள் எல்லாம் பலுகிப் பெருகி இந்த பூமியின் மெளனத்தைக் கலையுங்கள் என்று அவற்றை வாழ்த்தினார். ஐந்தாவது நாள் படைப்பைக் கடவுள் அத்துடன் முடித்துக் கொண்டார்.
ஆறாவது நாளில் ஆண்டவர், நிலத்தில் ஊர்வன, காட்டு விலங்குகள், கால்நடைகள் எல்லாம் வேறு வேறு இனங்களில் தோன்றட்டும் என ஆணையிட்டார். பறவைகள் வானத்தில் பறந்து திரிய, விலங்குகள் பூமியில் அலைந்து திரிந்தன. அவை வெவ்வேறு இனங்களில், வெவ்வேறு வடிவங்களில் பூமியை நிறைத்தன. கடவுள் தான் படைத்த விலங்குகளோடு பேசினார். நீங்களும் பலுகிப் பெருகி பூமியை நிறையுங்கள் என்று வாழ்த்தினார்.
தன்னுடைய் ஆறு நாள் படைப்பையும் கடவுள் பார்த்து ரசித்தார். ஆனாலும் ஒரு குறை அவர் கண்களுக்குத் தெரிந்தது. பூமியில் பறவைகள், விலங்குகள், அழகிய தாவரங்கள் எல்லாம் இருக்கின்றன, கடலில் நீர்வாழ் உயிரினங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் பூமியிலிருந்து ஆட்சி செய்ய ஒரு உயிரினத்தைப் படைத்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் யோசித்தார்.
விலங்குகளில் ஒன்றையோ, பறவைகளில் ஒன்றையோ, நீர்வாழ் உயிரினங்களில் ஒன்றையோ பூமியை ஆள்வதற்காகத் தேர்ந்தெடுத்தால் சிறப்பானதாக இருக்காது என்று அவருக்குத் தோன்றியது. எனவே ‘என்னைப் போன்ற வடிவில் ஒரு உயிரினத்தைப் படைப்பேன். அவனை மனிதன் என்று அழைப்பேன், அவனிடம் இந்தப் பூமியை ஆளும் பொறுப்பை ஒப்படைப்பேன்’ என்று கடவுள் தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.
இதுவரை படைத்த அனைத்தையும் கட்டளையிட்டு உருவாக்கிய கடவுள் மனிதனை மட்டும் வித்தியாசமாகச் சிறப்பாகப் படைக்க வேண்டும் என்று விரும்பினார். ‘மனிதன் தோன்றட்டும்’ என்னும் ஒற்றைவாக்கில் மனிதனைப் படைத்தால், அவனுக்கும் இதுவரை தான் படைத்த உயிரினங்களுக்கும் இடையே வேறுபாடு இல்லாமல் போய்விடும் என்று எண்ணிய கடவுள், மனிதனை தன்னுடைய உழைப்பினாலும், உயிரினாலும் உருவாக்கவேண்டும் என்று தீர்மானித்தார்.
தரையில் அமர்ந்து கொஞ்சம் மண்ணைச் சேகரித்தார். அந்த மண்ணை வைத்துக் கடவுள் தன்னைப் போன்ற ஒரு உருவத்தை உருவாக்கினார். உலகில் உருவாக்கப் பட்ட முதல் சிற்பம் அது தான். உலகின் முதல் சிலை அந்த மனித சிலை தான். கடவுள் மனிதனின் உருவத்தைச் செய்து முடித்ததும் குனிந்து அவனுடைய நாசிகளில் தன்னுடைய உயிர் மூச்சை ஊதினார்.
மனிதன் உயிர்பெற்றான் கடவுளின் உயிர்மூச்சால் உயிர்பெற்றதால் அவனுக்குள் தெய்வத் தன்மை நிறைந்திருந்தது. தன்னுடைய கண்ணைத் திறந்து அவன் கடவுளைப் பார்த்தான். கடவுள் புன்னகைத்தார். தன்னுடைய உடல் உழைப்பும், உயிர் மூச்சும் உருவாக்கிய மனிதனை அவர் நேசத்துடன் அணைத்துக் கொண்டார்.
மனிதனைப் படைத்த கடவுள் பூமியைப் பார்த்தார். எந்த இடமும் மனிதனைத் தங்கவைக்கத் தகுதியானதாய்த் தோன்றவில்லை. எனவே கடவுள் ஒரு தோட்டத்தை அமைத்தார். அதுதான் கடவுளின் ஏதேன் தோட்டம். ஏதேன் வானக சுவர்க்கத்தின் மண்ணக வடிவமாய் இருந்தது.
அழகிய மரங்கள் தோட்டம் முழுவதும் நிறைந்திருந்தன. மரங்கள் மனிதனின் பசியைப் போக்க சுவையான பழங்களை கிளைகளெங்கும் தொங்கவிட்டிருந்தன. அழகிய பறவைகள் மரங்களில் அமர்ந்து சிறகடித்தும், குரலெழுப்பியும் ஏதேனை இசையின் இருப்பிடமாக மாற்றின. மலர்களை தங்கள் முதுகில் ஏந்தியபடி ஓடும் பீசோன், கீகோன், திக்ரீசு, யூப்பிரத்தீசு என்னும் நான்கு அற்புத ஜீவ நதிகள் ஏதேனுக்குள் ஓடின.
அந்தத் தோட்டத்தின் நடுவே இரண்டு முக்கியமான மரங்கள் இருந்தன. ஒன்று ஜீவ விருட்சம், இன்னொன்று ‘நன்மை தீமை அறியும் மரம்’. ஏதேன் தோட்டம் கடவுளின் கற்பனைகளை நிஜத்தில் எடுத்து வைத்தது. ஏதேன் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தக் கடவுள், இதுதான் மனிதனுக்குத் தகுதியான இடம் என்று சொல்லி தான் படைத்த மனிதனை அங்கே தங்கச் செய்தார்.
ஆறு நாட்களாகத் தான் படைத்த பூமியையும், உயிரினங்களையும் கடவுள் பார்வையிட்டார். அனைத்துமே மிகவும் திருப்திகரமாக இருந்தன. ஆறு நாட்களுக்கு முன் உருவமற்றிருந்த பூமி இப்போது அழகும். இன்னிசையும் நிறைந்த அழகிய இடமாக மாறியிருந்தது. தன்னுடைய படைப்பில் மகிழ்ந்த கடவுள் ஏழாவது நாளில் ஓய்வெடுத்தார்.
பின் கடவுள் ஏதேன் தோட்டத்திற்குச் சென்று மனிதனைப் பார்த்தார். அவன் நதிகளில் குதித்து, மரங்களில் கனிகளைப் பறித்துத் தின்று ஆனந்தமாக இருந்தான். கடவுள் அவனை ஏதேன் தோட்டத்தின் நடுவே இருந்த மரத்தின் அருகே கூட்டிச் சென்று ‘ இதோ.. இந்தத் தோட்டத்திலும், இந்த உலகத்திலும் உள்ள எல்லாமே உனக்குச் சொந்தமானவை தான். ஆனால் இந்த ஒரு மரத்தின் கனியை மட்டும் நீ உண்னக் கூடாது. இதன் பெயர் நன்மை தீமை அறியும் மரம்.’ என்று கடவுள் மனிதனுக்கு தன்னுடைய முதல் கட்டளையைக் கொடுத்தார். அதுதான் கடவுளிடமிருந்து மனிதன் பெற்றுக் கொண்ட முதல் கட்டளை. மனிதன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். கடவுள் அவனையும் அழைத்துக் கொண்டு ஏதேனை விட்டு வெளியே வந்தார்.
‘இதோ இந்த பூமி முழுவதும் உனக்கே சொந்தம். உனக்கு விருப்பமானவற்றை உண்டு, விருப்பமானதைச் செய்து மகிழ்ச்சியாக இரு. இந்த விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் நான் உனக்காகத் தான் உருவாக்கியிருக்கிறேன். நீ எனக்கு மட்டும் பணிந்திரு, மற்றவை அனைத்தையும் ஆட்சி செய். இப்போது நான் படைத்த இந்த உயிரினங்களுக்கு நீ பெயரிடவேண்டும்’. கடவுள் சொன்னார்.
கடவுள் ஒவ்வொரு விலங்கினருகிலும் மனிதனை அழைத்துச் சென்றார். அவன் தன்னுடைய மனதில் தோன்றிய ஒரு பெயரைச் சொல்ல அதுவே அந்த இனத்தின் பெயரானது. அவ்வாறே அவன் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்திற்கும் பெயரிட்டான். மனிதனின் முதல் பணி அத்துடன் முடிவடைந்தது.
மனிதன் அனைத்திற்கும் பெயரிட்டு முடித்தபின் ஏதேன் தோட்டத்திற்குத் திரும்பினான். கடவுள் பார்த்தார். எல்லா உயிரினங்களும் ஜோடி ஜோடியாக அலைய மனிதன் மட்டும் தனியாக இருக்கிறானே என்று நினைத்து வருந்தினார். அவர் எல்லா காட்டு விலங்குகளையும் கவனித்துப் பார்த்தார், எல்லா பறவையினங்களையும் பார்வையிட்டார் ஆனால் எதுவுமே மனிதனுக்குத் தக்க துணையாகத் தோன்றவில்லை. மனிதனைப் போன்ற தோற்றத்தில், மனிதனோடு நல்ல அன்புடன் உறவாடக் கூடிய ஒரு உயிரைத் தான் மனிதனுக்குத் துணையாக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்தார்.
அன்று இரவில் மனிதன் தூங்கிக் கொண்டிருக்கையில் அவனருகில் கடவுள் வந்து நின்றார். மண்ணினால் இன்னொரு உருவத்தைச் செய்தால் அது இன்னொரு இனமாகி விடும். எனவே மனிதனிலுருந்தே ஒரு உயிரைப் படைக்கவேண்டும். அப்போது தான் அது மனிதனின் உயிரின் பாகமாகவும், உடலின் பாகமாகவும் இருக்கும் என்று கடவுள் நினைத்தார்.
அவனுடைய உடம்பில் எந்த பகுதியிலிருந்து மனிதனை உருவாக்குவது என்னும் குழப்பம் கடவுளுக்கே ஏற்பட்டது. காலிலிருந்து இன்னொரு உயிரைப் படைத்தால் அவள் மனிதனை விடக் கீழானவளாகக் கருதப் படலாம், தலையிலிருந்து படைத்தால் மனிதனை அடக்கி ஆள முயலலாம், எனவே விலா எலும்பிலிருந்து ஒரு உயிரைப் படைக்க வேண்டும் என்று கடவுள் திட்டமிட்டார்.
அப்போது தான் மனிதனும், மனிதனின் துணையும் ஒரே நிலையில் இருப்பார்கள். அவர்கள் இருவருமே சமமானவர்களாகக் கருதப் படுவார்கள். யாரும் யாரையும் விட உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ எண்ணிக் கொள்ள மாட்டார்கள் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார். தூங்கிக் கொண்டிருந்த மனிதனுக்குக் கடவுள் ஆழ்ந்த தூக்கத்தைக் கட்டளையிட்டார். அவன் மயக்க நிலையில் விழுந்தான். அப்போது கடவுள் அவனுடைய விலா எலும்பிலிருந்து ஒன்றை எடுத்து அதை மனிதனின் துணையாக உருவாக்கினார்.
மனிதன் விழித்தெழுந்ததும் கடவுள் அவனிடம்,’ இதோ… இந்த உயிரை நான் உன் துணைவியாகத் தருகிறேன். உன்னுடைய விலா எலும்பிலிருந்து இவளை நான் உருவாக்கி இருக்கிறேன். எனவே இவளும் நீயும் ஒரே உடலாகவும், ஒரே உயிராகவும் வாழுங்கள்’ என்றார். மனிதன் மகிழ்ந்தான்.‘இவள் என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள். எனவே இவளுக்கு நான் பெண் என்று பெயரிடுகிறேன் என்றான்’. மனிதன் துணையுடன் வாழத்துவங்கினான். இருவருமே நிர்வாணத்தை அணிந்திருந்தார்கள், ஆனாலும் வெட்கத்தை அறிந்திருக்கவில்லை. மனிதனின் ஆனந்தத்தைக் கண்ட கடவுள் தன்னுடைய படைப்பு முழுமையடைந்து விட்டதை அறிந்து மகிழ்ந்தார்.
விவிலியக் கதைகள் நூலிலிருந்து.





ஒன்றுபடு,ஓரடியாய் முன்னேறு‏


எழுந்து வாருங்கள் தோழர்களே! எம் விதியை நாமே நிர்ணயம் செய்குவோம்.எடுக்கும் முதலடியை,மௌனப் பேரலைகளாக மே ஒன்றில் உலகினை அதிர வைப்போம். எங்களிடம் இழப்பதற்கு எதுவுமில்லை. எங்களின் குரல்வளை நசிக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் சொல்ல விரும்புவது இது ஒன்றுதான் . நாங்கள் சாம்பலின் பறவைகள்.





Friday, March 12, 2010

நிய‌ம்







சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தல் - 2010: திருகோணமலையும் தமிழர் பிரதிநித்துவமும்



திருகோணமலை மாவட்டம் பாரம்பரியமாக தமிழ் மக்கள் பெருமளவில் வாழ்ந்த ஒரு மாவட்டம்.பின்பு சிங்கள மக்களின் குடியேற்றத்தின் காரணமாக அங்கு இன விகிதாச்சாரம் மாற்றியமைந்து கொண்டிருந்த போதிலும் தமிழ் மக்கள் சாத்தியமான அளவில் தங்கள் பிரதிநிதித்துவத்தை இரண்டு பேரை கொண்டதாக தக்க வைப்பதற்கு மிக கடுமையாக உழைத்திருக்கிறார்கள் போராடியிருக்கிறார்கள்.2004 ஆம் ஆண்டு தேர்தல் காலகட்டத்தில் கூட தமிழீழ விடுதலை புலிகள் இருந்த கால கட்டத்தில் அவர்கள் மிக முழு மூச்சாக இந்த தேர்தலின் பின் நின்று அந்த இரண்டு தொகுதிகளை காப்பாற்ற வேண்டுமென்பதில் வாக்காளர்களை மிக உற்சாகமாக ஊக்குவித்திருந்தார்கள்.எனவே இங்கு ஆகக் கூடிய வாக்குகளை தமிழ் மக்கள் சார்ந்த கட்சி பெற வேண்டும் என்பது தான் திருகோணமலை மாவட்டத்தின் தமிழ் மக்களின் மிகத் தெளிவான நிலைப்பாடாகும்.இலங்கைத் தீவின் வரலாற்று மூலங்களுக்கு ஊடாகப் பெறப்பட்ட மக்கட் தொகை தொடர்பான பதிவுகள் யாவும் அப்பிரதேசத்தில் தமிழ் மக்கள் கொண்டிருந்த அதிகப்படியான பெரும்பான்மையினை உறுதிப்படுத்துகின்றன.பிற்காலத்தில் முஸ்லீம் மக்களும் தமிழ் பேசும் மக்களாக பெருகிய போதும் திரகோணமலை மாவட்டம் தமிழ்ப் பேசும் மக்களின் மாவட்டமாகவே இருந்தது.கடந்த 60 வருடங்களாக சிங்களத் தேசியவாதிகளின் ஆளுமையினால் கட்டுப்படுத்தப்பட்டு வரும் சிறீலங்காவின் அரசாங்கங்கள் முன்னெடுத்த திட்டமிட்ட தமிழின விரோத செயற்றிட்டங்கள் காரணமாக தமிழ் மக்களின் பெரும்பான்மைப் பலம் குறுக்கப்பட்டு பலவீனப்படுத்தப்பட்டது.தற்போது செயற்கையாக உருவாக்கப்பட்ட இனச் சமநிலை தமிழ் முஸ்லீம் சிங்கள சமூகங்களின் சனத் தொகைப் பலத்தினை சமனிலைக்கு கொண்டுவந்துள்ளது. எனினும் இச்சமனிலை மிக ஆபத்தான அறிகுறியாகவே அமைந்துள்ளது.* திருகோணமலையில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு அரசாங்கத்தினாலும் அதன் நிர்வாகக் கட்டமைப்புக்களாலும் சிங்களத் தேசிய உணர்வு கொண்ட தனியார் துறையினராலும் வழங்கப்படும் வெளிப்படையானதும் மறைமுகமானதும் தந்திரோபாய ரீதியானதுமான ஆதரவும் வளமும் பின் பலமும் அவர்களின் எண்ணிக்கையினை விரைவில் அதிகரித்துக் கொண்டே செல்லும்.* இயல்பாகவே முஸ்லீம் சமூகத்திடம் காணப்படும் சனத் தொகை வளர்ச்சி வீதமும் குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கையும் அச் சமூகத்தினை சனநாயக பலத்தினை தக்கவைக்கும் வலுவாக கவசங்களாக உள்ளது.* தமிழ் சமூகத்தினுள் வளர்ந்து வரும் சனத் தொகைக் கட்டுப்பாட்டு நடைமுறையும் பாதுகாப்பிற்காகவும் தேவைகளுக்காகவும் சேவைகளுக்காகவும் நகரங்களினையும் வேறு வளர்ச்சி மையங்களினை நோக்கி குடிபெயரும் செயற்பாடும் தேசிய அடையாளத்துடன் கூடிய அவர்களின் சமூக இருப்பினையும் அரசியல் பங்கேற்பு வலுவினையும் அபாயத்தின் எல்லை நோக்கி சறுக்கச் செய்கின்றது.விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமைக்கு முன்னிருந்த தேர்தல் முறையில் திருகோணமலை-மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியாகவே அடையாளங் காணப்பட்டது.இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது அரசியல் ஆளுமையினை அம் மாவட்டத்தில் நிலைநிறுத்தியதோடு முஸ்லீம் பிரதிநிதிகளும் தமிழரசுக் கட்சியின் ஊடாக தெரிவு செய்யப்பட்டனர்.முஸ்லீம் மக்கள் ஆளும் தேசிய கட்சிகளுடன் இணைந்தும் தனியான முஸ்லிம் அடையாளங்களுடன் தேர்தல்களில் போட்டியிட்ட காலங்களில் கூட இரண்டு தமிழ்ப் பிரதிநிதிகளினை மூதூரிலிருந்தும் திருகோணமலையிலிருந்தும் தமிழ் மக்கள் சிறீலங்காவின் நாடாளுமன்றத்திற்கு அனுப்பினர்.தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையில் நாடாளுமன்ற ஆசனங்களுக்கான போட்டி உச்சமாக இருந்தாலும் ஒரு சமூகம் மற்றைய சமூகத்தின் வாக்குப் பலத்தில் சார்ந்திருந்தது மிக அரிதாகவே இருந்தது.திருகோணமலை தேர்தல் மாவட்டம் மூன்று தேர்தல் தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.திருகோணமலை, மூதூர், சேருவில. தேர்தல் தொகுதிகளின் பிரிப்பும் எல்லை வரையறைகளும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பிற்கு விடப்பட்ட அச்சுறுத்தல்களே.திருகோணமலை - மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதி 1976 இல் புதிதாக கந்தளாயினை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட சேருவில தொகுதியினால் சிங்கள மக்களுக்குச் சார்பாக மாற்றப்பட்டது.1976 ற்குப் பின்னான தேர்தல்களின் போது கூடிய பிரதிநிதித்துவ ஆசனங்களினைத் கைப்பற்றுவதற்கான போட்டி தமிழ் முஸ்லீம் சமூகங்களுக்கிடையில் ஏற்படும் போது சிங்கள மக்களின் சார்பான வாக்குகள் தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் அதன் கூட்டணியும், மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றுக்கிடையில் சிதறியது. எனினும் ஒரு ஆசனத்தினைப் பெறுவதில் சிங்கள மக்கள் சிரமப்படவில்லை.02.சிறீலங்காவின் தேர்தல் முறையும் திருகோணமலையில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவமும்:சிறீலங்காவில் தற்போது நடத்தப்படும் தேர்தல் முறை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையாகும்.நிறைவேற்று அதிகாரத்தினைக் கொண்டிருக்கும் குடியரசு அதிபர் முறையினை 1978ல் நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனே.1977 தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையினைப் பெற்றிருந்தும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தமிழர்களின் அரசியல் தலைவரான திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் பொறுப்பேற்றதனைப் பொறுக்காமல் தேடிய மாற்று வழி முறையே இத் தேர்தல் முறையாகும்.விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் ஒரு கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டதாக நாடாளுமன்ற ஆசனங்களினைக் கைப்பற்ற முடியாது.அத்துடன் சிங்கள மக்களினைச் சாராத கட்சிகள் எதிர்க் கட்சியாக வரும் அளவுக்கு தங்களின் ஆசனங்களின் எண்ணிக்கையினை குவிக்கவும் முடியாது.விகிதாசார தேர்தல் முறையின் கீழ் தனி நபர்கள் போட்டியாளராக முடியாது.ஒரு கட்சியின் பட்டியலில் அங்கத்தவராகவோ அல்லது தனி நபர்களால் ஒன்றிணைக்கப்பட்ட சுயேச்சைக் குழுவின் அங்கத்தவராகவோ மட்டுமே போட்டியிட முடியும்.மக்கள் தங்கள் வாக்குகளினைப் பிரயோகிக்கும் போது இரண்டு விடயங்களினைச் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றார்கள்.முதலில் தங்களுக்கு விருப்பமான கட்சியின் சின்னத்திற்கு எதிரே புள்ளடி அடையாளத்தினை இடவேண்டும்.பின்பு அக் குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளர் பட்டியலில் உள்ள தமக்கு விருப்பமானவரின் இலக்கத்திற்கு எதிரே மற்றுமொரு புள்ளடி அடயாளத்தினையும் இடவேண்டும். இது கட்டாயமானதாக இருக்காது.வாக்குகள் எண்ணப்படும் போது முதலில் கட்சிகளின் அடையாளங்களின் அடிப்படையில் வாக்களிக்கப்பட்ட சீட்டுக்கள் பிரிக்கப்பட்டு எண்ணப்படும்.கணக்கெடுக்கப்பட்ட வாக்குகளில் ஒவ்வோர் கட்சியும் அல்லது குழுவும் பெற்றவாக்குகளின் எண்ணிக்கை தான் அக் குறிப்பிட கட்சி அல்லது குழு அத் தேர்தல் மாவட்டததில் கொண்டிருக்கக்கூடிய நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாகும்.விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் ஒரு மாவட்டத்தில் எந்தக் கட்சி அல்லது குழு ஆகக் கூடிய வாக்குகளினைப் பெறுகின்றதோ அக் கட்சிக்கு வெகுமானமாக முதலில் ஒரு பிரதிநிதித்துவம் ஒதுக்கப்படும்.பின்பு அம்மாவட்டத்தின் மொத்த பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையில் ஒன்றினை [ஏற்கனவே உபகாரமாக ஒதுக்கப்பட்டது தவிர்த்து] கழித்த பின்பு வருகின்ற எண்ணிக்கை போட்டியில் ஈடுபட்ட சகல கட்சிகளும் குழுக்களும் பெற்ற வாக்கு விகிதாசாரத்திற்கு ஏற்ப பங்கிடப்படும்.ஒரு அங்கத்துவ ஆசனத்திற்கான விகித வாக்குகளினை முழுமையாக ஒரு கட்சியோ குழுவோ கொண்டிருக்காவிட்டால் அவர்கள் கொண்டிருக்கும் வாக்குகளில் ஆகக்கூடிய வாக்குகளினை எஞ்சிய வாக்குகளாகக் கொண்டிருப்பவர்களுக்கு எஞ்சிய ஆசனம் ஒதுக்கப்படும்.ஒரு சிறிய உதாரணம்:ஒரு குறிப்பிட்ட தேர்தல் மாவட்டத்தில் 300,000 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் இருப்பதாகவும் அத்தொகுதி 4 நாடாளுமன்ற ஆசனங்களுக்கு உரித்துடையது எனவும் எடுத்துக்கொள்வோம்.எதிர்வரும் தேர்தலில் அக் குறிப்பிட்ட மாவட்டத்தில் மூன்று கட்சிகள் போட்டியிடுவதாக கொள்வோம்.தேர்தலில் 'அ' என்ற கட்சி 90,000 வாக்குகளினையும் 'இ' என்ற கட்சி 89,000 வாக்களினையும் 'உ' என்ற கட்சி 49,000 வாக்குகளினையும் பெற்றுள்ளது.எவ்வாறு அத்தேர்தல் மாவட்டத்திற்கான 4 ஆசனங்களினைப் பகிர்வது?.முதற்கட்டமாக மூன்று கட்சிகளுக்குள்ளும் கட்சி 'அ' 90,000 வாக்குகளினைப் பெற்று முன்னிலையில் நிற்பதால் அக்கட்சிக்கு வெகுமானமாக ஒரு பிரதிநிதித்துவம் ஒதுக்கப்படும்.எண்ணிக்கை கணிப்பிடப்படும்.இதற்காக வாக்களிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கையினை [228,000] மாவட்டத்தின் ஆசனங்களின் எண்ணிக்கையினால் [4] வகுக்கப்பட்டு ஒரு ஆசனத்திற்கு தேவையான வாக்குகளின் எண்ணிக்கை வரையறுக்கப்படும்.[228000/4 = 57,000].'அ' கட்சி கொண்டிருக்கும் 90,000 வாக்குகளில் 57,000 வாக்குகளுக்கு ஒரு ஆசனம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பின்பு அவர்களின் மிகுதிவாக்குகள் (90000-57000 = 33000) அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.தற்போது 'இ' கட்சியின் கணக்கில் 89,000 வாக்குகளும் 'உ' கட்சியிடம் 49,000 வாக்குகளும் 'அ' கட்சியின் கணக்கில் 33, 000 வாக்குகளும் உண்டு.அதே வேளை இரண்டு எஞ்சிய ஆசனங்கள் பிரிக்கப்பட வேண்டும்.'இ' கட்சி 89,000 வாக்குகளினை வைத்திருப்பதனால் அவர்களுக்கு ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டு அதற்குரிய வாக்காளர் எண்ணிக்கை அவர்கள் கணக்கிலிருந்து [89000-57000 = 32000] கழிக்கப்பட்டு எஞ்சிய தொகை அவர்களுக்கு வரவு வைக்கப்படும்.தற்போது எஞசியதாக ஒரு ஆசனமும் 'உ' கட்சியிடம் 49,000 வாக்குகளும் 'அ' கட்சியிடம் 33,000 வாக்குகளும் 'இ' கட்சியிடம் 32,000 வாக்குகளும் இருக்கும்.இந்நிலையில் ஆகக் கூடிய வாக்குகளினை [49,000] 'உ' கட்சி கொண்டிருக்கும் படியால் எஞ்சிய ஒரு ஆசன பிரதிநிதித்துவம் 'உ'கட்சிக்கு வழங்கப்படும்.விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் 90,000 வாக்குகள் பெற்ற 'அ' கட்சி 1+1 என இரண்டு பிரதிநிதித்துவத்தினையும், 89,000 வாக்குகளினைப் பெற்ற 'இ'கட்சியும், 49,000 வாக்குகள் பெற்ற 'உ' கட்சியும் தலா ஒரு பிரதிநிதித்துவத்தினையும் பெறும்.இங்கு குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில் 'இ' கட்சி பெற்ற வாக்குகளினைவிட ஒரு ஆயிரம் வாக்குகளினை மேலதிகமாகப் பெற்ற காரணத்தினால் 'அ' கட்சி இரண்டு ஆசனங்களினைப் பெறுகின்றது.மறுவகையில் 'இ' கட்சி சில வாக்குகள் வித்தியாசத்தில் அது ஒற்றை இலக்க எண்ணிக்கை வாக்குகளாககூட இருக்கலாம், முதன்நிலையினை இழக்கும் போது ஒரு பிரதிநிதித்துவ ஆசனத்தினையே இழக்க வேண்டியுள்ளது.அதே போல் 89,000 வாக்குகள் பெற்ற 'இ' கட்சிக்கு சமமாக 49,000 வாக்குகளினைப் பெற்ற 'உ' கட்சியும் ஒற்றை ஆசனத்தினை உரித்தாக்கி கொண்டுள்ளது.03.2000ம் ஆண்டு தேர்தலின் முடிவுகள் சொல்லும் பாடம்:2004ம் ஆண்டு தேர்தலின் போது தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்டு 68995 வாக்குகளினைப் பெற்றது.அதே வேளை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 65187 வாக்ககளினையும் ஐக்கிய சுதந்திர மக்கள் கூட்டணி 31053 வாக்குகளினையும் ஐக்கிய தேசியக் கட்சி 15693 வாக்குகளினையும் பெற்றது.விகிதாசார முறையின் கீழ் ஆகக் கூடிய வாக்குகளினைப் பெற்ற தமிழரசுக் கட்சி வெகுமானமாக ஒதுக்கப்படும் ஆசனத்தினை பெற்றுக்கொண்டதன் மூலம் தமிழ் மக்களுக்கான இரண்டு பிரதிநிதித்துவத்தினை தக்க வைத்துக் காப்பாற்றியது.2001ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டு 62930 வாக்குகளினையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 56121 வாக்ககளினையும், பொதுசன ஐக்கிய முன்னணி 32997, வாக்குகளினையும் மக்கள் விடுதலை முன்னணி 6095 வாக்குகளினையும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 1470 வாக்குகளினையும் பெற்றுக்கொண்டது.அத் தேர்தலில் ஆகக் கூடிய வாக்குகளினை ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டு பெற்றமையினால் அக் கட்சிக்கு வெகுமான ஒதுக்கு உட்பட இரண்டு பிரதிநிதித்துவமும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஒன்றும் பொதுசன ஐக்கிய முன்னணி ஒரு பிரதிநிதித்துவத்தினையும் பெற்றன.ஆனால் 2000ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலைத் தமிழர்கள் பலத்த அதிர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் ஆளாக்கப்பட்டனர்.அத் தேர்தலில் போட்டியிட்ட பொதுசன ஐக்கிய முன்னணி 53860 வாக்குகளினைப் பெற்று 3 ஆசனங்களினையும் ஐக்கிய தேசியக் கட்சி 46700 வாக்குகளினைப் பெற்று ஒரு ஆசனத்தினையும் பெற்றுக்கொள்ளும் போது தமிழர் விடுதலைக் கூட்டணி வெறுமனே 14090 வாக்குகளினைப் பெற்று தமிழ் மக்கள் சார்பாக ஒரு பிரதிநிதித்துவத்தினைக் கூடத் தக்க வைக்க முடியாத நிலைக்கு பலவீனப்படுத்தப்பட்டது.இத் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக ஒரு பிரதிநிதித்துவத்தினை தமிழர் விடுதலைக் கூட்டணி பெற வேண்டின் அக் கட்சி ஆகக் குறைந்தது 20579 வாக்குகளினைப் பெற்றிருக்க வேண்டும்.ஆனால் அக் கட்சி பெற்றிருந்ததோ 14090 வாக்குகள். அதாவது 6489 வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்தது.இதற்கு காரணமாக அமைந்தது சிங்களக் கட்சிகளோ முஸ்லீம் மக்களின் கட்சிகளோ அல்ல. தமிழ்க் கட்சிகள் தான்.2000ம் ஆண்டு தேர்தலில் திருகோணமலையில் போட்டியிட்ட ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி 4564 வாக்குகளினையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி 3748 வாக்குகளினையும் தம் பங்குக்கு பிரித்துக் கொண்டன.இவ் வாக்குகளும் தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்ற வாக்குகளுடன் இணைந்திருந்தால் நிச்சயம் அத் தேர்தலில் தமிழர்களின் வாக்குப் பலம் 22362 ஆக அதிகரித்திருக்கும். தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் அன்று காப்பாற்றப்பட்டிருக்கும்.தமிழ் மக்களின் தேசிய அடையாளத்தினைப் பேணுவதிலும் அதனைத் தக்கவைப்பதிலும் திருகோணமலைக்கு இருக்கும் முக்கியத்துவத்தினை விட கட்சிக்கான குறுங் கால நன்மைகள் முன்னிலைப்படுத்தப்பட்டதும், திருகோணமலையிலிருந்து தமிழர்களினை அந்நியப்படுத்துவதில் பௌத்த சிங்கள தேசியவாதிகள் கொண்டிருக்கும் திட்டத்தினை தெளிவாகப் புரிந்து கொள்ள மறுப்பதும், தமிழர்களின் எதிர்காலம் பற்றிய தூர நோக்கற்ற தன்மையுமே அன்றைய தோல்விக்கு காரணமாகும்.04.2010ம் ஆண்டுத் தேர்தல் பற்றி நோக்கும் போது சில விடயங்களினை கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.திருகோணமலையில் யார் இந்த இரண்டு அல்லது எந்த கட்சி அல்லது எந்த சமூகம் இந்த இரண்டு பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்ளுதல் என்ற விடயத்தில் எப்பொழுதும் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் தான் போட்டி நிலவுகின்றது.தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் எப்பொழுதும் அந்த வாக்குகளை மற்றொருவருக்குப் பிரிப்பதில் போட்டி நிகழவில்லை. தமிழ் மக்கள் தமிழ் கட்சிகளுக்கும் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் கட்சிகளுக்கும் வழங்குவது தான் சாதாரணமான வழக்கம்.ஆனால் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் மக்களுக்குள் பிரிந்து கொண்டு போவதும் தமிழ் மக்கள் தமிழ் மக்களுக்குள் பிரிந்து கொண்டு போவதும் தான் இந்த இரண்டு கட்சிகளையும் எபோதும் பலவீனப்படுத்தும் விடயமாக இருந்துள்ளது.கடந்த தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் போட்டி மிக வலுவாக இருந்திருக்கின்றது.சுமார் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 65955 வாக்குகளை பெற்றிருந்த போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 65157 வாக்குகளை பெற்றிருந்தது.எனவே இந்த போட்டி எப்போதும் மிக இறுக்கமாக இருந்தது. ஒரு சில ஆயிரம் வாக்குகள் தான் இந்த ஆகக் கூடிய வாக்குகளை எந்த கட்சி பெறும் என்பதைத் தீர்மானிக்கக் கூடிய விடயமாக தமிழ் அரசியல் கட்சிக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிக்கும் இடையில் இருந்திருக்கின்றது.இம் முறை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தங்களுக்குள் ஒரு புரிந்துணர்வை அடைந்துள்ளார்கள்.எனவே இது வெறும் ஏனையோரின் வாக்குகளை பிரிப்பது சம்பந்தமாக எந்த வித அக்கறையும் அல்லது முயற்சியும் எடுக்க மாட்டார்கள்.ஆனால் இந்த இரண்டு கட்சிகளும் தங்களுடைய சமூகத்தின் வாக்குகளை அல்லது தங்கள் இனத்தின் வாக்குகளை தங்கள் கட்சிக்காக குவிப்பதில் மிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.இந்த நிலைமையில் இம்முறை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தான் தனித்துப் போட்டியிடும் போது தன்னுடைய வேட்பாளர் பட்டியலுக்குள் கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் முதன்மை வேட்பாளர் ஆக இருந்திருந்த வேட்பாளர் மக்ருப் அவர்களை தன்னுடைய கட்சி பட்டியலுக்குள் சேர்த்துள்ளது.எனவே கடந்த முறை திரு மக்ருப் அவர்களுக்கு கிடைத்திருக்கக் கூடிய அத்துணை வாக்குகளும் இந்த முறை இணைந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு போகும்.கடந்த முறை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 15693 வாக்குகளை பெற்றிருந்தது.அந்த நிலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் சிங்கள வாக்குகளை கணித்தால் குறைந்தது 2000 அல்லது 4000 வாக்குகளாவது நிச்சயமாக மக்ருப்பினுடைய தனிப்பட்ட செல்வாக்கை அடிப்படையாக கொண்ட முஸ்லிம் மக்களுடைய வாக்குகளாக இருக்கும்.இது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசினுடைய வாக்கு பலத்தை இன்னும் மேலதிகமாக அதிகரிக்கக் கூடிய வாய்ப்பாக இருக்கும்.2004ம் ஆண்டு வாக்காளர் தொகைக்கும் 2010ம் ஆண்டு வாக்காளர் தொகைக்கும் இடையில் ஏற்பட்ட மாற்றங்கள் முக்கியமானவை.2004ம் ஆண்டில் 74869 ஆக காணப்பட்ட மூதூர்தொகுதியின் பதியப்பட்ட வாக்காளர் தொகை 2010ம் ஆண்டில் 85401 ஆக அதிகரித்துள்ளது.அதே போன்று 2004ம் ஆண்டில் 63161 ஆக காணப்பட்ட சேருவில தொகுதியின் பதியப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 2010இல் 69047 ஆக அதிகரித்துள்ளது. இதே வேளை 2004ல் 86277 ஆகக் காணப்பட்ட பதியப்பட்ட வாக்காளர் தொகை 2010ல் 86685ஆக காணப்படுகின்றது.முஸ்லீம் மக்களினை பெரும்பான்மையாக கொண்ட மூதூர் தொகுதியில் ஆறு வருடங்களில் சுமார் 10000 வாக்குகள் அதிகரிப்பது புரிந்து கொள்ளக் கூடியதே. இம்மாற்றம் முஸ்லீம் மக்களுக்கு மிகச் சாதகமானது.சிங்கள மக்களினைப் பெரும்பான்மையாக கொண்ட சேருவில தொகுதியிலும் வாக்காளர் எண்ணிக்கையில் காணப்பட்டுள்ள சுமார் 6000 அதிகரிப்பு ஏற்றுக்கொள்ளப்படலாம்.அது சிங்கள மக்களுக்கும் சாதகமானது.ஆனால் 86000 பதியப்பட்ட வாக்காளரினை 2004ம் ஆண்டில் கொண்டிருந்த தமிழ் மக்களினைப் பெரும்பான்மையாக கொண்ட திருகோணமலைத் தொகுதியில் எல்வாறு அதிகரிப்பு வெறுமனே 400 வாக்குகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.இங்கு குறைந்தது 12000 வாக்குகளால் அதிகரிப்பு நிகழ்ந்திருக்க வேண்டும். எங்கோ பாரதூரமான தவறு நிகழ்த்தப்பட்டுள்ளது.மூதூர் தொகுதியின் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் 2004ம் ஆண்டின் பின் பாரிய இடப்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள் எனினும் முஸ்லீம் மக்கள் சிரமங்கள் மத்தியில் தங்கள் சொந்த இடங்களுக்கு மீளத் திரும்பியுள்ளனர்.ஆனால் தமிழ் மக்களின் வாழ்விடங்கள் உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்தினால் முடக்கப்பட்டிருப்பதனால் கணிசமான மக்கள் திருகோணமலைக்கு வெளியே குறிப்பாக மட்டக்களப்பில் அகதி வாழ்க்கை வாழ்கின்றனர்.இதுவும் திருகோணமலையினதும் மூதூர் தொகுதியினதும் தமிழ் மக்கள் சார்பான வாக்குப் பலத்தினைப் பாதிக்கும் காரணிகளாகும்.இத்தகைய பின்னணியில் 2010ம் ஆண்டுத் தேர்தல் வந்துள்ளது. இத்தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரினதும் வாக்குகள் ஒரு கூடைக்குள் சேகரிக்கப்பட வேண்டும்.ஒற்றை வாக்கினைக் கூட இழப்பதற்கோ சிதறவிடுவதற்கோ சோம்பலில் முடங்கிக் கிடப்பதற்கோ தமிழினம் அனுமதிக்குமானால் அதன் விளைவு மிகவும் பாரதூரமானதாகவும் வரலாற்றுத் தவறாகவுமே இருக்கும்.-திருமலை நடராசன்-





ஈழ விடுத‌லைப் போராட்டம் :பாதகத்தை சாதகமாக்கிய ஜெயவர்த்தனா!


ஆபரேஷன் லிபரேஷன்’ வெற்றியானது சிங்களவர்களைச் சந்தேக மனநிலையிலிருந்து விலக்கி, புளகாங்கித நிலைக்கு ஆளாக்கியது. செஞ்சிலுவைச் சங்கத்தினரை ஏற்றி வந்த இந்திய மீன்பிடிக் கப்பல்கள் சாதுவாகத் திரும்பிச் சென்றபோது சிங்களவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தையே அடைந்தனர். மூத்த அரசியல்வாதிகளால் விடப்பட்ட வீரதீர அறிக்கைகளும், பத்திரிகைப் பத்தி, எழுத்தாளரின் புகழ்ச்சிகளும் அன்றைய நாள்களை ஆட்சி கொண்டிருந்தன.
ப.சிதம்பரம், ஜெயவர்த்தனா
இந்தியா விமானத்திலிருந்து நிவாரணப் பொட்டலங்களைப் போட்டதுடன், சிங்கள மக்களின் புத்துணர்ச்சி பெற்ற சந்தோஷம் மிக வெறுப்புக் கலந்த கடுங்கோபமாக மாறியது. (முறிந்த பனை-பக்.158). சிங்கள மக்களும் செய்வதறியாது திகைத்தனர். உலகத்தின் பார்வையில் இலங்கைக்கு எவ்வளவு கீழிறக்கம் ஏற்பட்டிருக்கிறது எனக் கண்டு அதிர்ந்தனர்.
இந்நிலையில், 1987 ஜூலை 19-ஆம் தேதியிட்ட, இலங்கை அரசின் ஆதரவு மற்றும் யதார்த்த நிலையைத் துணிந்து எழுதும் பத்திரிகை எனப் பெயரெடுத்த “வீக்எண்ட்’ சில மனப் பதிவுகளை வெளியிட்டது. அதுபோன்ற ஒரு கட்டுரையில் குமுதினி ஹெட்டியாராட்சி என்பவர் எழுதிய ஒரு கட்டுரை சிங்களவர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைக்குத் தலைப்பு “நான்காண்டுகளுக்குப் பின்னும் அதே நிலையா?’ என்பதாகும். கட்டுரையின் முக்கிய பகுதிகளைப் பார்க்கலாம்:
“”நான், பிரிட்டன் சென்றபோது, பலரைச் சந்தித்து, எமது இனப்பிரச்னை குறித்து கலந்துரையாடும் சந்தர்ப்பத்தைப் பெற்றேன். என் முன்னே இருந்த பலர், பல்வேறு தேசிய இனப் பிரச்னைகள் பற்றிய தெளிவான கருத்துக்கொண்டவர்கள் ஆவர். அவர்களில் ஒருவர் சொன்னார், நாம் ராணுவத் தீர்வுக்கும் அரசியல் தீர்வுக்குமிடையே ஊசலாடுகிறோம் என்று. அவர்களது பொதுவான கருத்து அதுவே ஆகும்.
ஸ்ரீலங்கா, இனப்பிரச்னையை நிரந்தரமாகத் தீர்ப்பதில் உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளதா என அவர்கள் என்னிடம் பல சந்தர்ப்பங்களில் வினவினார்கள். விடாப்பிடியான போக்கு இலங்கையில் இனப் பிரச்னையை ஒருபோதும் தீர்க்காது என்றும், இனப் பிரச்னைக்குத் தீர்வு அரசியல் தீர்வே என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.
இன்றைய நிலையில், “ஆபரேஷன் லிபரேஷன்’ பிழையான அறிவுறுத்தலால் நடத்தப்பட்ட முயற்சியென அவர்களால் கருதப்பட்டது. பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு எல்லோரும் விரும்பும் சமாதான முறைகளைக் கையாண்டு இழந்துபோன சில கெüரவங்களை மீட்டுப் பெறுவதில் ஸ்ரீலங்கா அரசு அக்கறை கொள்ளவேண்டும். இந்த அரசியல் தீர்வு என்கிற முடிவு உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தளவில் இருக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.
ஆக்ஸ்போர்டு நகரில் எனக்குத் தெரிந்த குடும்பம், பிபிசியிலே வெளிவந்த போர்க்காட்சிகளைப் பார்த்த பாதிப்பில், “எவ்வாறு சிங்கள அரசு இவ்வளவு மிருகத்தனமாக நடந்துகொள்ளமுடியும்?’ என்று என்னைக் கேட்டது. அந்த வீட்டுத்தலைவர் வடக்கிலே குண்டுமழை பொழிவதாகக் கூறினார். பிபிசி செய்தியாளர், “தீக்காயங்களுடன் காட்டப்பட்ட குழந்தைகள் பற்றி என்ன கூறுகிறீர்?’ எனக் கேட்டார்.
உங்கள் நாட்டிலே வியத்நாம் பாணி போர் உத்திகளைக் கையாளுமாறு உத்தரவிட்டவர் யார்? இதற்கு யார் பொறுப்பு? இரவு உணவுக்காக பல நாட்டுப் பத்திரிகையாளர்களுடன் உணவருந்த என்னையும் அழைத்திருந்த நிலையில், அவர்கள் முன்னிலையில் என்னைக் குடைந்து எடுத்தார்.
இது கேட்ட ஒரு பத்திரிகையாளர், “இலங்கை ஒரு பூலோக சொர்க்கம். மற்ற எல்லாம் நல்லவையாக இருக்க, மனிதன் மட்டுமே கெட்டவனாக இருக்கிறான் என்பதற்கு ஸ்ரீலங்கா ராணுவம் நடந்துகொள்ளும் விதமே சான்றாக உள்ளது’ என்றார்.
நாம் விரைவான-அமைதியான நல்ல தீர்வுக்கு வருவது அவசியமானாதும் முக்கியமானதும் ஆகும்; இதற்குத் தேவைப்படுவது நேர்மையும் நம்பிக்கையும்தான்” என்ற குமுதினியின் விருப்பம், ஸ்ரீலங்கா அரசுத் தரப்பில் பல தாக்கத்தை ஏற்படுத்தியது.
விமானத்திலிருந்து உணவுப் பொட்டலங்களை யாழ் பகுதிகளில் போட்டது முதல், இந்தியா, இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கிற முக்கிய நாடாயிற்று. இந்த விஷயத்தை ஜெயவர்த்தனா விரும்பினார் இல்லை. ஆனால், இந்தப்போக்கை அவரால் தடுக்கமுடியவில்லை.
காரணம், ராணுவத்தின் ஒரு பிரிவினர் ஸ்ரீமாவோ காலத்தில் பணியமர்த்தப்பட்டனர் என்ற காரணத்தால், அவர்கள் ஜெயவர்த்தனா மீது எப்போதுமே கோபத்தில் இருந்தனர். இந்நிலையில், யாழில் இந்தியா உணவுப் பொட்டலங்களைப் போட்டதை இலங்கை கடுமையாகக் கண்டிக்கவேண்டும் என்றும், ஏதேனும் ஒரு தாக்குதலை நடத்தவேண்டும் என்று அவர்கள் குமுறினார்கள். அந்தப் பிரிவினர் ராணுவத் தலைமைக்குக் கட்டுப்படாமல் புரட்சியில் இறங்கிவிடுவார்களோ என்றும் ஜெயவர்த்தனா பயந்தார்.
புத்த பிக்குகளும், ஜேவிபியினரும் கையாலாகாத அரசு என்று விமர்சனம் செய்தனர். இதற்கு முன்பே அங்கு வன்முறை தீவிரமான நிலையில், இந்தியாவின் நடவடிக்கையும் சேர்ந்தது. இலங்கையின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட வன்முறைகளை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. எதிர்க்கட்சிகளோ அரசைக் கலைத்து உடனே தேர்தலை நடத்த வலியுறுத்தின. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி என்னும் நிலையைப் பெறவேண்டிய நெருக்கடியும் அவருக்கு ஏற்பட்டது.
இதுபோன்ற சூழ்நிலையில் இந்தியாவுடன் ஜெயவர்த்தனாவால் முரண்பட முடியவில்லை. காரணம், இந்திய உணவுப் பொட்டலங்கள் போட்டதை “அத்துமீறல்’ என்று குரல்கொடுத்தும் நட்பு நாடுகள்கூட வாய்திறக்காததால் மிகுந்த வேதனைக்கும் வெறுப்புக்கும் அவர் ஆளானார்.
அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் தப்பிக்கவேண்டுமானால், இந்தியாவின் பங்கை ஏற்கவேண்டும் என்று முடிவு எடுத்ததுடன், எது பாதகமானதோ, அதைப் பற்றிக்கொண்டு அதிலிருந்து சாதகம் பெறத் திட்டம் தீட்டினார்.
“ராணுவத்தின் மூலமே தீர்வு என்றும், ஒன்று புலிகள் வெற்றிபெறவேண்டும் இல்லையென்றால் அரசாங்கம் வெற்றிபெற வேண்டும். இறுதிவரை போர்தான் – சமாதானம் இல்லை’ என்று அடம்பிடித்த ஜெயவர்த்தனா ஏதேனும் ஓர் ஒப்பந்தத்துக்காகத் துடித்தார். “இறுதிவரைப் போர்’ என்கிற வார்த்தைப் பிரயோகம் இலங்கையின் இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் எழுதிய, “அசைன்மெண்ட் கொழும்பு’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகமாகும்.
இந்தக் குழப்பமான நிலையில் யாழ்த்தளபதி கிட்டு வாகனத்தின் மீது குண்டுவீசப்பட்டது. இதில் படுகாயமுற்ற கிட்டு, இறுதியில் தனது கால்களில் ஒன்றை இழந்தார். மருத்துவத்துக்காக அவரைத் தமிழகத்துக்கு அழைத்து வந்தனர்.
ஜெயவர்த்தனா தனக்குப் பிடிக்காத வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்பை ஏற்றுக்கொண்டார். இந்தியா-இலங்கை என இரு அரசுகள் மட்டத்தில் மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதிகாரிகள் கொழும்புவுக்கும் தில்லிக்குமாகப் பறந்தனர்.
இந்தப் பிரச்னைகளில் சம்பந்தப்பட்ட தமிழர்களின் பிரதிநிதியான விடுதலைப் புலிகள் அமைப்பை எந்தவிதத்திலும் கலந்து ஆலோசிக்கவில்லை.
இந்த நிலையில், அன்டன் பாலசிங்கத்தை தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சந்திக்க விரும்புவதாகக் கூறி அவரைக் காவலர்கள் அழைத்துச் சென்றனர்.
அங்கே முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் இருந்தார். புன்முறுவலுடன் எம்.ஜி.ஆர். வரவேற்று பாலசிங்கத்தை அமரச் சொன்னார்.
அவர் உட்கார்ந்ததுமே ப.சிதம்பரம் கடுமையாகப் பேசினார் என்றும், விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் நன்றியுள்ளவர்கள்தானா என்றும், இந்தியா மற்றும் எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் குறித்தும், இலங்கை இனப்பிரச்னைத் தீர இந்தியா எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் குறிப்பிட்ட அவர், “இப்பொழுது பிரபாகரன் எங்கே?
திடீரென மாயமாக மறைந்துவிட்டார். யாருக்கும் தெரிவிக்காமல் யாழ்ப்பாணம் சென்றுவிட்டாராமே?
எங்களுக்குத்தான் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டு அரசுக்காவது, முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்காவது தெரிவித்திருக்கலாமே?’
என்று கேட்டதாகவும் பாலசிங்கம் தான் எழுதிய “விடுதலை’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பாலசிங்கம் மேலும் குறிப்பிடுவதாவது:
“”எண்பத்துமூன்றாம் ஆண்டின் இறுதியிலிருந்து பல ஆண்டுகள் பிரபாகரன் இந்தியாவில் கழித்துவிட்டார். அவர் இங்கு தஞ்சம் கேட்டு வரவில்லை. ராணுவப் பயிற்சித்திட்டம் சம்பந்தமாக இந்திய அரசின் அழைப்பின் பேரில் அவர் இங்கு வந்தார். வந்த இடத்தில் பல கசப்பான அனுபவங்களையும் பெற்றார். இப்பொழுது போராட்டக்களத்துக்குச் செல்லவேண்டிய காலமும் வரலாற்றுத் தேவையும் அவருக்கு ஏற்பட்டுவிட்டது.
தமிழீழக் களத்திலிருந்துதான் எமது மக்களின் உரிமைப் போராட்டத்தை அவர் முன்னெடுக்க விரும்புகிறார். அதனால்தான் அவர் தாயகம் செல்லவேண்டியதாயிற்று.
சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் செல்வது மிகவும் ஆபத்தான பயணம். தரைப் பாதை மட்டுமன்றி, கடல் கடந்தும் செல்லவேண்டும். பிரபாகரனுக்குப் பல எதிரிகள் இருக்கிறார்கள். அவருக்கு விரோதமாகப் பல சக்திகள் செயல்படுகின்றன. ஏனைய போராளி அமைப்புகளும் அவரைப் பழிதீர்க்க வெறிகொண்டு அலைகின்றன. இப்படியான சூழ்நிலையில் பிரபாகரனின் பாதுகாப்பு கருதியே அவரது பயணத்தை ரகசியமாக வைத்திருக்க எமது இயக்கம் முடிவெடுத்தது” இப்படியான ஒரு விளக்கம் கொடுத்தேன்.
அமைச்சர் சிதம்பரம் என்னை விட்டபாடில்லை. “”சரி, பிரபாகரன்தான் பாதுகாப்புக் கருதி அவசரமாக, ரகசியமாக யாழ்ப்பாணம் போய்விட்டார். நீங்களாவது முதலமைச்சருக்கு அத்தகவலைத் தெரிவித்திருக்கலாம் அல்லவா?” என்று கூறி என்னை மடக்க முயன்றார்.
முதலமைச்சரும் என்னைக் கேள்விக்குறியுடன் நோக்கினார்.
முதலமைச்சரைப் பார்த்து சொன்னேன், “சார்! பிரபாகரன் யாழ்ப்பாணம் சென்றது உண்மையில் எனக்கும் தெரியாது. அவர் எனக்கும்கூடத் தெரியப்படுத்தவில்லை. மிகவும் ரகசியமான காரியங்களை ரகசியமாகச் செய்து முடிப்பதுதான் எமது இயக்கத்தின் மரபு. நேற்றுதான் எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து தகவல் அனுப்பியிருந்தார், பிரபாகரன். உங்களுக்கு அறிவிப்பதற்கு முன்னதாக நீங்கள் என்னை இங்கு அழைத்துவந்துவிட்டீர்கள்’ என்றேன்.
முதலமைச்சருக்கு நிலைமை புரிந்தது. பிரபாகரன் தாயகம் திரும்பியதன் அவசியத்தை அவர் உணர்ந்துகொண்டார். அந்தப் பயணம் குறித்து ரகசியம் பேணப்பட்டதையும் அவர் புரிந்துகொண்டார்.
“”பிரபாகரன் செüக்கியமாக இருக்கிறாரா?” என்று கேட்டார். தொடர்ந்து, “அவரைப் பாதுகாப்பாக இருக்கச்சொல்லுங்கள்; நான் விசாரித்ததாகவும் சொல்லுங்கள்’ என்றார்.

பிரபாகரன் விடுத்த வேண்டுகோள்
இப் பிரச்னைகளுக்கு நடுவே, 25-9-1987 அன்று பிரபாகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் பிற இயக்கங்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏற்று இணைய வேண்டும் என்று அதில் வேண்டுகோள் விடுத்தார். அதன் முக்கியப் பகுதி வருமாறு:
“”அன்றும் சரி, இன்றும் சரி இயக்க முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் எந்தச் சக்தி பின்னணியில் இயங்குகிறது என்பதை நான் பகிரங்கமாகவே அம்பலப்படுத்தியுள்ளேன்.
தமிழீழ லட்சியத்தைக் கைவிட்டு, தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு, அந்நிய அரசுச் சக்தி ஒன்றிற்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் துரோகத் தலைமைகளைத் தூக்கியெறிந்துவிட்டு புலிகளோடு வந்து சேருங்கள்;
புலிகளாக மாறுங்கள்;
புலிகளின் லட்சியப் போராட்டத்தில் அணி திரளுங்கள்.
நீங்கள் எந்த லட்சியத்துக்காக இந்த அமைப்புகளிடம் சேர்ந்தீர்களோ அந்த லட்சியப்பாதையில் எமது விடுதலை இயக்கமே வீறுநடை போடுகிறது.
ஆகவே, தமிழீழ லட்சியப்பற்றுடைய போராளிகள் யாவரையும் நாம் அரவணைத்துக் கொள்ளத்தயார். உங்களை எமது அணியில் சேர்த்துப் போராளிகளாக கெüரவிக்கத் தயார். எமது தோழர்களாகப் பராமரிக்கத் தயார்”
என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
பிரபாகரனின் வேண்டுகோள் பிற இயக்க உறுப்பினர்களைச் சிந்திக்க வைத்தது. சிலர் துணிந்து இயக்கத்தில் சேர்ந்தனர். பலர் இயக்கத் தலைமை என்ன செய்யுமோ என்று பயந்து புலிகளுடனும் சேராமல், தாங்கள் இருந்த இயக்கத்திலும் இருக்க முடியாமல் வெளியேறினார்கள்.
இந்நிலையில், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்துடனான ஒரு மோதலில் சுரேஷ் என்பவர் விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, விடுதலைப் புலிகளை அழிக்கும் திட்டம் ஒன்று அவ்வியக்கத்துக்கு இருப்பதாகத் தெரியவந்ததையொட்டி, அந்த இயக்கத்தையும், “பிளாட்’ இயக்கத்தையும், தமிழீழ ராணுவத்தையும் தடை செய்வதாக 14-12-1987 அன்று புலிகள் இயக்கம் அறிவித்தது.
இந்த அறிவிப்பையொட்டி, “பிளாட்’ இயக்கமும் தமிழீழ ராணுவமும் தனது இயக்க வேலைகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.ஈ.பி.ஆர்.எல்.எஃப்.க்கும் புலிகளுக்கும் அவ்வப்போது மோதல்கள் எழுந்து கொண்டே இருந்தன. ஆக, ஈ.என்.எல்.எஃப். என்கிற அமைப்பு திம்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரே ஆண்டில் சிதைந்துவிட்டது.
பிரபாகரனின் தலைமையில் இயங்கும் விடுதலைப் புலிகள் எப்போதும் சிங்களவர்களிடம் விரோதம் பாராட்டியதில்லை. அப்பாவி சிங்கள மக்களைத் தாக்குவதில்லை என்கிற கொள்கையை அவர்கள் கடைப்பிடித்து வந்தார்கள்.
தமிழர் பகுதிகளில் அமைந்திருந்த ராணுவ முகாம்களில் சிங்களச் சிப்பாய்கள் பலமாதம் அடைபட்டுக்கிடந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உண்டான குடிநீர்த் தேவைகள், உணவு சமைக்க விறகு முதலியவற்றை அவ்வீரர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப அளித்து உதவியிருக்கிறார்கள்.
இலங்கை மக்கள் கட்சித் தலைவரான விஜயகுமாரணதுங்கா யாழ்ப்பாணத்துக்கு இருமுறை வந்தார். முதல் தடவை யாழ் கோட்டையில் அடைபட்டுக்கிடந்த சிங்கள ராணுவக் கைதிகளைப் பார்க்க வந்தார். யாழ் தளபதியாக இருந்த கிட்டு அவரை அனுமதித்தார். சிங்களக் கைதிகளுடன் தாராளமாகப் பேச அவர் அனுமதிக்கப்பட்டார்.
அதேபோன்று இரண்டாவது முறையும் சில புத்தபிக்குகள், பத்திரிகையாளர்கள் சகிதம் அவர் வர விரும்பினார். சிங்கள அரசு அவர்கள் யாழ்ப்பாணம் செல்லத் தடை விதித்ததே தவிர, விடுதலைப் புலிகள் அமைப்பு அவர்களை வரவேற்றது.
அவர்கள் மத்தியில் யாழ்ப்பாணத்தின் தளபதி கிட்டு பேசும்போது, “”நாங்கள் எங்களது உரிமைக்காகவே போராடுகிறோம். எந்த சிங்களப் பகுதியையும் நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை. எங்களது இயக்க வீரர்கள் தாமாக முன்வந்து உயிரைத் தியாகம் செய்கிறார்கள்.
ஆனால் ராணுவத்தினர் தங்கள் உழைப்புக்காகச் சம்பளம் பெறுகிறார்கள். அதற்காகவே ராணுவத்தில் அவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். போர் நடவடிக்கைகளில் வீரர்கள் கைது செய்யப்படுவது நடக்கக்கூடியதுதான். யாழில், மன்னாரில் கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்களை நிபந்தனை எதுவுமின்றி நாங்கள் விடுவித்தோம்.
ஆனால் எமது உறுப்பினர்கள் 19 பேரும், ஆயிரக்கணக்கான தமிழர்களும் இன்று சிறையில் வாடுகிறார்கள். அவர்களில் இரு வீரர்களை விடுவிக்கும்படி கேட்கிறோம். யுத்தக் கைதிகளைப் பரிமாற்றம் செய்வது நடைமுறையில் உள்ளது. ராணுவத்தில் ஒவ்வொரு சிப்பாயும் மரியாதை இழக்கின்றனர். முன்பு விஜயகுமாரணதுங்கா இங்கு வந்த பின்னர்தான் தெற்கில் உள்ள மக்களுக்கும் உலகுக்கும் இந்தப் பிரச்னை தெரியவந்தது. நாங்கள் குருமாரையும் உங்களையும் கேட்பது என்னவென்றால், நீங்கள் அரசை நிர்ப்பந்தித்து வீரர்களை விடுவிக்கச் செய்யுங்கள்” என்று கூறினார்.
இதற்குப் பதிலளித்த விஜயகுமாரணதுங்கா, “”தமிழ்ப் போராளிகளின் மீது நம்பிக்கை வைத்து, வடக்கிலும் தெற்கிலும் இருக்கக்கூடிய உரிமை மறுக்கப்பட்ட மக்களின் பொதுப்போராட்டத்தில் வடக்கு-தெற்கு பாலம் ஒன்றை அமைப்பதே எமது பிரதான நோக்கம்” என்றார்.
இதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இரு சிங்களக் கைதிகளான லெப்டினன்ட் சந்திரஸ்ரீ, பாந்தரா ஆகிய இருவரையும் டிசம்பர் 19, 1986, காலை 8-10 மணிக்கு சிங்கள கேப்டன் கொத்லவாலாவிடம் ஒப்படைத்தனர். பதிலுக்கு சிங்களத் தரப்பில் மேஜர் அருணா மற்றும் ஒரு போராளி ஆகிய இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிகழ்ச்சி யாழ் கோட்டைக்கு வெளியே நடைபெற்றது. இதில் கையளிக்கப்பட்ட மேஜர் அருணா, கடற்படைத்தாக்குதலில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, அவரது மரணத்துக்கு இரங்கல் மற்றும் வேலைநிறுத்தம் எல்லாம் நடைபெற்று முடிந்த நிலையில் அவர் உயிருடன் இருந்தது தெரியவந்தது. அவரது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில் அவரது முகமும் தீக்காயங்கள் ஏற்பட்டு கருகிய நிலையில் காணப்பட்டது.
இந்த நிலையில் அவர் கடற்படையினரால் பிடிக்கப்பட்டபோது, அவர் தன்னைப் படகோட்டி என்று கூறியதுடன், தனது பெயர் செல்வசாமி செல்வகுமார் என்றும் தெரிவித்திருந்தார். இவ்வகையாகப் பிடிபட்ட அனைவரும் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டனர். பல வாரங்கள் கழித்து அருணா இறக்கவில்லை என்று தெரியவந்ததும், கைதிகள் பரிமாற்றத்தில் எந்தக் கைதியை விடுவிக்க வேண்டும் என்று பேசப்பட்டபோது “செல்வகுமார்’ என்று தெரிவிக்கப்பட்டார். அருணா உயிருடன் இருக்கிறார்; அவர் பெயர்தான் செல்வகுமார் எனத் தெரியவந்தால் சிங்களப்படை மறுக்கும் என்று தெரிந்தே இந்தப் பரிவர்த்தனை நடைபெற்றது.
அதே போன்று விடுதலைப் புலிகள் தரப்பில் கையளிக்கப்பட்ட லெப்டினன்ட் சந்திரஸ்ரீயும் மன்னாரில் நடைபெற்ற தாக்குதலில் இறந்துபோனதாக முன்பே அறிவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிங்களக் கைதிகளை அழைத்துச் செல்ல பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலியே வந்திருந்தார். (ஆதாரம்: பழ.நெடுமாறன் எழுதிய பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்).
சிங்களவர்களின் போக்கு எப்போதும் தமிழருக்கு எதிராகவே இருந்தது. இதுகுறித்து பிரபாகரன் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கைத் தீவு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த காலத்தில் எல்லாம் எங்கள் பிரச்னையைத் தீர்ப்பதற்கு அக்கறை காட்டவில்லை.
எங்களின் ஆயுதப் போராட்டம் விரிவடைந்ததே ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஆட்சிக்காலமான 1972-ஆம் ஆண்டில்தான். அப்போது அவர் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினார். அந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஏற்கெனவே தமிழர்கள் அனுபவித்த கொஞ்சநஞ்ச உரிமைகளும் பறிக்கப்பட்டன.இடதுசாரிகளை நாங்கள் நம்பலாம் என்றால் அதற்கும் சாத்தியமில்லாது போயிற்று.
1972-ஆம் ஆண்டின் புதிய அரசியலமைப்புச் சட்டத்துக்கு அவர்கள் முட்டுக் கொடுத்தனர். லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் கொல்வின் ஆர்.டி.சில்வா, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பீட்டர் கெனமன் இருவரும் ஸ்ரீமாவோ ஆட்சியில், கூட்டணி அரசின் அங்கமாக இருந்தபோதுதான் இந்த அநியாயம் நடந்தது. இந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவரே பழம்பெரும் இடதுசாரியான கொல்வின் ஆர்.டி.சில்வாதான். இந்த அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஒப்புதல் தரமாட்டோம் என்று தமிழர் பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்தார்கள். இதற்கு ஒத்துழைத்த ஒரு சில தமிழ்த் துரோகிகளும் இருக்கத்தான் செய்தார்கள்.
தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர் மத்தியில் ஒரு சிங்களவர் அல்லது ஒரு கட்சி ஆதரவு நிலை எடுத்தால், அங்கே அந்தக் கட்சியும் அவரும் இயங்க முடியாது என்று காட்டினார்கள். இதற்கு விஜயகுமாரணதுங்காவின் கட்சியே சாட்சியாக இருக்கிறது. அவர்கள் மேடையிட்டுப் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. விஜயகுமாரணதுங்காவே சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிலையில் இதர சிங்கள அரசியல் கட்சிகளை நாம் மட்டும் எப்படி நம்பமுடியும்’ என்றார். (இந்து நாளிதழ் பேட்டி, 4,5 செப்டம்பர் 1986).
கேள்வி :எதிர்காலத் தமிழீழத்தில், “ஒரு கட்சி ஆட்சிதான் இருக்கும். சர்வாதிகாரம் தலைதூக்கும்’ என்றெல்லாம் கூறி உங்களது இயக்கத்தை ஆதரிக்கலாமா என்று ஒரு பிரசாரம் மேற்கொள்ளப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பிரபாகரன் :“எமது மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதைப் பொறுத்து எமது அரசு அமையும். மக்களுக்கு விருப்பமான கட்சியை அவர்கள் தேர்வு செய்வார்கள். இந்தியாவில் மிக நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சிதானே ஆட்சி செய்தது. போராட்டத்தில் பங்குகொள்ளாதவர்களே இதுபோன்ற விமர்சனங்களை வைக்கிறார்கள். விடுதலைப் போராட்டத்தில் தீவிரப் பங்களிப்பு எதுவும் செய்யாது, அதே நேரத்தில் களத்தில் விலகி நின்றுகொண்டு, தலைமைப் பதவியை அடையக் கனவு காணும் சிலரின் மனதிலேயே இந்த அச்ச உணர்வு தலைதூக்கியுள்ளன.’
கேள்வி :தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் சித்தாந்தம் என்ன?
பிரபாகரன் : சோசலிசமும் – தமிழீழமும். இவை குறிக்கோள், அடிப்படைக் கோட்பாடு.
கேள்வி :தமிழீழ விடுதலைப் புலிகள், டெலோ இரண்டும் தேசியவாதக் கோட்பாட்டில் இயங்கும் கட்சிகள் என்றும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் இரண்டும்தான் சோசலிச சித்தாந்தத்தில் பிறந்தவை என்றும் வேறுபாடு உள்ளதே?
பிரபாகரன் : சித்தாந்த ரீதியில் எல்லா இயக்கங்களும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதுபோலத் தோன்றும். ஆனால், நடைமுறையில்தான் அதன் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள முடியும். சோசலிசம் என்பது இன்று பல ரகங்களைக் கொண்டதாக இருக்கிறது. சோசலிசத்திற்கு ஒருவர் அளிக்கும் விளக்கத்திலிருந்தும் அதை நடைமுறைப்படுத்தும் தன்மையிலிருந்தும் அதன் வேறுபாடுகள் நாம் காணக்கூடியதாக இருக்கிறது.
இன்று எல்லோரும் தம்மை ஒரு சோசலிசவாதி என்றே கூறிக்கொள்கிறார்கள். ஜெயவர்த்தனா கூட ஒரு காலத்தில் அப்படிக் கூறிக்கொண்டு, இடதுசாரி நூல்களை விற்று வாழ்க்கையை நடத்தியவர்தான். ஆக, சோசலிசம் பேசுகிற ஒருவர் அதை நடைமுறைப்படுத்தும்போதுதான், தன்மை வெளியாகும்.
எமது மக்களின் விருப்பங்களையும், நலன்களையும் முழுமையாகப் பேணும் ஓர் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தைக் கட்டியமைப்பதே எமது லட்சியம். எமது கலாசாரம், எமது பாரம்பரியம், எமது வரலாறு ஆகியவற்றுக்கு உகந்ததாக அந்தச் சமுதாய அமைப்பு அமைய வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு ஒரு கனவு உண்டு. அதனைச் செயல்படுத்தவே சிந்திக்கிறோம்; போராடுகிறோம்.
எங்கள் சமுதாயத்திட்டத்தில் பெருமுதலாளிகள் இருக்கமாட்டார்கள்; நடுத்தர வர்க்கத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பர்.
மலையகத் தமிழர் பற்றியும் கிழக்கு மாகாணம் குறித்தும் பிரபாகரன் குறிப்பிடுகையில்,
“தமிழ்த் தேசியம் என்று நாம் குறிப்பிடும்போது வடக்கு-கிழக்கு மாகாண மக்கள் மட்டுமன்றி, தென்னிலங்கையில், குறிப்பாக மலையகப் பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்துவரும் பாட்டாளி மக்களையும் நாங்கள் குறிக்கிறோம்.
எங்களது தமிழ்த் தேசிய அமைப்பில் மலையகத் தமிழர், இஸ்லாமிய, கிறிஸ்தவ, சைவ மதங்களைச் சார்ந்தவர்களும் மதச்சார்பு அற்றோருமான தமிழ் பேசும் மக்கள் அனைவரும் அடங்குவர். தமிழீழம் எனும்போது, தமிழ் மக்களின் ஒட்டுமொத்தமான அமைப்பையே குறிக்கிறோம்’(வே.பிரபாகரன்-சோசலிச தமிழீழத்தை நோக்கி – பக்.28-29/ ஆதாரம்”" பழ.நெடுமாறன்).
கேள்வி :“உங்களது இயக்க ஆட்கள் சயனைட் குப்பியைக் கழுத்தில் அணிந்திருப்பதாகக் கூறுகிறார்களே?’
பிரபாகரன் :“உண்மைதான். இயக்கத்தின் தொடக்க காலத்தில் இருந்தே இதை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இதுவே எங்களின் பலம். இதுவே எங்கள் உயிருமாகும். இந்தக் குப்பி எங்கள் கழுத்தில் இருக்கும்வரை எங்களுக்கு வெற்றி ஒன்றே குறி. அதை அடையவே தீவிரம் காட்டுவோம். அதை அடைய முடியாத நிலை வரும்போது, அந்தப் போராளி மற்றவரைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்கிற நிலையில் – அந்தக் கட்டம் வரும்போதுதான் சயனைட் குப்பியைக் கடிப்பார். இல்லையென்றால் எமக்கு உறுதுணையாக இருந்த பலரும் அவர்களது குடும்பமும் சிங்களச் சிறைகளில் சிக்க வேண்டியிருக்கும்.
எங்கள் தோழர்கள் பலர் இவ்வகையில் தியாகிகளாய் உயிர்விட்டிருக்கிறார்கள். எங்களது இயக்க ஆட்களை நீங்கள் சிறைகளில் அதிகம் பார்க்க முடியாது. எதிரிகளிடையே ஊடறுத்து முன்னேறிக்கொண்டே இருப்பவன்தான் சயனைட் போராளி’ என்றார்.


விடுதலைப் புலிகளின் பதிலடி!
யாழ் பகுதிகளில் சிங்கள ராணுவத்தின் கோட்டை போன்று செயல்பட்ட குருநகர் ராணுவ முகாம் (1984 பிப்ரவரி 24) தகர்க்கப்பட்டது. விமானப்படையினர் சுன்னாகத்திலும் தெல்லிப்பளையிலும் அப்பாவி மக்களைச் சுட்டுக்கொன்றதற்கு பதிலடியாக, அத்துமீறல் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட “கஜவாகு ரெஜிமெண்ட்’ பிரிவைச் சேர்ந்த 15 பேரை வாகனத்தில் வைத்தே, புலிகள் குண்டுவீசி அழித்தனர்.
“மக்களே மகத்தானவர்கள் – அவர்களுக்காகவே இயக்கங்களும் இயக்க நடவடிக்கைகளும்’ என்ற அரசியல் சூத்திரத்தின் அடிப்படையில் சிங்கள ராணுவத்தின் கொடுமைகளுக்குப் பதிலடி கொடுக்க மக்களையே விடுதலைப்புலிகள் தயார் செய்து தாக்குதல் நடத்திய நிகழ்ச்சி யாழ்ப்பகுதியில் முதன்முதலாக நடந்தது.
யாழ் நகரத்தில் நாகதீப-கயிலைத்தீவு யாத்திரீகர்களின் வழிபாட்டுக்கென்று புத்த விகாரையில் வழிபாடு நடத்த, இலங்கையின் தெற்குப்பகுதிகளில் இருந்தே புத்த குருமார்களை அழைத்து வந்தனர். இவர்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் யாழ்ப்பகுதி வந்து, ராணுவ ஜீப்புகளில் ஏறி, புத்தவிகாரைகளுக்கு வந்து வழிபாடு நடத்துவதைப் பார்த்து மக்கள் எரிச்சலுற்றனர்.
ஒரு நாள் யாழ் நகரில் அமைந்த புத்தவிகாரைக்குச் செல்லும் வழியெங்கும் தடைகளை ஏற்படுத்தினர். ஸ்டான்லி வீதியிலிருந்த புத்த விகாரையும் ஆஸ்பத்திரி வீதியிலிருந்த சிங்கள மகா வித்தியாலயத்தையும் மக்களே தகர்த்தனர். இவை இரண்டும் சிங்கள ராணுவத்தின் முகாம்களாகவே செயல்பட்டு வந்தன என்பதாலும், மாதாகோயில் ஒன்று தாக்கப்பட்டதாலும் மக்கள் கூடுதல் ஆத்திரத்துக்கு ஆளானார்கள். மக்கள் கடும் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் கைக்குண்டுகளையும் வீசினர். கைக்குண்டுகளை வீச, புலிகளே மக்களுக்குப் பயிற்சி அளித்தனர்.
புலிகளின் வரலாற்றில் கடுமையான காவல்கொண்ட மட்டக்களப்பு சிறைச்சாலையை உடைத்து, அங்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிர்மலா நித்தியானந்தனை மீட்டது, கடற்படையினரை, பொலிகண்டிப் பகுதியில் மோட்டார் படகில் சென்று தாக்கி ஆறுபேரைக் கொன்றது, வல்வெட்டித்துறைக்கு அருகில் நெடியநாடு என்ற இடத்தில் மூன்று கவச வண்டிகள், ஒரு டிரக், ஒரு ஜீப் சகிதம் சென்று வெறியாட்டம் போட்டுத் திரும்பிக்கொண்டிருந்த 9 கமாண்டோ படையினரைத் தாக்கி அழித்தது, மாங்குளம் அருகே ஒட்டிசுட்டான் காவல் நிலையத்தில் கொரில்லாத் தாக்குதலை அடக்குவதில் சிறப்புப் பயிற்சி பெற்ற கமாண்டோ படையினரைத் தாக்கி, காவல்நிலையத்தின் கருவூலத்திலிருந்த ஆயுதங்களைப் பறித்தெடுத்தது ஆகியவை மிகமிக முக்கியமான சம்பவங்களாகும்.
புலிகளின் ஆயுதத் தேவையை நிறைவேற்றவும், கமாண்டோ படையினரின் கொட்டத்தை அடக்கவும் புலிகளால் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
மன்னார், கரவெட்டி மேற்கு, அச்சுவேலி, திக்கம், முல்லைத்தீவு, களுவாஞ்சிக்குடி, தொண்டமானாறு-பலாலி வீதி, தெல்லிப்பளைப் பகுதிகளில் மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி சமரில் 64 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் வடபிராந்திய சிங்கள ராணுவ தளபதி பிரிகேடியர் ஆரியப்பெருமா கொல்லப்பட்டார்.
புலிகள் தரப்பில் களுவாஞ்சிக்குடி தாக்குதலில் லெப்டினன்ட் ஆர்.பாமதேவா, திக்கத்தில காப்டன் ஞானேந்திர மோகன் என்கிற ரஞ்சன்லாலா ஆகிய இருவரும் மரணமடைந்தனர்.
மேலே கூறியவையே, விடுதலைப்புலிகளின் வரலாற்றில் 1975-1984-ஆம் ஆண்டுகளுக்குள் நடைபெற்ற சம்பவங்களின் சுருக்கம் ஆகும்.
1984-1987-இல் தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தலைவர்களின் கோரிக்கைகளுக்கேற்ப, ஏராளமான அளவில் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு வந்த மக்களின் குழந்தைகள் படிப்புக்குத் தகுதி நிர்ணய வழிமுறைகளை எல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு, ஈழத் தமிழர்களுக்கு என்று தனி ஒதுக்கீடு செய்து மாணவர்கள் கல்வி கற்கவும், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற உயர்கல்வி வசதிகள் பெறுவதற்கும் ஆணை பிறப்பித்தார் எம்.ஜி.ஆர்.(எம்.ஜி.ஆரும் ஈழத்தமிழரும் – வே.தங்கநேயன்).
பின்னாளில், 27-4-1987-ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற கொடுமையைக் கண்டித்தும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவேண்டிய வரலாற்று நெருக்கடி குறித்தும் எம்.ஜி.ஆர். சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கிய பின்னர், விடுதலைப்புலிகளுக்கும், ஈரோஸýக்குமாக வழங்கிய நாலு கோடி ரூபாய்க்கான காசோலை குறித்து ஜெயவர்த்தனா அலறினார்.
அவர் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தொடர்புகொண்டு தெரிவித்த புகாரின் அடிப்படையில் விடுதலைப்புலிகளுக்கும் ஈரோஸýக்கும் அளித்த காசோலையை எம்.ஜி.ஆர். திரும்பப் பெற்றார். இது குறித்து விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தனது “விடுதலை’ நூலில் எழுதி இருப்பதாவது:

“”ஈழத்தமிழர்களுக்குத் திரட்டிய நிதியை அம்மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் விடுதலை இயக்கங்களுக்குக் கொடுப்பதில் என்ன தவறு – இதனைப் பிரதமர் புரிந்துகொள்ளாதது ஏன்?” என்று எம்.ஜி.ஆர். ஆதங்கப்பட்டார்.

தொடர்ந்து, “”அந்தக் காசோலையை வைத்திருக்கிறீர்களா? வங்கியில் போடவில்லையே” என்றார்.
“”அந்தக் காசோலை என்னிடம்தான் இருக்கிறது” என்றேன்.
“”அதை அமைச்சரிடம் (பண்ருட்டி ராமச்சந்திரனிடம்) கொடுத்துவிடுங்கள், நாளை இரவு வீட்டுக்கு வாருங்கள் எனது சொந்தப் பணத்திலிருந்து நான்கு கோடி ரூபாய் தருகிறேன்” என்றார்.
“”எனக்குப் போன உயிர் திரும்பி வந்ததுபோல இருந்தது. மறுநாள் இரவு எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் சென்றோம். சொன்னபடி எங்களுக்கு நாலு கோடி ரூபாய் அளித்தார்” என்றும் குறிப்பிட்டுள்ளார் பாலசிங்கம்.
“”விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் இடையில் நல்லுறவு நிலவியது. எமது இயக்கத்தின் மீதும் தலைவர் பிரபாகரன் மீதும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டிருந்த அன்பும் மதிப்புமே இந்த நல்லுறவுக்கு ஆதாரமாக விளங்கியது” என்று குறிப்பிட்டுள்ளார்(தகவல்: விடுதலை நூல்).


சகோதர இயக்கங்களிடையே மோதல்!
சகோதர யுத்தம் உலக வரலாற்றில் காணக் கூடிய ஒன்று. ஒரு தாய் வயிற்றில் பிறந்த மக்களிடையே எழுந்த பகை, யுத்தத்தில் முடிந்திருக்கிறது. மொழியாலும், இனத்தாலும் ஒன்றாக இருப்பவர்களிடையே பகை மூண்டதை சங்க இலக்கியமும் சான்று கூறும். அதேபோன்று சேர, சோழ, பாண்டிய மன்னர் வரலாற்றிலும் நாம் அறிந்திருக்கிறோம். குறுநில மன்னர்கள் காலத்திலும் இவ்விதமான யுத்தம் தொடர்ந்திருக்கிறது. இதன் பின்னணியில் இருப்பது மேலதிகாரம்தான் என்பதையும் காணக்கூடும்.
இவ்வகையான பின்னணியை மனதில் நிறுத்தி சில செய்திகளைப் பார்க்கலாம்:
“”தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் வகுப்புகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட வேண்டும் எனப் பகிரங்கமாகக் கூறப்பட்டது. இதே கொள்கை டெலோவிடமும் இருந்தது.
ஈபிஆர்எல்எப்-ஐப் பொறுத்தவரையில் மற்றைய இயக்கங்களை அழிக்கும் திட்டம் எப்போதும் இருந்திருக்கவில்லை.
ஆயினும் இந்திய ராணுவத்தின் (அமைதிப்படை) வருகைக்குப் பின் அவர்கள் நடந்து கொண்டவிதம், “எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்பதை உறுதி செய்தது” என லண்டனில் இருந்து வெளிவந்த “ஈழ பூமி’ என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சண் எனப்படும் சண்முகலிங்கம் கூறினார்.
“”ஓர் உண்மையை நாங்கள் மறந்துவிடக் கூடாது. எமது இயக்கங்கள் மாற்று இயக்கத்துக்குப் பலியாகிப் போன சம்பவத்தில், இந்திய உளவுப் படையினரின் (“ரா’ அமைப்பு) பங்கு கணிசமான அளவு இருந்திருக்கிறது. இதைப் பல இயக்கத்தவர்கள் புரிந்து கொண்டிருந்தும் மீண்டும் மீண்டும் அவர்கள் அதற்குப் பலியாகிப் போனார்கள்”
“”டெலோ இயக்கத்துக்குள் தாஸýக்கும், பொபிக்குமிடையே ஏற்பட்டப் பிரச்னையில், இயக்கத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஸ்ரீசபாரத்தினம் விரும்பினாலும் அவரின் பரிவு பொபி மீதே இருந்தது”
“”பேச்சுவார்த்தைக்கென யாழ்ப்பாணம் வைத்தியசாலை தேர்ந்தெடுக்கப்பட்டது. 1986 மார்ச் 11-ஆம் தேதி அங்கு ஐந்து மெய்க்காவலர்களுடன் தாஸ் வந்தபோது பொபி குழுவினரால் அழிக்கப்பட்டனர்”
“”(திம்புப் பேச்சுவார்த்தை தோல்விக்குப் பின்) இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட மூவருள் இருவராகிய சத்தியேந்திராவும், சந்திரகாசனும் டெலோ இயக்கத்தவர் ஆவர். இவர்களின் வெளியேற்றத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் காரணம் என டெலோ இயக்கத்தினர் சந்தேகப்பட்டனர்”
“”இந்தக் காலகட்டத்தில் வடபகுதியில் தங்கியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைரத்தினம், ராஜலிங்கம், ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் ஆகியவர்களைக் கொல்லும்படி ஸ்ரீசபாரத்தினம் தனது தளபதிகளுக்கு தொலைத் தொடர்பு சாதனம் மூலம் உத்தரவிட்டார்”
“”வடமராட்சிக்குப் பொறுப்பானவர், துரைரத்தினத்தையும் ராஜலிங்கத்தையும் கொல்ல மறுத்துவிட்டார். ஆனால் வி.தர்மலிங்கமும், ஆலாலசுந்தரமும் வகையாக மாட்டிக் கொண்டனர் (1985 செப். 2) – என்று “ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற நூலில் புஷ்பராஜா குறிப்பிட்டுள்ளார். இவர் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றபோதிலும் இந்தக் குறிப்புகளை அளித்துள்ளார்.
தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் இருவரின் மரணம் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக் கொலைகளைச் செய்தது யார் என்று பெரிய ஆராய்ச்சியே நடைபெற்றது. இந்தக் கொலைகளுக்கு விடுதலைப் புலிகள்தான் காரணமாக இருப்பர் என்றே பெரும்பாலானோர் கருதினர்.
இதுகுறித்து பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனிடம் பேசும்போது, அவர் திட்டவட்டமாக மறுத்ததாகக் கூறியுள்ளார்.
பழ.நெடுமாறன் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்’ என்ற நூலில்,

“”நாங்கள் ஏன் இந்தக் கொலைகளைச் செய்ய வேண்டும். அதற்கான அவசியம் என்ன?
அதிலும் தர்மலிங்கம் எங்களால் நன்கு மதிக்கப்பட்டவர். யாருக்கும் மனதாலும் தீங்கு நினைக்காதவர். எங்கள்பால் அன்பு கொண்டவர். காரணமில்லாமல் எதற்காக நாங்கள் அவரைக் கொலை செய்ய வேண்டும்.
இந்தக் கொலைகளை யார் செய்தது என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் உண்மைக் குற்றவாளி பிடிபடுவார்” என்று பிரபாகரன் கூறியதையும் எடுத்தாண்டுள்ளார்.
பின்னர் 1986-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் நடந்த மோதலில் டெலோ உறுப்பினர் பழனிவேல்-தங்கராசா என்னும் பேராளி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது அவர், “தலைமையின் உத்தரவு. இது ஓர் அரசியல் தந்திரம்; விளக்கம் தேவையில்லை’ என்று பொபி கூறினார்.
விசாரணையில் பழனிவேல் தங்கராசா மேலும் கூறியதாவது:
“”எங்களுக்குப் பழுப்புநிற மோரிஸ் ஆக்ஸ்போர்டு கார் வழங்கப்பட்டது. நான், சிட்டிபாபு, ரஞ்சித் ஆகியோர் வலண்டையன் தலைமையில் இயங்கினோம். ஆலாலசுந்தரம் வீட்டுக்குச் சென்றோம். அவரைப் பலவந்தமாகக் காரில் ஏற்றிக்கொண்டு தர்மலிங்கத்தின் இருப்பிடத்துக்குச் சென்றோம். ஆலாலசுந்தரம் உங்களிடம் பேசுவதற்காக வந்திருக்கிறார் என்று சொல்லி அவரையும் காரில் ஏற்றிக்கொண்டு “கோண்டாவில்’ என்ற ஊருக்குப் போனோம்.
தர்மலிங்கத்தை சிட்டிபாபுவுடன் இறக்கிவிட்டுவிட்டு, ஆலாலசுந்தரத்தை நல்லூர் கூட்டிச் சென்றோம். அவரை நானும் வலண்டையனும் கொன்றோம். பின்னர் தர்மலிங்கத்தைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், தாவடி ரோட்டில் வைத்து அவரை சிட்டிபாபு கொன்றார்”
இந்த உண்மை வெளிவந்ததும் விமர்சனம் வேறு வகையாகத் திரும்பியது.
மதுரையில் 1986 மே 5-ஆம் தேதியன்று நடைபெற்ற டெசோ மாநாட்டின்போது, விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் மோதல் ஏற்பட்ட செய்தி அறிந்து, அம்மாநாட்டின் தலைவர்கள், அங்கே இருந்த இலங்கைத் தமிழர் தலைவர்களை, “”ஒற்றுமையுடன் இருப்போம். எங்களுக்குள் மோதலில் ஈடுபட மாட்டோம்” என்று உறுதி கேட்டார்கள். அவர்களும் அவ்வாறே உறுதி அளித்தனர். வாக்குறுதி அளித்தவர்கள் அனைவரும் மதுரையில் இருக்க, இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் மோதல் உச்சகட்டத்தில் இருந்தது.
இதன் பின்னணி என்ன?
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மேஜர் அருணா 1986 ஏப்ரல் 27-ஆம் தேதி சிங்களக் கடற்படையினருடன், கடலில் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டார். இதையொட்டி யாழ்குடாப் பகுதியில் ஏப்ரல் 28-ஆம் தேதியன்று அஞ்சலி செலுத்தும் வகையில் வேலைநிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது.
அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் சிங்களக் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் 11 பேரை டெலோ இயக்கம் இழந்திருந்தது. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தாமல், விடுதலைப் புலிகள் இயக்க வீரருக்கு மட்டும் அஞ்சலி செலுத்துவதா எனக் கேட்டு மறுநாள் 29-ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய டெலோ இயக்கம் அறிவுறுத்தியது.
இதற்கு மறுத்த கல்வியங்காட்டுப் பகுதி மீது டெலோ தாக்குதலைத் தொடுத்ததும் இதைத் தடுத்த விடுதலைப் புலிகள் இயக்கத் தளபதிகள் மேஜர் பஷீர்காக்கா, லெப்டினன்ட் முரளி ஆகியோரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.இச் சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்ரீசபாரத்தினத்தின் பழைய நண்பர் என்ற முறையில் விடுதலைப் புலிகளின் தளபதி கேப்டன் லிங்கம் பிரச்னையைப் பேசித் தீர்க்கும் நோக்கத்துடன் டெலோ முகாமுக்குச் சென்றார். ஆனால் அங்கே லிங்கம் கொல்லப்பட்டார்(தகவல்: பழ.நெடுமாறன்-பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்).
இதன் பின்னர் டெலோ இயக்கத்தவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மோதல் மூண்டது. இரு இயக்கங்களுக்குமிடையே நடந்த ஒருவார மோதலில் டெலோ இயக்கத் தலைவர் ஸ்ரீசபாரத்தினம் உயிரிழந்தார். (6.5.1986).இந்த மரணத்துக்கு திமுக தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட டெசோ தலைவர்கள் வருத்தமும் வேதனையும் தெரிவித்தனர். இனி டெசோ அமைப்பு இயங்காது என்று மு.கருணாநிதி அறிவித்தார். முரசொலி நாளிதழ் அவர் எழுதிய இரங்கற்கவிதையை வெளியிட்டது. ஈபிஆர்எல்எஃப் இயக்கம் மட்டும் ஸ்ரீசபாரத்தினம் கொல்லப்பட்டதற்கு, யாழ்ப்பாணத்தில் இரங்கல் ஊர்வலம் ஒன்றை நடத்தியது.
பலத்த விமர்சனங்களுக்கான விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் அப்போது தமிழ்நாட்டில்தான் இருந்தார். இது குறித்து பிரபாகரன் கூறுகையில், “லிங்கத்தின் சாவுச் செய்தி வந்தபோது நானே கொதிப்படைந்தேன். களத்திலிருந்த எங்கள் தோழர்களுக்கு வேறு வழி எதுவுமில்லை. லிங்கம் படுகொலை மற்றும் எங்களது முக்கியத் தோழர்கள் கைது என்பது தற்செயலாக நடந்ததாகத் தெரியவில்லை. ஆழமான சதியின் விளைவாகவே இவை நிகழ்ந்துள்ளன.
இந்திய உளவு அமைப்புகளின் தூண்டுதல் பேரிலேயே சென்னையிலிருந்த ஸ்ரீசபாரத்தினம் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருக்கிறார் என்பதும், எங்களுடன் மோதி எங்களை ஒழித்துக் கட்டுவதே அவரின் திட்டம் என்பதற்கான ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. எனவே எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானோம்.
ஸ்ரீசபாரத்தினத்தையோ, டெலோ இயக்கத்தையோ திட்டமிட்டு நாங்கள் அழிக்கவில்லை. நாங்கள் முந்திக் கொள்ளாவிட்டால் எங்களை அழித்துவிட டெலோ இயக்கத்தினர் முயன்றிருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
1982-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி சாவகச்சேரி காவல்நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அரசைக் கதிகலங்கச் செய்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு வடமாகாணத்தின் பல காவல் நிலையங்கள் மூடப்பட்டன.
1982, அக்டோபர் 27-ஆம் தேதி அதிகாலை யாழ்-கண்டி பிரதான சாலையைத் துண்டித்த அதேசமயம், கடத்தப்பட்ட மினி பஸ்ஸில் வந்த இன்னொரு பிரிவினர் காவல்நிலையத்தைத் தாக்கினர். கைக்குண்டு வீசி ஆயுதக்கூடத்தை உடைத்துத் திறந்து 19 ரிப்பீட்டர் துப்பாக்கிகள், ஒன்பது 303 ரைபிள்கள், இரண்டு எந்திரத் துப்பாக்கிகள், ஒரு சுழல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றினர். இத்தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் இறந்தனர். தாக்குதலுக்குத் தலைமை ஏற்ற சீலன் உள்ளிட்ட இரு போராளிகள் அப்போது காயமுற்றனர்.
தனது ஐந்தாண்டுக்கால ஆட்சியில் கொடிய அடக்குமுறைகளையும், இனவெறியையும் கட்டவிழ்த்துவிட்ட ஜெயவர்த்தனா, ஜனாதிபதி தேர்தலில் வாக்குக் கேட்க (1982 செப்டம்பர்) யாழ்ப்பாணம் வந்த அதே நாளில், பொன்னாலை பாலத்துக்கு அருகில் வாகனங்கள் வருகையில் கொரில்லா வீரர்கள் தாக்கினர். பாலமும் நிலக்கண்ணி வெடிமூலம் தகர்க்கப்பட்டது.
கொடுமைகள் இழைப்பதில் பேர்போன பருத்தித்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயவர்த்தனா விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். கிளிநொச்சியருகே, உமையாள்புரத்தில் ராணுவப்படையினருடன் நடந்த நேரடி மோதலில் ராணுவத்தினர் காயத்துடன் தப்பி ஓடினர்.
புலிகளை ஒழிக்க 1983 ஏப்ரலில் யாழ்ப்பாணத்தில், பாதுகாப்பு மாநாடு என்ற பெயரில் நடக்கவிருந்த மாநாட்டுக்கு, யாழ் மாவட்ட அமைச்சர் விஜயக்கோன் தலைமை ஏற்க, முப்படை அதிகாரிகள், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் கலந்துகொள்வதாக இருந்தது. அம்மாநாட்டு மண்டபத்தையும், யாழ் செயலகத்தையும் மாநாடு தொடங்கச் சில மணி நேரம் முன்னதாய் புலிகள் வெடிகுண்டுகளால் (1983 ஏப்ரல்) தகர்த்தனர்.
1983 மே 18-இல் உள்ளூராட்சித் தேர்தலை வடக்குப் பகுதியில் நடத்த இருப்பதான அறிவிப்பை சிங்கள அரசு வெளியிட்டது. இத்தேர்தலை, தமிழர்கள் போட்டியிடாமலும், வாக்களிக்காமலும் புறக்கணிக்க வேண்டும் என்றும், மக்கள் ஸ்ரீலங்காவின் தேர்தல் மாயையிலிருந்து முற்றிலுமாக விடுபடுமாறும் அதன் சகல நிர்வாகங்களையும் நிராகரிக்குமாறும் மக்கள் பங்கெடுக்கும் ஆயுதப் போராட்டத்துக்குத் தயாராகுமாறும் வே.பிரபாகரன் அறிக்கை வெளியிட்டார்.
“தேர்தலில் வெற்றிபெற தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து வெற்றி பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி, இதுபோன்ற தேர்தல்களில் மீண்டும் பங்கெடுப்பது, ஸ்ரீலங்கா இனவாத அரசுக்கு முட்டுக்கொடுக்கும் செயலாகும்’ என்றும் கடுமையாகக் கண்டித்தார் பிரபாகரன். அவரின் கோரிக்கையை ஏற்காமல் தேர்தலில் போட்டியிட்ட மூவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
தமிழீழ அரசியல் வரலாற்றில் விடுதலைப் புலிகளின் கோரிக்கையை ஏற்று, மக்கள் தேர்தலை முற்றாகப் புறக்கணித்தனர். விடுதலைப்புலிகளின் கோரிக்கையை புறந்தள்ளி தேர்தல் களத்தில் நின்ற தமிழர் விடுதலைக்கூட்டணியினர் பருத்தித்துறையில் 1 சதவீதமும், வல்வெட்டித்துறையில் 2 சதவீதமும், சாவகச்சேரியிலும் யாழ்ப்பாணத்திலும் பத்து சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்று மக்களிடையே மதிப்பிழந்தனர்.
இந்நிலையில் இலங்கை அரசியலின் போக்கை மாற்றும்விதத்தில், யாரையும் சுட்டுத்தள்ளவும், அப்படி சுட்டுத்தள்ளுவது விசாரணைக்கு உள்படுத்தப்படாமல் இருக்கவும், இறந்தவர் உடலை ராணுவமே புதைக்கவும், எரிக்கவும் சட்டப் பாதுகாப்பைப் பெற்றது.
இதன் காரணமாக அரசின் பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியமர்த்தும் போக்கும் தமிழ்ப்பெண்கள் கற்பழிப்பும், கொலைகளும், தமிழ்க் கோயில்கள் தீவைத்து எரிக்கப்படுவதும் அதிகரித்தது.
“தமிழர்களின் உயிரைப் பற்றியோ, தமிழர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றியோ எனக்கு எந்தவிதமான அக்கறையுமில்லை’ என லண்டன் நாளிதழுக்கு ஜெயவர்த்தனா பேட்டியளித்து, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினார்.
அதே வேளை, 1983 ஜூலை 15-ஆம் தேதி ராணுவக்கூலிகளால் விடுதலைப் புலிகளின் சிறந்த தளபதிகளில் ஒருவரான லூகாஸ் சார்லஸ் ஆண்டனி என்கிற சீலன் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்க, திருநெல்வேலி பலாலி வீதியில், புலிகளின் லெப்டினன்ட் செல்லக்கிளி தலைமையில் யுத்தச் சீருடையுடனும் நவீன ரக ஆயுதங்களுடனும் 14 பேர் சென்று மாதகல் முகாமைச் சேர்ந்த ராணுவத்தினர் நள்ளிரவில் ரோந்துபுரியச் சென்றபோது தாக்கி அழித்தனர். தாக்குதலில் ராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலில் கலந்துகொண்ட 14 போராளிகளுள் ஒருவராக பிரபாகரனும் இருந்தார். தானே தாக்குதலுக்குப் பொறுப்பேற்காமல், தனது தோழர்களும் அந்தப் பயிற்சியைப் பெற வேண்டும் என்று செல்லக்கிளியைத் தலைமை தாங்கச் செய்தார். வெற்றிபெற்ற நிலையில், தாக்குதலின் இறுதியில், செல்லக்கிளி எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.
“பயங்கரவாதத்தை ஒழிப்போம்’ என்று முழங்கிய ஜெயவர்த்தனா, தான் அவமானமுற்றதாகக் கருதி, 1983 ஜூலை கலவரம் என்று அழைக்கப்படும் பயங்கர கலவரத்தைத் தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் கட்டவிழ்த்துவிட்டார்.
ஜூலைக்குப் பிறகு விடுதலைப்புலிகளின் தேவை தமிழீழத்தில் உணரப்பட்டதால், பல்வேறு சமூகத்தாரும் அதில் இணைந்துகொள்ள ஆர்வம் காட்டினர்.
கொரில்லா யுத்தக்குழுவாக இருந்த விடுதலைப்புலிகளின் எண்ணிக்கை உயரவும், ராணுவத்துக்குண்டான பலவகைப் பிரிவுகளாக, கரும்புலிகள் என்னும் தற்கொலைப்படை, கடற்புலிகள் எனப்படும் கடற்படை, கடற்கரும்புலிகள் என்னும் தற்கொலைப்படை, கிட்டு பீரங்கிப்படை, விக்டர் வாகனப்படை, சோதியா மகளிர் அணி, சார்லஸ் அந்தோனி அதிரடிப்படை எனப் பல பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டன.





எ‌ப்போது‌ம் சந்தேகப்படாதீர்கள்

எ‌ப்போது‌ம் சந்தேகப்படாதீர்கள்.......
சந்தேகம் என்பது எப்படி ஒரு குடும்பத்தையே அழித்து விடுகிறதோ அது போலவே ஆண்டவரை வணங்குவதிலும் சந்தேகம் ஏற்பாடுமாயின் அதுவும் வாழ்க்கையையே கெடுத்து விடும். சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பானவன். அப்படிப்பட்ட மனுஷன், தான் கர்த்தரிடம் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக என்று கூறுகிறது பைபிள். நம்பிக்கையுடன் எதைச் சொன்னாலும், செய்தாலும் அது நிஜமாகும் என்று இயேசு கூறுகிறார். அதற்கு உதாரணமாக, ஒருவன் மிகுந்த நம்பிக்கையுடன் மலையைப் பார்த்து நீ பெயர்ந்து போய் சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று கூறுவானாயின், அவன் சொன்னபடியே ஆகும் என்று சொல்கிறார். எனவே சந்தேகத்தைப் போக்குங்கள். அழிவைத் தடுத்து நிறுத்தங்கள்.




உலகமயமும் தமிழ்த் தேசியமும்

உலகமயமும் தமிழ்த் தேசியமும்...........
ஆழிப் பேரலையை விட அதிவேகத்தோடு உலகமயப் பொருளியல் உலகமக்களைத் தாக்கி வருகிறது. உழைப்பு, இயற்கை, பணம் ஆகியவைமட்டுமின்றி, புன்னகை, அழுகை, பெண்ணின் நளினம் ஆணின் உடற்கட்டு..... அனைத்தும் சந்தை சரக்காகி வருகின்றன. முதலாளியம் என்றாலே சுரண்டல்தான். உலகமயம் என்பது தீவிரச் சுரண்டல். உலகச் சந்தையையும், உள்நாட்டுச் சந்தையையும் தடை ஏதுமின்றி தாராமயமாக்குவதன் வழி, வர்த்தகம் மற்றும் நிதிமூலதனம் ஆகியவை நாட்டு எல்லைகளைக் கடந்து தங்குதடையற்றுப் பரவுவதற்கான ஏற்பாடுதான் உலகமயம் (Globalization) எனப்படும், இதற்கான பொருளியல் கொள்கையைப் புதிய தாராளமயம்(Neoliberalism) என்றும் கூறுவர்.இக் கொள்கை 1980களில் வட அமெரிக்க ஆட்சியாளர் ரீகன்(Reagan), பிரிட்டனின் தாட்சர்(Thatcher) ஆகியோரால் முன்வைக்கப்பட்டது. ஆயினும் மூலதனம் உலகம் முழுவதும் பரவி ஆதிக்கம் செய்வது புதிய போக்கல்ல.போட்டி முதலாளியத்தின் வளர்ச்சிப் போக்கில் முற்றுரிமை (ஏகபோகம்) தோன்றியது. அதன் வழி ஏகாதிபத்தியம் உருவாயிற்று."ஏகாதிபத்தியம் முதாலாளியத்தின் உச்சகட்டம்" என்று வரையறுத்த மாமேதே லெனின், அதன் முக்கியக் கூறுகளாக கீழ் வருவனவற்றைச் சுட்டிக் காட்டினார்.1. முற்றுறிமை நிறுவனங்கள் பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்கும் நிலை.2. வட்டி மூலதனமும், தொழில் மூலதனமும் ஒன்றினைந்த நிதிமூலதன முற்றுரிமை மேலாதிக்கம்.3. சரக்கு ஏற்றுமதியைவிட நிதிமூலதனமும் ஏற்றுமதி முதன்மை பெறுதல்.4. உலகச் சந்தையை சில முற்றுரிமைக் கூட்டணிக்கு இடையே பங்கீடு செய்து கொள்வது. 5. நாடுகள் இம் முற்றுரிமை கூட்டணிகளுக்கிடையே பங்கு போடப்படுதல்.நாடுகளைப் பங்கு போடுவதில் ஏற்பட்ட மோதல்கள் தான் உலகப்போர்களுக்கு அடிப்படைக் காரணங்களாயின. இரண்டாம் உலகப் போருக்குப் பின் காலனி நாடுகள் விடுதலை அடைவது தீவிரம் பெற்றது. சோசலிச முகாம் ஒன்றும் அமைந்தது "கம்யூனிச அபாயம்" பரவாமல் தடுக்க ஏகாதிபத்திய நாட்டு அரசுகள் கல்வி, மருத்துவம், சமூகப் பாதுகாப்பு போன்றத் துறைகளில் மக்கள் நல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. ஆயினும் சில பத்தாண்டுகளிலேயே புதிதாக விடுதலை பெற்ற நாட்டு ஆளும் வர்க்கங்களிடையே ஏகாதிபத்தியத்தோடு கைகோர்க்கும் போக்கு வலுப்படத்தொடங்கியது. 1980-களின் இறுதியில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், சோவியத் ஒன்றியமும் சோசலிசப் பாதையிலிருந்து வீழ்ந்த பிறது, இப்போக்குத் தீவிரம் பெற்றது. இக்காலக் கட்டத்தில் ஏற்பட்டத் தகவல் தொழில் நுட்பப் புரட்சி நிதி மூலதனப் பரவலுக்குப் பெருந்துணை புரிந்தது.தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட புதிய உயர் தொழில் நுட்பங்கள் அறிவுசார் முற்றுரிமை முதலாளிகளையும் உருவாக்கியது. மூலதனத்தை வைத்து உலகைச் சுரண்டுவது போல "அறிவைக்" கொண்டு சுரண்டுவது என்ற வாய்ப்பு பெருமளவில் திறந்து விடப்பட்டது. குறுகிய காலத்திலேயே உலகின் முதல் இட முதலாளியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ் வர முடிந்தது. இன்போசிஸ் மூர்த்தி, விப்ரோ பிரேம்ஜி போன்ற புதிய தகவல் முதலாளிகள் உருவானார்கள், இரண்டாவது உலகப்போரில் தரைமட்டமான ஜப்பான் விரைவிலேயே தொழில் நுட்பஏகாதியபத்தியமாக நிலைபெற்றது. மூலதனத்துக்கு நிகராக அறிவு என்பதும் சுரண்டல் ஆயுதமாக வளர்ந்து புதிய போக்காகும். உலக வர்த்தக அமைப்பு காப்புரிமை ஒப்பந்தம், அறிவுசார் சொத்துரிமை ஆகியவை வலுப்பெற வழிகோலியது.கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை பெறுவது, அதன் மூலம் முதலாளிகள் உருவாவது ஆசான் காரல் மார்க்ஸ்(Karl Marx) காலத்திலேயே முளைவிட்ட ஒன்றுதான். ஆயினும், இன்று இப்போக்கு தனித்தன்மை பெற்ற ஒன்றாக வளர்ந்திருக்கிறது. இது பற்றி விரிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. நிதிமூலதனத்தின் மேலாதிக்கமும், அறிவு முதலாளியத்தின் ஆதிக்கமும் கோலோச்சும் இக்காலத்திற்கு மார்க்சின் உபரிமதிப்புக் கோட்பாடு (Theory of Surplus Value) பொருந்தாது என்று கூறுவோர் உளர்.உண்மையில் உபரிமதிப்புக் கோட்பாடு இன்றுதான் கூடுதல் பொருத்தமுடையதாகவும், சுரண்டலை அறிவியல் வழியில் துல்லியமாக விளக்குவதாகவும் உள்ளது. ஆயினும் 'பறக்கும் மூலதனம்'(Hot Money) கோலோச்சுவது, அறிவே மூலதனமாகச் செயல்படுவது ஆகியவற்றோடு இணைத்து புதிதாக இக்கோட்பாட்டை விளக்க வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. இதுகுறித்து வேறு ஒரு வாய்ப்பில் பார்க்கலாம்.ஏகாதிபத்தியத்தின் இன்றைய சுரண்டல் வடிவமே உலகமயம். அதற்கான கொள்கையே புதிய தாராளமயம். இன்று உலகின் பெரும்பாலான நாடுகளின் ஆட்சியாளாகள் பின்பற்றும் கொள்கையாக புதிய தாராளமயம் உள்ளது. முன்பு போல் காலனி நாடுகளைக் கைப்பற்ற வேண்டிய தேவையோ, அதற்காக தங்களுக்குள் போர் புரிய வேண்டிய நிலைமையோ இன்று ஏகாதிபத்தியங்களுக்கு இல்லை. ஏகாதிபத்தியங்களுக்கும், புதிதாக விடுதலை பெற்ற நாடுகளுக்குமான முரண்பாடும் முன்னுக்கு வரவில்லை. மாறாக வளர்ந்து வரும் "மூன்றாம் உலக" நாடுகளின் ஆட்சியாளர்கள் ஒப்புதலோடு அந்நாடுகள் உலகமயக் காலனிகளாக மாறி வருகின்றன. இவ்வகை முதலாளிகள் உலகமயச் சுரண்டலில் ஏகாதிபத்தியத்தின் கூட்டாளிகளாக மாறிவிட்டார்கள். ஒரு சில நாடுகளில் தரகு முதலாளிகளாகவும், வேறுபல நாடுகளில் இளைய பங்காளிகளாகவும் இவ்வகை முதலாளிகள் இருக்கிறார்கள்.இந்தியப் பெருமுதலாளிகள்-குறிப்பாக முற்றுரிமை முதலாளிகள் உலகமயத்தின் பங்காளிகளாக வல்லரசுகளோடு கைகோர்த்திருக்கின்றனர். அம்பானி(Ambani), டாட்டா(Tata), பிர்லா(Birla), மூர்த்தி, டால்மியா(Dalmiya) போன்றவர்கள் ஐரோப்பா உள்ளிட்டு உலகநாடுகள் அனைத்திலும் வேட்டையாடுகின்றனர். எனவே உலகமயத்தை நிலைகாட்டுவதில் ஏகாதிபத்திய முதலாளிகளைப் போலவே, இந்தியப் பெருமுதலாளிகளும் அக்கறை காட்டுகின்றனர். உலகம் முழுவதும் இவ்வாறான ஆதிக்கக் கூட்டணிக்கும் மகக்ளுக்குமான முரண்பாடே முதன்மை பெற்றுள்ளது. பெரும்பாலான நாடுகளில் இது தேசிய முரண்‘பாடுகளின் ஊடாக வெளியிடப்படுகிறது. ஏனெனில் தேசியச் சந்தைகளையும், தேசிய வாழ்வையும் அழித்துதான் உலகமயம் நிலைபெறுகிறது. 'தடையற்ற போட்டி' என்ற பெயரால் தாராளமயம் நியாயப்படுத்தப்பட்டாலும், உண்மையில் சில்லோர் முற்றுரிமையை (Oligoply)நிலைநாட்டவே பயன்படுகிறது. இந்தியாவில் நுழையும் பன்னாட்டு நிறுவன மூலதனம் புதிய தொழில்களைத் தொடங்குவதைவிட, தொழில்களைக் கைப்பற்றவே இறக்கிவிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக இந்துஸ்தான் லீவர் கம்பெனி(Hindustan Lever Limited) பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், இந்தியாவில் ஐஸ்கிரீம்(Ice cream) தொழிலில் இல்லை. ஆனால் இன்று 85% ஐஸ்கிரீம் சந்தையைக் கைப்பற்றி இருக்கிறது. ஆனால் இந்நிறுவனம் புதிதாக ஐஸ்கிரீம் தொழில்சாலைகள் நிறுவிவிடவில்லை. ஏற்கெனவே சந்தையில் இருந்த குவாலிட்டி ஐஸ்கிரீம், டோலப் ஐஸ்கிரீம், மில்க்ஃபுட் ஆகியவற்றை விழுங்கி, இப்போது தன்னை முற்றுரிமையாக நிலப்படுத்தியிருக்கிறது. அருண் ஐஸ்கிரீம் போன்றவைத் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. கோக் மென்பான நிறுவனம் இந்தியாவில் முதலில் நுழைய முயன்ற போது, தனியாகத் தொழில் நடத்தி தடையில்லாப் போட்டியில் வென்றுவரவில்லை. முதலில் வடநாட்டு பார்லே கம்பெனியைக் கைப்பற்றியது. அன்று மென்பானச் சந்தையில் வடநாட்டில் கொடிகட்டிப் பறந்த தம்ஸ்-அப்(Thumbs Up), லிம்கா(Limca) ஆகியவற்றை பார்லேவினுடையவை. இதன்பிறகு கோக் விரைவில் பரவியது. தமிழ்நாட்டில் நீண்டகாலம் புழக்கத்திலிருந்த வின்சென்ட், காளிமார்க், மாப்பிள்ளை வினாயகர் போன்ற உள்ளூர் நிறுவனங்களை அழித்தது. இன்று இந்திய மென்பானச் சந்தையில் 60 விழுக்காடு கோக்கினுடையது. அதே நேரம் இந்தியப் பெருமுதலாளிகளில் பெரும்பாலோருக்கு உலகமயத்தால் பாதிப்பில்லை; ஆதாயமே. எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய எஃகு இரும்பு நிறுவனமான கோரஸ் குழுமத்தை அண்மையில் டாடா கைப்பற்றியது. அடுத்து அமெரிக்காவில் உள்ள குமின் என்ஜின் கம்பெனி, ரிட்ஜ் பாஸ்டன் ஓட்டல், எனர்ஜி பிராண்ட் இன்கார்ப்பரேசன் போன்று அடுத்தடுத்து பலதுறைகளில் பெருநிறுவனங்களைக் கைப்பற்ற இருக்கிறது. எங்களது ஆண்டு வருமானத்தில் 30% வெளிநாடுகளிலிருந்து வருகிறது. இன்னும் ஐந்தாண்டுகளில் இது 50 விழுக்காடாக உயரும். என்று டாட்டா குழுமம் அறிவிக்கிறது. (இந்து-29-12-2006). புதிய தாராளமயம் புதிய தொழில்களை உருவாக்கும் என்று கூறுவது பெரும்பாலும் உண்மை இல்லை. மாறாக உள்ளூர் தொழில்களை அழிப்பதே பொதுப்போக்காக உள்ளது.தாராள இறக்குமதி அந்தந்த தேசிய இனத்தொழில் முனைவோரை விரட்டியடிக்கிறது. இதில் அதிக பாதிப்படைந்திருப்பது தமிழ்நாடு. இங்கு சிறுதொழில் உற்பத்திதான் முக்கியமானது. ஆனால் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட 3.09 இலட்சம் ஆலைகள் மூடப்பட்டுவிட்டன. கணிசமானவை நொடிந்து விழும் நிலையில் இருக்கின்றன. பல இலட்சம் தொழிலாளர்கள் வீதியில் நிறுத்தப்பட்டது தான் கண்டபலன். உருவாகிற பன்னாட்டு நிறுவனத் தொழில்களும் தானியங்கிமயமானவை. அங்கு வேலைவாய்ப்பு உருவாவது மிகமிகக் குறைவு.பறக்கும் பணம் என்பது உலகமயத்தில் விளைந்த பெரும் சிக்கலில் ஒன்றாகும். நிதி மூலதனத்தின் பேயாட்சி இதன் மூலமே முதன்மையாகச் செயல்படுகிறது. பங்குச் சந்தையில் மட்டுமே உலவிடும் பணம் இது. சில நிறுவனங்களின் பங்குளை ஒரேடியாக வாங்கிக் குவித்துவைத்துக் கொண்டு, பங்குச்சந்தையில் அவற்றுக்கு கிராக்கி எற்படுத்தி, பன்மடங்காக்கி விலையேற்றி அதே பங்குகளை விற்றுவிட்டு பறந்து விடுவது. இந்த ஊக வணிகச் சூதாட்டம் அந்தந்த நாட்டுப் பொருளியலையே நிலைகுலையச் செய்துவிடும். இவ்வாறு ஊக வணிகத்தில் பங்குச்சந்தை நிதி மூலதனம் உலகின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு பறப்பதற்கு தகவல் தொழில் நுட்பப் புரட்சி துணை செய்கிறது. இன்டர்நெட் மூலம் பணம் நாடுவிட்டு நாடு கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து விடுகிறது. இவ்வாறான ஊகவணிகமும், வெளிப்பணிவாய்ப்பும் (BPO) உலகமயத்திற்கு ஆதரவாக பெரும் மயக்கத்தையே மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கான பணிமையங்கள் சென்னையில் டி.சி.எஸ், இன்போசிஸ், காக்னிசன்ட், ஆல்செக்... என்று நிறுவப்பட்டுள்ளன. நவீன உலகில் அடையாளங்களாக, அறிவுப்பொருளாதாரத்தின் (Knowledge Economy) அடிப்படைகளாக இவை காட்டப்படுகின்றன. இவ்வாறான நிறுவனங்களை ஈர்ப்பதில் மாநில அரசுகளிடையே கடும் போட்டியே நிலவுகிறது. இதனால் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி, 1998க்கும் 2005க்கும் இடையே ஆண்டுக்கு 30% என்ற அளவில் பாய்ந்து செல்கிறது. (சி.பி. சந்திரசேகர் சோசியல் சயின்டிஸ்ட் ஜன-பிப், 2006) இந்தியாவின் ஏற்றுமதியில் சுமார் 40% தகவல் தொழில் நுட்பத்துறையிலிருந்து வருகிறதாம். ஆனால் இத்துறையில் உருவாகியிருக்கிற பணிவாய்ப்பு வேளாண்மை தவிர்த்த பிறதுறை வேலைவாய்ப்பில் 0.21% தான் என்று தகவல் தொழில்நுட்ப முதலாளிகள் சங்கக் குறிப்பே கூறுகிறது. ஆயினும், ஒப்பீட்டளவில் அதிக சம்பளம் பெறும் வாய்ப்பு இத்துறையில் உள்ளது. 25வயதுக்குள் இருபதாயிரம், முப்பதாயிரம் மாதச் சம்பளத்தை எட்டிப்பிடிக்கும் வாய்ப்பும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிகம். இத்தொழிலுக்கு ஆள்சேர்ப்பு மையங்களில் முதன்மையானதாக சென்னையே உள்ளது. இங்குப் பணியில் சேருவோரில் மிகப்பெரும்பாலோர் ஏற்கனவே நல்ல வேலையில் அமர்ந்திருப்போர் வீட்டுப்பிள்ளைகளே, நகர்ப்புறங்களைச் சார்ந்த நடுத்தர வர்க்கத்தினரே. குறிப்பாக பார்ப்பனர்களும், பிற உயர் சாதியினருமே என்று சிஜேஃபுல்லர் மற்றும் அரிபிரியா நரசிம்மன் ஆகியோர் கூறுவது கவனிக்கத் தக்கது. (காண்க: Economic and Political weekly, ஜனவரி 21, 2006) டாடா கன்சல்டன்ட் சர்வீஸ், இன்போசிஸ், விப்ரோ, காக்னிசென்ட் டெக்னாலஜிஸ், சத்யம் கம்யூட்டர்ஸ் ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகே இம் முடிவை இவர்கள் கூறுகின்றனர். இத்துறை பணியாளர்கள் உலகமயத்தின் பயனாளிகளாக இருக்கிறார்கள். இன்னொரு புறம் உலகமயத்தோடு சேர்ந்து ஆங்கில ஆதிக்கமும் வருகிறது. குறிப்பாக வெளிப்பணிமையங்களில் (Outsourcing centres) ஆங்கிலத்தில் உரையாடுவது, அதுவும் இந்திய உச்சரிப்பின் சாயல் இல்லாமல் உரையாடுவது முக்கிய தேவையாக முன் வைக்கப்படுகிறது. இம் மையங்களில் பணியாற்றுவோருக்கு ஜெரால்ட், ராபர்ட், எலிசபத், ரோசினா என்பன போன்று பொய்ப் பெயர்களே கூட கொடுக்கப்படுகின்றன. வெளிநாட்டு வெள்ளைக்கார வாடிக்கையாளர்கள் தாம் தம் நாட்டுக்காரரோடே உரையாடுவதாக மயக்கம் ஏற்படுத்தும் உத்தி இது.இந்தத் தகுதி பல தலைமுறையாக கல்விவாய்ப்பைப் பெற்ற பார்ப்பனர்களுக்கே இருப்பதால், அவர்களே அதில் அதிகம் வாய்ப்பு பெறுவதாகவும் மேற்குறித்த ஆய்வு கூறுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதில் இச்சமூகத்தவர்களே அதிகம் இருப்பதற்கும் இது முக்கிய காரணமாக அமைகிறது.இவ்வாறு பன்னாட்டு முதலாளிகள் இந்தியப் பெருமுதலாளிகள் பார்ப்பனர்கள் ஆங்கில ஆதிக்கம் என்ற கூட்டணி உலகமயத்தில் நிலைபெறுகிறது. இந்தக் கூட்டணிக்கு அனைத்திந்தியச் சந்தை அவசியமானது. வலுவான இந்திய மையம், அதில் அனைத்து அதிகாரங்களும் குவிவது என்பது தேவையான ஒன்று. உலகமயத்தால் அரசுகள் வலுவிழந்துவிடும் என்பது உலகமயக் கூட்டாளிகளுக்குப் பொருந்தாது. கல்வி தருவது, மருத்துவம் அளிப்பது போன்ற சேமநலப் பணிகளிலிருந்து அரசு விலகிக் கொள்ளுமே தவிர, அரசு எந்திரம் உலகமயத்தால் பலவீனமடையாது. அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவி என்பது முன்னைவிட புதிய தாராளமயக் காலத்தில் தான் தெளிவாகத் தெரியும். தில்லிக்கு அருகில் குர்குவானில் ஹோண்டா நிறுவனத்திற்கு அடியாளாக காவல்துறை ஏவிவிடப்பட்டதும் ஒரிசாவின் கலிங்கா நகரில் பாஸ்கோ என்ற கொரியாவின் பன்னாட்டு கம்பெனிக்காக மண்ணின் மக்கள் வேட்டையாடப்பட்டதும் அண்மை நிகழ்வுகள். இந்தியாவின் வரவு செலவில் இராணுவத்திற்கு அளிக்கும் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பதும், மேலும் மேலும் அமெரிக்க வல்லரசின் இராணுவக் கூட்டணியில் இந்திய அரசு நெருங்குவதும் இப்போக்கிற்கு சான்று. வாட் என்ற மதிப்புக் கூட்டுவரி விதிப்பு, மாநிலத்தின் நிதி அதிகாரத்தைக் கடுமையாகத் தாக்கி, இந்தியா முழுவதையும் வழவழப்பான ஒரே சந்தையாக மாற்றும் நடவடிக்கை ஆகும். நதிகள் தேசியமயம், வேளாண்மையை பொது அதிகாரப்பட்டியலுக்குக் கொண்டு போவது, மத்திய சிறப்புப் படைகள் வலுவாக்கப்பட வேண்டும் என்பது போன்றவை தில்லியில் அதிகாரக்குவிப்பை முன்மொழிபவை ஆகும்.சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் தேசிய இனத் தாயகத்தையே கூறுபோட்டு அதற்குள் தில்லி அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உலகமய சமஸ்தானங்களை நிறுவக் கூடியவை. தேசிய இன ஆட்சிப் பகுதிக்குள் உலகமயத்திற்கு வசதி செய்து தரும் தனித்தனி நகர அரசுகளை ஏற்படுத்தக் கூடியவை ஆகும்.இதற்கு ஏற்ப வலுவான இந்தியா வல்லரசு இந்தியா ஐநாவில் நிரந்தர உறுப்பு நாடு என்ற அந்தஸ்தில் இந்தியா என்ற முழக்கங்கள் வாயிலாக இந்திய தேசிய வெறி கட்டமைக்கப்படுகிறது.தேசிய இன அடையாளங்களே வளர்ச்சிக்கு இடையூரானது என்ற கருத்து பரப்பப்படுகிறது.ஆயினும் உலகம் முழுவதும் உலகமயத்திற்கு எதிரான கிளர்ச்சிகளுக்கு அடித்தளமாக தேசிய இன உணர்ச்சிகளே அமைந்துள்ளன. லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக உலகமயத்திற்கு எதிராக கிளர்ந்தெழுவதற்கு தேசிய இன உணர்ச்சியே அடித்தளமாக அமைச்திருக்கிறது என்பதற்கு வெனிசுவேலா, பொலிவியா, நிகரகுவா போன்றவையே சான்று பகர்கின்றன. ஸ்பானிய மொழி உணர்ச்சி, ஆப்ரோ-அமெரிக்க இன உணர்ச்சி ஆகியவற்றின் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆற்றலை பிடல்காஸ்ட்ரோ(Fidel Castro) வெளிக் கொணர்ந்திருப்பதும், மாயன் பழங்குடித் தொன்மங்கள் சபடிஸ்டாக்களின் வல்லாதிக்க எதிர்ப்புக்கு அடித்தளமிட்டுருப்பதை அதன் தலைவர் மார்க்கோஸ் விளக்குவதும் கவனங்ககொள்ளத் தக்கவை. இங்கம் உலகமய எதிர்ப்பு என்பது புனைவான இந்திய தேசியத்தோடு முரண்படவேண்டியது தவிர்க்க முடியாதது. ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டிய உலகமயக் கூட்டணி இந்தியத் தேசியம் வழியாகத்தான் செயல்படுகிறது.உலகமயத்தால் நசுக்கப்படும், உழவர்கள், தொழிலாளர்கள், ஒடுக்குண்ட சாதியினர், ஒதுக்கப்படும் சிறுபான்மையினர், சிறு, நடுத்தர தொழில் முனைவோர் முதலிய புரட்சிகர சக்திகளை உலகமய எதிர்ப்பில் ஒன்றிணைக்கிற மகத்தான புரட்சிகர ஆற்றல் தமிழ்த் தேசியம் தான். சூழல் பாதுகாப்பு, மரபான தொழில் நுட்பப் பாதுகாப்பு, மனித உரிமைப் பாதுகாப்பு ஆகிய தளங்களில் உலகமயத்திற்கு எதிராகக் களம் அமைப்போர் ஒன்றிணைய வேண்டிய தளமும் தமிழ்த் தேசியம் தான்.தமிழ்த் தேசியப் புரட்சிதான் உலகமயத்தை முறியடிக்கும் ஆற்றல் கொண்டது.




மாமேதைகள்

ஆன்மீகத் துறவி விவேகானந்தர்

“ஒருவன் சில பரீட்சைகளில் தேர்வு பெற்று, சொற்பொழிவு செய்யும் திறன் உள்ளவனாக இருந்தால்தான், அம்மனிதனைப் படித்தவன் என்று கருதுவீர்களா? வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் தகுதியைப் பெறுவதில் பாமர மகளுக்கு உதவி புரியாத கல்வியை, அவர்களது குணநலன்களைக் கட்டி வளர்க்காத கல்வியை, அதே போல் அம்மக்களிடம் ஈகைக் குணத்தையும், சிங்கத்திற்குள்ளது போன்ற தைரியத்தையும் ஊட்டி வளர்க்காத கல்வியை, கல்வி என்று சொல்வதில் அர்த்தம் இருக்கிறதா? எவனொருவன் தன் அறிவைக் கொண்டே தன்னைக் காத்துக் கொள்ளத் திறன் உடையவனோ, அவனே உண்மையான கல்வியை அடைந்தவனாவான்.”
இப்படி ஒரு காவியுடை அணிந்த ஒரு சாமியார் சொன்னார் என்றால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மையில் இதைவிட வேகமான, விவேகமான கருத்துக்களைச் சொல்லிச் சென்றிருக்கிறார் விவேகானந்தர்.
‘செங்காவிச் சிங்கம்’ என்று சொல்லும் அளவுக்கு விவேகானந்தரின் சிந்தனைகள் கொட்டிக் கிடக்கின்றன.
இந்து மத மேன்மை, இந்தியாவின் வலிமை, மூடத்தனத்தின் ஒழிப்பு, பகுத்தறிவின் தேவை, மெய்யான கல்வியாளர்கள், ஏழைகளின் நிலைமை என பல்வேறு பொருள்கள் பற்றி விவேகானந்தர் கூறிய கருத்துகள் மனித குல வளர்ச்சிக்கு மாமருந்தாகும்.
விசுவநாதர் - புவனேஸ்வரி தம்பதிக்கு 1863 ஜனவரி 12 அன்று பிறந்த விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாதர்.
சிறு வயதிலிருந்தே எது பற்றியும் ஆய்ந்து அறிகின்ற போக்கு நரேந்திர நாதருக்கு இருந்தது. ராமகிருஷ்ணரின் சீடராகச் சேர்ந்தார் நரேந்திரர். மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராக நரேந்தர் திகழ்ந்தார். அதனால் நரேந்திர நாதருக்கு ‘விவேகானந்தர்’ என்று ராமகிருஷ்ணர் பெயர் சூட்டினார். இந்தப் பெயரே நிலை பெற்றுவிட்டது.
1885 ஆம் ஆண்டு ராமகிருஷ்ணர் மறைந்ததும், விவேகானந்தர் யாத்திரையை மேற்கொண்டார். காசி, லக்னோ, ஆக்ரா, பிருந்தாவனம், ஹத்ராஸ், ரிஷிகேஷ், பிரானாகோர் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.
மற்றொரு முறை விவேகானந்தர் யாத்திரை புறப்பட்ட போது ராமேஸ்வரத்திற்கு வந்தார். இந்த யாத்திரைதான் விவேகானந்தரின் அறிவாற்றலை வெளிப்படுத்துவதற்கும், உலக மேதைகள் இந்திய தேசத்தின் வலிமையைப் புரிந்து கொள்வதற்கும், இந்து மத்த்தின் மேன்மையை உலக மதவாதிகள் தெரிந்து கொள்வதற்கும் காரணமாயின.
அப்போது இராமநாதபுரம் மன்னராக இருந்தவர் பாஸ்கர சேதுபதி. இவர் ஆன்மீகத்தில் அறிவாற்றல் மிக்கவராகவும் சொறபொழிவு நிகழ்த்துவதில் வல்லவராகவும் திகழ்ந்தார். அதனால் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடக்க இருந்த உலக ஆன்மீக மாநாட்டில், இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ள மன்னருக்கு அழைப்பு வந்தது.
இந்த அழைப்பு மன்னருக்கு வந்த வேலையில்தான் விவேகானந்தர் இராமநாதபுரம் வந்திருந்தார். விவேகானந்தருக்கும் மன்னருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அறிமுகம் நட்பாக மாறியது. நட்பு விவேகானந்தரிடம் மன்னரை பக்தி செலுத்த வைத்தது.
விவேகானந்தர் அறிவாற்றலும், ஆன்மீகச் சிந்தனையும் தெளிந்த பார்வையும், தேர்ந்த ஞானமும் மன்னரை வியக்க வைத்தது. அதனால் தம்மைவிடச் சிறந்தவரான விவேகானந்தர் சிகோகோ செல்வதே சிறந்தது என்று மன்னர் முடிவு செய்தார். முடிவை விவேகானந்தரிடம் தெரிவித்தார். யோசித்துச் சொல்வதாகச் சொல்லிவிட்டு விவேகானந்தர் மன்னரிடம் விடைபெற்றார்.
அதன்பின் தாம் அமெரிக்கா செல்வதாக விவேகானந்தர் சென்னையிலிருந்து அறிவித்தார். அதையறிந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தார்.
1893 மே 31 அன்று அமெரிக்கா புறப்பட்ட விவேகானந்தர், ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் உள்ள சிகாகோவை அடைந்தார்.
உலக ஆன்மீக மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன் ‘மெட்காப்’ என்ற நகரில் மகளிர் மன்றக் கூட்டத்தில் ‘இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் விவேகானந்தருக்குப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இதுதான் அமெரிக்க மண்ணில் ஒலித்த விவேகானந்தரின் முதல் முழக்கமாகும்.
பெண்கள் நிறைந்த அந்த மாநாட்டில் விவேகானந்தரின் முழக்கம் எழுச்சியோடு வரவேற்கப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஒரு இளம் பெண் விவேகானந்தரின் மீது அளவற்ற அன்பு கொண்டாள். அதனால் அமெரிக்காவில் விவேகானந்தரின் ஒவ்வொரு காலடியையும் இந்த இளம் பெண் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினாள்.
இந்த மாநாட்டிற்குப் பின் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்து கொண்ட விவேகானந்தர், அனைத்துச் சமயத்தைச் சார்ந்தவர்கள் பேசுவதையும் கவனித்தார். அங்கு பேசிய மேலைநாட்டு மத போதகர் அனைவரும் “ஜென்டில்மேன்” என்று தங்களின் பேச்சைத் தொடங்கினர். இந்த வார்த்தை கூடியிருப்போருக்கும், சொற்பொழிவாளருக்கும் இடைவெளி ஏற்படுத்துவதாக விவேகானந்தர் எண்ணினார்.
செப்டம்பர் 1-ம்தேதி விவேகானந்தர் பேச வேண்டிய முறை வந்தது. அவர் மேடை ஏறியதும், வேடிக்கைப் பொருளைப் பார்ப்பதுபோல் அனைவரும் விவேகானந்தரைப் பார்த்தனர். அவருடைய காவி உடையும், தலைப்பாகையும் மேலை நாட்டவர்களுக்குச் சிரிப்பை உருவாக்கியது.
பேண்ட், கோர்ட், டை என் மேடையில் பேசியவர்கள் மத்தியில் இப்படியொரு கோலத்தில் விவேகானந்தர் மேடையில் தோன்றியதும், கூடியிருந்தோரில் பலர் முகம் சுளித்தனர். இதுபற்றி அவர் கவலை கொள்ளவில்லை; கண்டு கொள்ளவும் இல்லை.
எடுத்த எடுப்பிலேயே ‘சகோதர சகோதரிகளே!’ என்று தமது சொற்பொழிவைக் கம்பீரமாக விவேகானந்தர் தொடங்கினார். ஏளனம் செய்தவர்கள் வாய் மூடினர். ஆடையைக் கண்டு அறுவறுப்டைந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் விவேகானந்தர் தமது பேச்சைத் தொடங்கினார். அரங்கம் முழுவதம் அவரையே பார்த்தது; அவர் பேச்சை மட்டுமே கேட்டது; அவர் சொல்வதைத் தங்கள் மனதில் பதிந்து கொண்டது. இந்தக் கூட்டத்தில ஆடையிலும், தோற்றத்திலும் அவர் தனித்து நின்றார் மேடை முழக்கத்திலும் அவரே தனித்து வென்றார். பேசி முடித்த பின் அவரைத் தொடர்ந்து ஒரு கூட்டமே வந்தது.
அந்தக் கூட்டத்தில் ‘மெட்காப்’ நகர் மகளிர் மன்றத்தில் விவேகானந்தர் பேசிய போது மனதைப் பறிகொடுத்த அந்த இளம் பெண்ணும் இருந்தாள்.
இந்த மாநாட்டில் மீண்டும் செப்டம்பர் 15, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் விவேகானந்தர் முழங்கினார். அப்போது,
“அளவுக்கு மீறிய மதப்பற்று, மூடபக்தி இவற்றிலிருந்து தோன்றிய மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாகப் இறுகப் பற்றியுள்ளன; வன்முறையை நிரப்பியுள்ளன; அடுத்தடுத்து உலகை உதிரப் பெருக்கில் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ சமுதாயங்களை நம்பிக்கை இழக்கச் செய்து விட்டன. அந்தப் பயங்கரப் பைசாக் கொடூரச் செயல்கள் தோன்றாதிருப்பின், மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பன்மடங்கு உயர் நிலை எய்திருக்கும்” என்று விவேகானந்தர் முழங்கினார்.
விவேகானந்தர் பேசிவிட்டு வெளியில் வந்ததும் ஒரு பெரும் கூட்டம், அவரிடம் கையெழுத்துப் பெறுவதற்காகக் காத்திருந்தது…. அவற்றில் அந்தப் பெண்ணும் இருந்தாள்.. அந்தப் பெண் யார்?
மெட்காப் மகளிர் மன்றத்தில் விவேகானந்தர் பேசியதைக் கேட்டு, அவரைத் தனிமையில் சந்திக்க முயன்றாள். அது முடியாமல் போயிற்று!
சிகாகோவில் விவேகானந்தர் நான்கு நாட்கள் முழங்கிய போதும், வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு விவேகானந்தரைத் தனிமையில் சந்தித்து விட வேண்டும் என்று விரும்பினாள்; அப்போதும் அதற்கு வாய்ப்புக் கிட்டவில்லை!
அதன்பின் விவேகானந்தரின் மந்திரச் சொற்பொழிவைக் கேட்டு மயங்கிய அமெரிக்கர்கள், அயோவா, செயிண்ட் லூயிஸ், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன், நியூயார்க் ஆகிய இடங்களில் எல்லாம் விவேகானந்தரைப் பேச வைத்து மகிழ்ந்தனர்.
அத்தனை இடங்களுக்கும் அந்தப் பெண் வந்தாள்; விவேகானந்தரின் முழக்கத்தைக் கேட்டாள்; அப்போதும் அவளுக்கு விவேகானந்தரைத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பு வாய்க்கவில்லை.‘செயின்ட் லாரன்ஸ்’ என்ற நகரில் உள்ள தீவுப் பூங்காவில் விவேகானந்தர் ஐம்பது நாட்கள் ஓய்வெடுத்தார் அப்போதும அந்தப் பெண் அந்தத் தீவுப் பூங்காவிற்கு ஒவ்வொரு நாளும் வந்தாள். இருப்பினும் விவேகானந்தரை அவளால் தனிமையில் சந்திக்க இயலவில்லை.
விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்தபோதே அவருடைய சொற்பொழிவுகள் நூல்வடிவம் பெற்று அமெரிக்க மக்களிடத்தில் மகத்தான வரவேற்பைப் பெற்றன.
அந்தப் புத்தகங்களைக் கையில் ஏந்தியபடி விவேகானந்தர் தங்கியிருக்கும் இடத்திற்குச்சென்று தனிமையில் அவரைச்சந்திக்க அந்தப் பெண் முயன்றாள். இருப்பினும் அவளுடைய முயற்சி பயன் தரவில்லை!
அமெரிக்காவிலிருந்து விவேகானந்தர் பாரீசுக்கு புறப்பட்டார். அமெரிக்க விமானத்தளத்தில் வைத்து ந்தப் பெண் விவேகானந்தரை மடக்கி விட்டாள்!
“தங்களிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும்” என்றாள்.கூட்டத்திலிருந்து விலகிய விவேகானந்தர், “சொல்லு! தாயே! என்றார்.அந்தப் பெண்ணுக்கோ இருபது வயது இருக்கும்…அப்போது விவேகானந்தருக்கு முப்பது வயது…அந்தப்பெண்ணோ நவ நாகரீக மங்கை…விவேகானந்தரோ முற்றும் துறந்த முனிவர்…
எதற்காக விவேகானந்தரை விரட்டி விரட்டி அந்தப் பெண் பின் தொடர்கிறாள்?
மீண்டும், “சொல்லு தாயே!” என்றார் விவேகானந்தர்.
“நான் மெட்காப் நகரில் நடந்த மகளிர் மாநாட்டில் இருந்து உங்களைக் கவனித்து வருகிறேன்.. தனிமையில் சந்தித்துப் பேச பலமுறை மயன்றும் முடியாமல் போயிற்று.. இனியும் காலம் தாழ்த்தினால் காரியம் கெட்டுவிடும் என்பதனால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டேன்.
அமெரிக்க இளைஞர் பலர் என் அழகில் மயங்கி, என்னை அன்றாடம் சுற்றி வருகின்றனர. ஆனால் நான் உங்கள் அறிவில் மயங்கி உங்களைச்சுற்றி வருகிறேன்..” என்று தயங்கினாள்.
“அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் தாயே” என்றார் விவேகானந்தர்.“என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாம் திருமணம் செய்து கொண்டால் எனது அழகோடும் உங்கள் அறிவோடும் நமக்கு குழந்தை பிறக்கும்.. அதற்காகத்தான் நான் உங்களிடம் தனியாகப் பேசுவதற்கு அலைந்து கொண்டிருந்தேன்” என்றாள் அந்தப் பெண்!
“தாயே! எனக்கு முப்பது வயது! உனக்கோ சுமார் இருபது வயது இருக்கலாம். நாம் திருமணம் செய்து, நமக்குக் குழந்தை பிறந்து, அந்தக் குழந்தை வளர்ந்து, இருபது வயதைத் தொடுகின்றபோதுதான் அந்தக் குழந்தை அறிவு மிக்கதா? இல்லையா? என்பது தெரியும். அதற்குப் பதிலாக நீ என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே!” என்றார் விவேகானந்தர்.
இந்தப் பதிலைக் கேட்டு அந்தப் பெண் விக்கித்துவிட்டாள்.ஆம்! காணுகின்ற பெண்களை எல்லாம் தாயாக்க் கருதியவர் விவேகானந்தர் என்பது அப்போதுதான் அந்தப் பெண்ணிற்குப் புரிந்தது!
1893-ல் விவேகானந்தர் சொன்ன கருத்துக்கள் இப்போதும் நினைவுபடுத்த வேண்டிய நிலையில்தான் உலகமும், இந்தியாவும், தமிழகமும் இருக்கிறது.
சிகாகோவிலிருந்து உலகில் பல நாடுகளுக்கு விவேகானந்தர் சுற்றுப் பயணம் செய்துவிட்டு, 1897 ஜனவரியில் இராமேஸ்வரத்தில் உள்ள குந்தக்கல்லுக்கு வந்தார். அவர் வருவதை அறிந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி குந்தக்கல் வந்து காத்திருந்தார்.
கப்பலில் வந்து இறங்கிய விவேகானந்தர் தம் பாதங்களை முதன்முதலில் தம் தலையில் வைத்து விட்டுத்தான் மண் மீது பட வேண்டும் என்றார் மன்னர். ஆனால் மனித நேயம் கொண்ட விவேகானந்தர் அதற்கு இணங்கவில்லை.
உலக முழுவதும் இந்தியாவின் சிறப்பையும், இந்து மத்ததன் மேம்னையும் முழங்கி வந்த விவேகானந்தர் 1902 ஜூலை 4 அன்று மறைந்தார்.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்த இடம் ‘விவேகானந்தர் பாறை’ என்று அழைக்கப்படுகிறது.
சிகாகோவில் பேசிவிட்டு விவேகானந்தர் முதன் முதலில் தமிழகத்தில் வந்த இறங்கினார். அதுவும் எந்த மன்னர் தமது அமெரிக்கப் பயணத்திறகுக் காரணமாக இருந்தாரோ, அந்த மன்னர் வாழுகின்ற இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரத்தில்தான் விவேகானந்தர் இறங்கினார்.
விவேகானந்தர் ஒரு காலைப் பதித்து மற்றொரு காலை மண்ணில் வைத்த அந்த இடம் இன்றும் ‘குந்துக்கால்’ என்று அழைக்கப்படுகிறது.
சென்னையில் விவேகானந்தர் தங்கிய இடம் ‘விவேகானந்தர் இல்ல’மாகக் காட்சியளிக்கிறது.
இவை எல்லாவற்றையும் விட, விவேகானந்தரின் சீடராக நிவேதிதா இருந்ததும்.
நிவேதிதா - தேவியின் சீடராக மகாகவி பாரதியார் வாழ்ந்ததும் சிறப்பு மிக்கவைகளாகும்.




மாமேதைகள்

தத்துவ ஞானி சாக்ரடீஸ்

கிரேக்க நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.
கிரேக்க நாட்டின் த்த்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார்.
சிறிது காலம் இராணுவத்தில் பணியாற்றிய சாக்ரடீஸ் அந்தப் பணியில் ஈடுபாடு இல்லாததால் வேலையை விட்டு வெளியேறினார்.
சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற்பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது; செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது.
சிறுவனாக இருந்த போதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்த வழக்கம் அவர் வளர வளர வளர்ந்தது.
எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே அவருடைய வளர்ச்சிக்குக் காரணமாயின.
பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை சாக்ரடீஸ் செலவிட்டார்.
ஆனால் மற்றவர்கள் சக்ரடீஸீடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப் பதில் சொல்வதை அவர் தவிர்த்தார்.
ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாக்க் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ்.
பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார்.
இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர்.
இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். அவர்களின் நம்பிக்கையும் வீண் போகவில்லை.
சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது.
அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும்.
இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.
நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளிதான் என்று தீர்ப்புக்கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர்.
தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திருநாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் நமக்குத் தண்டணைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ்.
ஆனால் தண்டனை வழங்குவதாக இந்த நீதி மன்றம் முடிவு செய்தால், அது அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்றும்; அந்த அபராதத் தொகையைத் தமது நண்பர்கள் அரசுக்குச் செலுத்த தயாராக இருப்பதாகவும் நீதி மன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார்.
சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர்.. அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலை ஊட்டியது. அதனால் நீதிபதிகள் சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை அறிவித்தனர்.
நீதிமன்ற விசாரணையின் போது சாக்ரடீஸ் செய்த மூன்று சொற்பொழிவுகள் அவருடைய அறிவு விசாலத்தையும் அஞ்சாமையையும், வெளிப்படுத்துவதாக அமைந்தது.
சாக்ரடீஸ் சிறையில் இருந்தபோது அவருடைய நண்பர் கிரிட்டோ என்பவர் சாக்ரடீஸைச் சந்தித்து, சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு ஆலோசனை கூறினார். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைத் தாம் செய்வதாகவும் கூறினார். அதற்கு,
“நான் தப்பிச் செல்வது பொது மக்களின் கருத்துகளுக்கும், என் மீது தொடுக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கும் நான் பணிந்து விட்டதாக ஆகிவிடும். அத்துடன் என் வாழ்நாளில் நான் கொண்டிருந்த கொள்களைகளுக்கும் எதிராக அமைந்ததாகும்.
நீதிமன்ற விசாரணையின்போது, நான் சாவைக்கூட சந்திக்க தயார்; மன்னிப்புக் கேட்க முடியாது , என்று கூறி சாக்ரடீஸ் தப்பிச்செல்ல மறுத்ததுடன், சாவை எதிர்கொள்ள மகிழ்வுடன் இருந்தார்.
சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது…
அவருடைய கால் விலங்குகள் அகற்றப்பட்டு, விஷம் கொடுக்க வேண்டும் என்பது நீதிபதிகளின் தீர்ப்பு.
இறுதியாக சாக்ரடீஸைக் காண்பதற்கு அவருடைய நண்பர்களும், மனைவி தம் குழந்தைகளுடனும் வந்திருந்தனர்.
சாக்ரடீஸின் இறுதி முடிவைக் காணச் சகிக்காது அவருடைய மனைவி அழுது துடித்தாள்.
மனைவியையும், குழந்தையையும் வீட்டிற்கு அனுப்பி வைத்த பின், சாக்ரடீஸின் விலங்குகள் அகற்றப்பட்டன. மெதுவாகத் தம் கால்களை சாகரடீஸ் பிணைந்து கொண்டார்.
அப்போது தாம் நண்பர்களிடம் “உடல்தான் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய சிறைச்சாலை அந்த உடலிருந்து நமது உயிர் தாமாக தப்பிவிட முடியாது. உடம்பு என்ற சிறையிலிருந்து உயிர் விடுதலையாவது பேரானந்தம்!” என்று தத்துவார்த்தமாக சாக்ரடீஸ் பேசினார்.
“மரணத்தைச் சந்திக்கும் வேளையில் அதிகமாகப் பேசக் கூடாது” என்று விஷம் கொடுக்கும் பொறுப்பில் இருந்த அதிகாரி சாக்ரடீஸிடம் சொன்னான். ஆனால் அவர் அது பற்றிக் கவலை கொள்ளாமல் நகைச்சுவையுடன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
இறுதியாக சாக்ரடீஸ் குளித்து முடித்தார்.
“மரணத்திகுப் பின் உங்களை எப்படி சவ அடக்கம் செய்ய வேண்டும்?” என்று நண்பர்கள் சாக்ரடீஸிடம் கேட்டார்கள்.
அதற்கு, “நீங்கள் எப்படிச் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!” என்றார் சாக்ரடீஸ்.
சிறை அதிகாரி ஒரு கோப்பை விஷத்தை சாக்ரடீஸீடம் நீட்டினார்.
நண்பர்கள் எல்லாம் கண்ணீர் சிந்தியபடி சாக்ரடீஸையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார்.
அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும்… குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும்… உங்கள் கால்கள் செயல் இழக்கும்போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன்
கவலை கொள்ளாது, கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர்.
“பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு,சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கினார்.
சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார்.
விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் கால்களை அமுக்கியபடி, “நான் உங்களை கால்களை அமுக்குவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்றான்.
“இல்லை” என்றார் சாக்ரடீஸ்.
சிறிது நேரத்தில் அவர் விழிகள் மூடின!
தம்மை ‘அறிஞன்’ என்று அழைப்பதை வெறுத்த சாக்ரடீஸ் என்ற அந்தப் பேரறிஞனின் ஆயுள் முடிந்தது.
அவருடைய தத்துவங்களையும், போதனைகளையும் அவருடைய சீடரான பிளாட்டோ எழுதி வைத்தார். அதுதான இன்றும் சாகரடீஸை மக்கள் நெஞ்சில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது