*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Friday, March 26, 2010

வடக்கில் காளான்களாக முளைக்கும் விகாரைகள்!


யாழ்ப்பாணக் குடாநாட்டில் பௌத்த விகாரைகள் காளான்கள் போல தோன்ற ஆரம்பித்துவிட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத யாழ் சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டதாக Indian Express தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எழுதியுள்ள பி.கே.பாலசந்திரன், வன்னியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மன்னார் மாவட்டத்தின் மாதோட்டப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு அருகாமையில் புதிய பௌத்த விகாரையொன்று அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
யாழ் குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சிங்கள வர்த்தகர்கள் குடாநாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வியாபார நிலையங்களை அமைத்து வருவதால் அவர்கள் குடாநாட்டில் நிரந்தரமாக நிலைகொண்டு விடுவார்களோ என்ற அச்சம் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சுற்றாடலில் திருவிழா நாட்களிலேயே தற்காலிக வியாபார நிலையங்களை அமைப்பதற்கு அனுமதிப்பது வழக்கமாக இருக்கின்ற போதிலும், தற்போது சிங்கள வர்த்தகர்கள் இக்கோவிலின் சுற்றாடல் பகுதியில் வியாபார நிலையங்களை அமைத்து வருவதை அவதானிக்க முடிகிறது.
சிங்கள வியாரிகளின் இந்தச் சட்டவிரோதச் செயற்பாடுகளை எதிர்த்துக் கேள்வி கேட்பதற்கு இங்கே எவருக்கு அதிகாரம் இருக்கிறது என அச்சட்டத்தரணி கவலை தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்





No comments:

Post a Comment