*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Friday, March 26, 2010

'வடக்கும் தம்மிடம் இருந்து பறிபோய் விடுமோ...?' - தமிழர்கள் அஞ்சுகிறார்கள் என்கிறார் இந்திய எழுத்தாளர்


சிறிலங்காவில் ஏப்ரல் 8ஆம் நாள் இடம்பெறுவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் வாக்குகளைக் கவருவதற்கான போட்டி குறிப்பாகத் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் புதுவேகம் கண்டிருக்கிறது.
இந்தப் புறநிலையில், நீண்ட பல வருடங்களாகத் தொடர்ந்த போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் செறிந்து வாழும் யாழ்ப்பாணக் குடாநாடு நோக்கியும் வன்னிப் பெருநிலப்பரப்பு நோக்கியும் சிங்களப் பெரும்பான்மை இனத்தவர்கள் படையெடுக்கத் தொடங்கியிருப்பதானது பதற்ற நிலையை ஏற்படுத்திவிடும் என தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் சுட்டிக் காட்டுகின்றன.இவ்வாறு Indian Express ஊடகத்தில் எழுதியுள்ளார் பி.கே.பாலசந்தின். அதனைப் புதினப்பலகை-க்காகத் தமிழாக்கியவர் தி. வண்ணமதி.
பி.கே.பாலசந்தின் தொடர்ந்து எழுதியுள்ளதாவது: சிறிலங்காவினது அரச படையினருக்கென வன்னிப் பகுதியில் நிரந்தரப் படைத் தளங்கள் அமைக்கப்படுவது தொடர்பில் தமிழ்த் தேசியவாதக் கட்சிகளுள் பலமான கட்சியாகத் திகழும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. “இவ்வாறாக நிரந்தர முகாம்களை அமைக்கும் செயற்பாட்டின் ஒர் அங்கமாக ஏற்கனவேயுள்ள படை முகாம்கள் படையினருக்கான வீட்டுத் திட்டங்களாக மாற்றப்படுகின்றன. இதன் காரணமாக வடக்கினது சனத் தொகையில் சிங்களவர்களது எண்ணிக்கை பெரிதும் அதிகரிக்கும்" என யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகிறார். “வன்னிப் பகுதியில் மட்டும் தற்போது 40,000 துருப்புக்கள் நிலை கொண்டிருக்கிறார்கள். கூடிய விரைவில் இந்தப் படையினருடன் அவர்களது குடும்பங்களும் இணைந்து கொள்வார்கள்.
இராணுவத்தினருக்கான குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டவுடன், சிங்களப் பாடசாலைகள் மற்றும் புத்த கோவில்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் வன்னியில் மேற்கொள்ளப்படும். இவற்றின் காரணமாக, வன்னிப் பெருநிலப்பரப்பின் இன- கலாச்சார ரீதியான பரம்பலில் பாரிய மாற்றங்கள் தோன்றும்” என சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிடுகிறார். கடந்த 30 வருடங்களாகத் தொடர்ந்த போரின் விளைவாக - தமிழர்களே தனித்துவமான வாழ்ந்து வந்த வன்னிப் பெருநிலப்பரப்பு தனது வனப்பையும் சுயத்தையும் இழந்து நிற்பதாகத் தமிழ்த் தேசியவாதிகள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
கடந்த இரண்டு வருடங்களாக இடம் பெற்ற உக்கிர மோதல்களின் விளைவாக, இப்பகுதிகளில் எஞ்சியிருந்த மக்களும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். கொக்காவில் பகுதியில் சிறிலங்காப் படையினரின் குடும்பங்களுக்கான 4,000 வீடுகள் அமைக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான சிறீதரன் குறிப்பிட்டதாக சுடரொளி பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. இவ்வாறாக, கொக்காவில் பகுதியில் குடியமர்த்தப்படவிருக்கும் 4000 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த 8000 மாணவர்களுக்கெனச் சிங்களப் பாடசாலைகள் அமைக்கப்படும் நிலை தோன்றும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
இது போல - ஆனையிறவுக்கு அண்மையாக - பளை மற்றும் இயக்கச்சிப் பகுதியிலும் படையினருக்கான வீட்டுத் திட்டங்கள் அமைக்கப்பட இருப்பதாக சிறீதரன் கூறுகிறார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் பௌத்த கோவில்கள் மழைக் காலக் காளான்கள் போல முளைக்கத் தொடங்கிவிட்டதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டார்.
வன்னியின் மேற்குப் பகுதியில் மன்னாரின் மாதோட்டத்தில் அமைந்திருக்கும் வரலாற்றுத் தொன்மை வாய்ந்த திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு அண்மையில் புதிய பௌத்த ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். யாழ் குடாநாட்டுக்கு வருகை தரும் சிங்கள வர்த்தகர்கள் குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தங்களின் வியாபாரத் தளங்களைத் தற்காலிகமாக நிறுவி வருகிறார்கள். “இவ்வாறாக சிங்கள வர்த்தகர்கள் குடாநாட்டில் நிரந்தரமாக நிலைகொண்டு விடுவார்கள். மாநகர மற்றும் நகரசபைகள் எங்களது கட்டுப்பாட்டின் கீழ் இல்லாதமையினால், சட்ட விரோதமாக நிலைகொள்ளும் இவர்களை எங்களால் எதுவும் செய்யமுடியாது போகும்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சுற்றாடலிலும் சிங்கள வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். கோவில் திருவிழா நாட்களில் மாத்திரமே இப்பகுதிகளில் வியாபாரச் செயற்பாடுகளை அனுமதிப்பதே வழமையாக இருந்து வருகிறது.
சிங்கள வியாரிகளின் இந்தச் சட்டவிரோதச் செயற்பாடுகளை எதிர்த்துக் கேள்வி எழுப்புவதற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது" என அவர் ஆதங்கப்பட்டுக் கொண்டார். 'சிறிலங்காவில் வாழும் அனைத்துச் சமூகங்களுக்கும் இந்தத் தீவு சொந்தமானது. ஆதலினால், நாட்டினது தென் பகுதியில் சிறுபான்மைத் தமிழர்கள் சிங்களவர்களுடன் இணைந்து எவ்வாறு நட்புடன் வாழுகிறார்களோ அதே போல தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டினது வடக்குப் பகுதிகளில் சிங்களவர்களும் தமிழர்களுடன் இணைந்து வாழுவதற்கு வழி செய்யப்பட வேண்டும்’ என சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது.
தமிழ் ஆயுதக் குழுக்கள் முளைவிடுவதற்கு முன்னர் நாட்டினது வடக்கில் சிங்களவர்களும் வாழ்ந்து வந்ததை அரச தரப்பினர் சுட்டிக் காட்டுகிறார்கள். வன்னிப் பகுதியில் படை முகாம்கள் காளான்கள் போல முளைக்கத் தொடங்கிவிட்டன என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க, புதிதாக எந்தப் படைத் தளங்களும் உருவாக்கப்படவில்லை எனக் கூறினார்.
விடுதலைப் புலிகளிடமிருந்து எழக் கூடிய அச்சுறுத்தல்களில் இருந்து தமிழர்களைப் பாதுகாப்பதற்காகவே வன்னியில் படையினர் தொடர்ந்தும் நிலை கொண்டிருக்கிறார்கள் என அவர் வலியுறுத்தினார்.





No comments:

Post a Comment