எம் அன்பு உள்ளங்களே!
எமது விடிவை நோக்கி விழித்திருந்து செயற்படுங்கள், வேங்கைகளின் வேகத்தைக் கொண்ட எமது வேகத்தைக் குறைக்காதீர்கள். மூன்றாம் கட்டப் போரையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு நிம்மதியாக இளைப்பாறுவோம், ஓய்வு பெறுவோம். நாம் எடுக்கும் பணியைத் திறம்படச் செய்து, ஏழு ஜென்மம் எடுத்தாலும் பெறமுடியாத புண்ணியத்தை இந்த ஜென்மத்தில் நாம் பெறுவோம். நாடு கடந்த தமிழீழ அரசு ஓர் தனித்துவமான அரசியல் நகர்வு. இதுவரை எங்குமே அமைக்கப்படாத ஓர் புதுமைமிக்க அரசாங்கம். புலம்பெயர் அரசைவிட பலமடங்கு சாத்தியமானதும், 21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற ஓர் புதிய அரசியல் முன்னெடுப்பு. உலகில் எந்த இனத்திற்குமே கிடைக்கமுடியாத ஓர் அரிய வாய்ப்பை அந்த ஆண்டவன் எமக்குத் தந்திருக்கிறார். ஜந்து கண்டங்களிலும், முப்பதிற்கும் அதிகமான முக்கியமான நாடுகளில் நாம் வாழ்வதால் எமக்குக் கிடைத்த பலத்தின் எதிரொலிதானே இந்தத் தமிழீழ அரசிற்கான வழிகோலல். கணிசமான அளவில் உலகில் செறிந்து வாழும் எம் புலம்பெயர் மக்களின் பலம் உலகை ஆக்கிரமித்தவர்களுக்கே கிடைக்காத ஓர் வலிமைமிக்க சக்தி. நாம் தேடாமலே எமக்குக் கிடைத்த பாக்கியம். கனடா நாட்டின் புலம்பெயர் தமிழீழ அவைக்கான 25 பிரதிநிதிகளின் தேர்வை ஜனநாயக முறையில் நடாத்த, போட்டியிடும் அவைக்கான பிரதிநிதிகள் தொடக்கம் தொண்டர்கள்வரை எம்முடன் சேர்ந்து எமது வேலைகளைச் செய்ய, எம் தேவைகளைக் கவனிக்க இன்னும் பலர் தேவை. இந்த வருடம் மே மாதம் 2 ம் திகதி நடக்கவிருக்கும் இத்தேர்தலை சிறப்பாகவும், நீதியாகவும் நடாத்த உங்கள் பங்களிப்பு முக்கியமானதும் தேவையானதும். இதில் பங்குகொள்வது உங்கள் கடமையும் உரிமையும் அல்லவா? இளையோர், பெண்கள், முதியோர் எல்லோரையும் எம்முடன் சேருங்கள், சேர்ந்து உங்கள் திறமைக்கு ஏற்ற பணியைச் செய்து திறமைமிக்க, சாணக்கியமான, இராஜதந்திரமுடைய நாடு கடந்த தமிழீழ அரசின் அவைக்கான பிரதிநிதிகளை தெரிவுசெய்ய உதவுமாறு அன்புடன் அழைக்கிறோம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment