கஜேந்திரன் குழுவினரின் அட்டகாசங்கள் யாழ்ப்பாணத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்ஈழம் பெற்றுத்தருவோம் என பத்திரிகைகளில் அறிக்கை விடும் கஜேந்திரன் குழுவினர் யாழ்ப்பாணத்தில் அரசாங்க படைகளுடனும் டக்ளஸ் குழுவுடனும் இணைந்து செய்து வரும் அட்டகாசங்களால் யாழ்ப்பாண மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இராணுவ பாதுகாப்புடனும் டக்ளசின் ஆசிர்வாதத்துடனும் யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் கஜேந்திரன் குழுவினர் டக்ளஸ் வெல்லுவதை பற்றி பரவாயில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட வேண்டும் என கூறிவருகின்றனர்.வெள்ளைவானில் வரும் கஜேந்திரன் குழுவினர் நள்ளிரவு வேளையில் கூட சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். கூட்டமைப்பு துண்டுப் பிரசுரம் ஒட்டியுள்ள இடங்களில் அதை கிழித்து விட்டு தங்களின் சுவரொட்டிகளை ஒட்டிவருகின்றனர்.இலங்கை அரசின் பூரண ஆதரவுடனேயே கஜேந்திரன் குழுவினர் தேர்தலில் களமிறக்கப்பட்டிருப்பதாகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேசிக்கொள்கிறார்கள். கஜேந்திரன் மீது இலங்கை அரசாங்கம் முன்னர் தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற்றதுடன் பல கோடி ரூபாய்களை கஜேந்திரன் குழுவுக்கு மகிந்த ராசபக்ச அரசு வழங்கியுள்ளதாக யாழ். பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீட மாணவர்கள் பேசிக்கொள்கின்றனர்.கஜேந்திரனும் பத்மினியும் வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் மகிந்த, கோதபாயா, டக்ளஸ் ஆகியோரை சந்தித்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. கூட்டமைப்பை தோற்கடிப்பதே தங்கள் நோக்கம் என்றும் உங்களுக்கு எதிராக செயற்படமாட்டோம் என கஜேந்திரன் டக்ளசுக்கு உறுதி கூறியதாகவும் சிலர் பேசிக்கொள்கிறார்கள். கஜேந்திரன் குழுவுக்கு டக்ளசுடனும், மகிந்த ராசபக்ச அரசுடனும் இருக்கும் நெருங்கிய தொடர்பு பற்றி எமக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளது. இதை ஊடகங்களில் வெளியிடுவதால் எமக்கு அரசாங்கத்தினால் அச்சுறுத்தல் வரலாம் என்பதுடன் சட்டபிரச்சினை காரணமாகவும் இதை தற்போது வெளியிடாமல் இருக்கிறோம். இதுபற்றி எம்முடன் தொடர்பு கொண்டால் முழுவிபரங்களையும் நாங்கள் தருவோம்.
யாழ்ப்பாணத்திலிருந்து சி.பரம்சோதி
No comments:
Post a Comment