*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Friday, March 26, 2010

'சிங்கள' யாழ்ப்பாணம்


யாழ்ப்பாணம், நல்லூர் கோவிலில் கும்பிட்டுக்கொண்டிருக்கும் போதுதான் அந்த அசாதாரண காட்சியைக் காணக்கூடியதாக இருந்தது.அருகே நின்று நல்லூர் கந்தனை வழிபட்டுக்கொண்டிருந்த பலர் சிங்களவர்கள்.அதில் பெரும்பாலானவர்கள் - பௌத்த விகாரை ஒன்றுக்குச் செல்லும் பாணியில் கைகளில் மலர் தட்டுக்களுடன் வந்திருந்தார்கள்.பௌத்த பிக்குகளையும் இந்தக் கூட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது.
இவர்கள் கும்பிட்டுக்கொண்டு இருந்தார்கள் என்று சொல்வதை விட கோவில் சுற்று வட்டாரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள் என்று சொல்வது தான் பொருத்தமானதாக இருக்கும். படங்களிலும், செய்திகளிலும் மட்டுமே அவர்களால் பார்க்கக் கூடியதாக இருந்த நல்லூர் கோவிலுக்கு நேரில் வரக்கிடைத்த பிரமிப்பை அவர்களுடைய முகங்களில் காண முடிகின்றது.
கனவாக மட்டுமே இருந்ததை நேரில் பார்த்த பெருமிதத்தையும் அவர்களிடம் காண முடிந்தது.நல்லூர் சுற்று வட்டாரங்களில் தற்போது சிங்கள மக்களுடைய நடமாட்டமே அதிகளவுக்கு இருப்பதை அவதானிக்க முடிகின்றது.தேர்தலில் வாக்கு வேட்டைக்காக வந்த சிங்கள அரசியல்வாதிகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றி யாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்கும் சிங்களவர்களின் எண்ணிக்கை தற்போது பெருமளவுக்கு அதிகரித்திருக்கின்றது. யாழ்ப்பாணம் வரும் சிங்களவர்கள் எல்லோருமே தமது விஜயத்தின் முதலாவது கட்டமாக நல்லூர் கந்தசுவாமி கோவிலைத் தரிசிக்க அல்லது பார்வையிட வருவார்கள். அதனால் நல்லூர் சுற்று வட்டாரங்களில் நின்றுகொண்டால் தினசரி யாழ்ப்பாணத்துக்கு எவ்வளவு சிங்களவர்கள் வந்து செல்கின்றார்கள் என்பதை ஓரளவுக்குக் கணக்கிட்டுக்கொள்ள முடியும். ஏ-9 பாதை திறக்கப்பட்டு சுதந்திரமான போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனைப் பயன்படுத்தி யாழ்ப்பாணம் வந்து செல்பவர்களில் சிங்கள மக்கள் தான் அதிகம் என்பதை யாழ்ப்பாணம் சென்ற போதுதான் காணக்கூடியதாக இருந்தது. தென் பகுதியிலிருந்து குறைந்த பட்சம் 25 பஸ்களிலாவது சிங்களவர்கள் நாளாந்தம் குடாநாட்டுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைவிட ஹைஎஸ் வான்கள், பஜிரோக்கள் போன்றவற்றிலும் சிங்களவர்கள் பெருமளவுக்கு யாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்கின்றார்கள். தென் பகுதியிலுள்ள அரசியல் தொடர்புடைய வட்டாரங்களும், பௌத்த மத சார்பான அமைப்புக்களும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுடன் ஒவ்வொரு பகுதிகளிலிருந்தும் யாழ்ப்பாணப் பயணத்துக்காக ஆட்களைத் திரட்டுகின்றனர். உடனடியாகவே சிங்களவர்கள் இந்தக் குழுக்களில் இணைந்துகொள்வதுடன், விருப்பத்துடன் யாழ்ப்பாணம் வருவதாகவும் அவ்வாறு சென்றுவந்த ஒருவர் தெரிவித்தார். நல்லுர் கந்தசுவாமி கோவிலில் ஆரம்பமாகும் இவர்களுடைய யாழ்ப்பாணப் பயணம், யாழ் நகரிலுள்ள நாகவிகாரை, நயினாதீவு, தென்மராட்சி என விரிவடைந்துகொண்டு செல்லும்.
குடாநாட்டிலுள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கும் இவர்கள் செல்கின்றார்கள். இதனைவிட கிளிநொச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரையும் இவர்களுடைய கவனத்துக்குரிய முக்கிய இடமாக உள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தங்கு விடுதிகள் அனைத்துமே 'ஹவுஸ் ஃபுல்"லாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் பாடசாலைகளிலும், சிலர் துரையப்பா விளையாட்டரங்கிலும் கூட தங்கியிருப்பதாகத் தெரிகின்றது. அத்துடன் யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியிலுள்ள பல வீடுகள் விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் வீடுகளுக்கு பலத்த கிராக்கியும் ஏற்பட்டுள்ளது. சமையல் பாத்திரங்களுடன் அரிசி, பருப்பு, உப்பு, கருவாடு என எல்லாவற்றையுமே கொண்டுவரும் இவர்கள் தாம் தங்கியிருக்கும் இடங்களில் அடுப்புமூட்டி சொந்தமாகச் சமைத்துத்தான் சாப்பிடுவார்கள். சாப்பாட்டுக் கடைகளில் போய் சாப்பிடுபவர்களைக் காண முடியாது. யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்களுடைய வருகை அதிகரித்திருப்பதற்குச் சமாந்தரமாக சிங்கள வர்த்தகர்களும் பெருமளவுக்குக் கடை விரித்துள்ளார்கள். வீட்டுத் தளபாடங்களிலிருந்து, சிறிய சிறிய பொருட்கள் வரையில் சந்தையில் நிறைந்துள்ளன. சிறிய ரக தோடம்பழம் குவிந்துகிடக்கின்றது. யாழ்ப்பாணத்தில் தினசரி ஒன்பது லட்சம் ரூபாவுக்கு இந்தத் தோடம்பழம் விற்பனையாகின்றது. சிங்களவர்களின் அதிகரித்த வருகையுடன் யாழ்ப்பாணப் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பிலும் பல மாறுதல்கள் திடீரென உருவாகத் தொடங்கியுள்ளது. யாழ். நகரின் மத்தியிலுள்ள வீதியோரக் கடைகளில் விலைப் பட்டியல் அறிவித்தல்கள் அனைத்தும் சிங்கள மொழியில் மட்டுமே வைக்கப்பட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக வீதியோரங்களில் தோடம்பழங்களைக் குவித்து வைத்திருப்பவர்கள் சிங்கள மொழியில் மட்டுமே விலைகளைக் குறித்துவைத்துள்ளார்கள். யாழ். நகரிலும், நல்லூர் கோவிலை அடுத்துள்ள பகுதிகளிலும் கடை வைத்திருப்பவர்கள் மத்தியில் இதனால் ஒரு புதிய போட்டி உருவாகியிருக்கின்றது. சிங்கள மொழி தெரிந்தால் தான் அவர்களால் தமது வர்த்தக நடவடிக்கைகளை அதிகரித்துக்கொள்ள முடியும். அதனால் சிங்களம் தெரிந்த பணியாளர்களைப் பலரும் தேடத் தொடங்கியுள்ளார்கள்... யாழ்ப்பாண சமூகத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் மாற்றங்களை உள்வாங்கி அதற்கேற்றவாறு தம்மை மாற்றிக்கொள்ளும் தன்மையைக் கொண்டவர்கள். இதனால் சிங்களவர்களின் அதிகரித்த வருகையால் ஏற்படும் திடீர்ப் பொருளாதார வாய்ப்புக்கள் சமூகத்தில் ஆரோக்கியமற்ற மாற்றங்களை உருவாக்கக்கூடிய ஆபத்துக்கள் உள்ளது. இதனையிட்டு சமூகவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். சிங்களவர்களின் அதிகரித்த வருகையையிட்டு யாழ்ப்பாணத் தமிழர்கள் பாதகமான ஒரு மனநிலையை வெளிப்படுத்தவில்லை. யாழ்ப்பாணத்தில் சிங்கள மகாவித்தியாலயம் ஒன்று ஏற்கனவே இயங்கியது. 1977 வரையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் பெருமளவுக்குக் கல்வி கற்றுள்ளார்கள். ஆனால், தற்போது அதிகரிக்கும் சிங்களவர்களின் வருகையின் பின்னால் உள்ள அரசியல் தான் தமிழர்களின் இதயங்களைத் தாக்குகின்றது. போரின் மூலமாகத் தாம் வெற்றி கொண்ட தமிழர்களின் தலைநகரையும் அந்த நகரத்து மக்களையும் பார்வையிடுகின்றோம் என சிங்களவர்களின் மனதில் காணப்படும் ஒருவித இறுமாப்புத் தான் தமிழர்களின் இதயங்களைப் பிளப்பதாக இருக்கின்றது. அதாவது போர் வெற்றியின் அடுத்த கட்டமாகத் தான் அவர்களுடைய இந்த யாழ்ப்பாண விஜயங்கள் அமைந்துள்ளன.





No comments:

Post a Comment