*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Wednesday, March 24, 2010

தலைவர் பிரபாகரனை வெறுக்கவில்லையாம் : பிரியங்கா!


தலைவர் பிரபாகரனை வெறுக்கவில்லையாம் ஆனால் தண்டனை கிடைக்கவில்லையே என்று கவலையாம் - பிரியங்கா!
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தான் வெறுக்கவில்லை என இராசீவ் காந்தியின் மகள் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
தமிழக வார இதழ் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த பிரியங்காவிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் போதே இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார்.
“விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பற்றி?”
“பிரபாகரன் என் தந்தையை கொன்றவர். அப்படி இருந்தும் நான் விடுதலைப்புலிகளையும், பிரபாகரனையும் வெறுக்கவில்லை. ஆனால், இந்தியப் பிரதமரை கொன்றவர் என்ற முறையில் அவருக்கு தக்க தண்டனை வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கம் என் மனதில் எப்போதும் உண்டு.”
“சிறையில் நளினியை சந்தித்தது பற்றி?”
“அது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட பயணம். என் வாழ்வில் நடந்த அந்தப் பயங்கரம் குறித்த தகவல் பெறவும், அமைதி வேண்டியும்
அவரைச் சந்தித்தேன்.”
“வாழ்க்கையில் உங்களை அதிகம் பாதித்த சம்பவம் எது?”
“என் தந்தை கொல்லப்பட்ட கொடிய நிகழ்வு என்னை அதிகமாக பாதித்தது. அப்போது கடும் கோபம் அடைந்தேன். அது என்னிடம் சில ஆண்டுகள் வரை தொடர்ந்தது. நான் மட்டுமல்ல… ஒட்டுமொத்த உலகமும் கூட கொந்தளிப்பாக இருந்தது. எனக்கு அப்போது இளம் வயது என்பதால் ஆவேசம் இருந்திருக்கலாம். ஆனால், படிப்படியாக என்னை நானே பக்குவப்படுத்தி, ஆறுதல் பெற்றுக்கொண்டேன்.”
சகோதரி பிரியங்கா உங்களது கருத்து மிகவும் சரியானதே. உங்கள் தந்தை மரணத்தை அடுத்து நீங்கள் கோபப்படுவது நியாயமானது தான். ஆனால் அதனை யார் செய்தார்களோ….? எங்களை பொறுத்தவரை அது ஒரு வதம்.
அதர்மத்தின் வழிநின்று மக்களிற்கு அநீதி இழைத்த அரக்கர்களை கடவுள் அவதாரமாக கூறப்படுபவர் வதம் செய்து இந்த ஜகத்தை காத்தருளியதை குறிக்கும் முகமாக ஆண்டுதோறும் நீங்கள் தீபாவளி நவராத்திரி போன்ற பண்டிகைகளை விழாக்களை கொண்டாடுகிறீர்கள் அல்லவா…?
அது போன்றே ஈழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் வந்து எமது மக்களை வேட்டையாடியும் எமது மக்களிற்கு காவலாக இருந்த போராட்ட அமைப்புகளை சிதைத்தும் வழிக்கு வந்தவர்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து எமக்கு எதிராக கொம்பு சீவி விட்டு வேடிக்கை பார்த்த உங்கள் தந்தை இராசீவ் காந்தி எம்மைப் பொறுத்த வரையில் வதம் செய்யப்பட வேண்டிய அரக்கனே.
உங்களிற்கு சகல அதிகாரங்களும் உள்ளதால் குற்றத்துடன் தொடர்புடையவராக கருதி சிறையிலடைக்கப்பட்டடிருக்கும் நளினியை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டீர்கள்…. அதிலும் தவறில்லை. அந்த ஒற்றை உயிருக்காக (நியாத்தின் படி தர்மத்தை காப்பதற்கு வதம் செய்யப்பட்ட இராசீவ் காந்தியின் உயிர்) உங்கள் பாட்டியின் பெயர் கொண்ட(இந்திரா-11) ராடர்கள் வழிகாட்ட தமிழினத்தையே விரட்டி விரட்டி கொன்று குவித்தீர்களே...
முள்ளிவாய்காலில் உயிருடனும் குற்றுயிருடனும் எஞ்சியிருந்தவர்கள் உங்கள் ஆசீர்வாதத்துடன்தானே இராணுவ கவசவாகனங்களால் ஏற்றி மிதித்து கொல்லப்பட்டு பதுங்கு குழிக்குள் வைத்தே கதை முடிக்கப்பட்டது.
இதற்கு நாம் யாரிடம் சென்று விளக்கம் கேட்பது…? நியாயம் கேட்பது....? உங்களைதான் நெருங்க முடியுமா…? உங்கள் குடும்பத்;தவர்கள் வரும்போது தமிழகத்தில் இருக்கும் எங்களது சொந்தங்கள் முகாமில் சிறைவைக்கப்படுகின்ற போது எப்படி எங்களால் உங்களை நெருங்கி நியாயம் கேட்க முடியும்?
நீங்கள் ஆத்திரப்பட்டீர்கள்… பதிலுக்கு நாங்களும் ஆத்திரப்படுவதில் என்ன தவறு இருந்துவிடப் போகின்றது? அவ்வாறு நாங்கள் ஆத்திரப்பட்டால் என்னாகும்…? உங்களால் தாங்க முடியுமா..?
ஒற்றை உயிருக்காக பிரியங்கா கவலையும் ஆத்திரமும் அடையும் போது ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களை இழந்து எமது தேசத்தையும் இழந்து நிற்கின்ற நாம் என்ன செய்ய வேண்டும்… சிந்தியுங்கள் உறவுகளே…
தமிழனாக உணர்ந்ததனால் ஏற்பட்ட தார்மீக கோபத்தினால்தான் எமக்கொரு தலைவன் கிடைத்தான். அவ்வாறே பல்லாயிரம் போராளிகள் தலைவன் பின்னால் அணிதிரண்டனர். சுதந்திர தமிழீழத்தை வென்றெடுக்கும் வரை நாம் ஓய்வின்றி போராடவேண்டியது காலத்தின் கட்;டாயமாகும். ஒவ்வொரு தமிழனதும் நெஞ்சங்கள் தீப்பிளம்பாக கொதித்து கொண்டே இருக்க வேண்டும்.
முள்ளிவாய்கால்வரை படுகொலை செய்யப்பட்ட எமது மக்களது இரத்தப்பலி சும்மா விடாது. ‘நான் விடுதலைப்புலிகளையும், பிரபாகரனையும் வெறுக்கவில்லை’ என்று தனது உண்மையான மனவெளிப்பாட்டில் கூறியிருந்தாரோ… அல்லது வேறு ஏதாவது நோக்கத்திற்காக இவ்வாறு கூறினாரோ… தெரியாது ஆனால் கடைசிவரை உலகத்தவரால் கைவிடப்பட்ட நிலையில் சிங்களத்தின் கொடும் கரங்களிற்குள் சிக்குப்பட்டு இந்;தியாவின் நலனுக்கா கொல்லப்பட்ட எமது மக்களது சாவிற்கு நிச்சயமாக இவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.





No comments:

Post a Comment