*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Friday, March 19, 2010

தேசம் காத்தவர்களையும் தேசநலனையும் மறந்த தேசியவாதிகள்

இலங்கையின் வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் விடுதலைக்காக உண்மையாகவும் நேர்மையாகவும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதளவு தியாகங்களாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆயுத போராட்டம் அகில உலகத்தையுமே தமிழர் பக்கம் திரும்ப வைத்தது.
தமிழர் தரப்பு யுத்தத்தில் பல அதிசியங்களை நிகழ்த்தி இராணுவ பலத்தின் உச்சத்தில் இருந்த போது அரசியல் ரீதியாகவும் தமிழர் தரப்புக்களை ஒருங்கிணைத்து ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளையும் ஒரே குரலில் ஒலிக்க வைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகும். இவ்வாறு இராணுவ அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கபட்ட தமிழரின் தேசிய விடுதலை போராட்டம் பிராந்திய சர்வதேச சக்திகளின் கூட்டு சதியால் பலமிழக்க செய்யப்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் கடந்த காலத்தில் தமிழ் மக்களின் உறுதியான ஆணையை பெற்று தமிழர்களின் அரசியல் சக்தியாக தற்போது எஞ்சியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து சிலர் பிளவு பட்டு சென்று தனியாக தேர்தல் களத்தில் இறங்கியிருப்பது அனைத்துலகிலும் வாழும் தமிழர்களின் மத்தியில் கடும் விசனைத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நீண்ட அரசியல் அனுபவமும் வடகிழக்கு தமிழ் மக்களால் எவ்வித பிரதேச வேறுபடுகளுமற்று ஏற்று கொள்ளப்பட்ட கூட்டமைப்பின் தலைமையை அகற்றுவதற்காகவும் கூட்டமைப்பினால் கைவிடப்பட்டுள்ள தாயகம் தேசியம் தன்னாட்சி கோட்பாடுகளை காப்பதற்காகவுமே தாம் புலம்பெயர் தமிழர்களின் விருப்பத்துடன் தனித்து போட்டியிடுவதாக பிரிந்து சென்ற தரப்பினர் கூறி வருகின்றனர். புலம்பெயர் சமூகம் என்று இவர்கள் குறிப்பிடுபவர்கள் யார் என்பது பற்றி நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.புலம்பெயர் நாடுகளில் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் எமக்கு ஒரு நாடு வேண்டும் என்பதற்காக தேசிய விடுதலைப் போராட்டத்தை தாங்கி நின்ற மக்கள் போராட்டம் இந்நிலை அடைந்து விட்டதே என்ற வேதனையுடனும் விரக்தியுடனும் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கலாய்த்து போயுள்ள இந்த நிலையில் தேசத்திற்கு சேவை செய்வதெற்கென தேசியத்தால் புலம் பெயர் நாடுகளில் அறிமுகப்படுத்தப் பட்டவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு பின் தமது அதிகாரங்களை தக்க வைப்பதற்காக ஒவ்வொரு கோசத்துடன் ஒவ்வொரு குழுக்களாக பிளவுபட்டு போயுள்ளனர். இவ்வாறு பிளவுபட்டுள்ள குழுக்களின் செயற்ப்படுகளால் தேசத்தை நேசிக்கும் புலம்பெயர் மக்களும் கலங்கிப் போயுள்ளனர். இவ்வாறு பிளவுபட்டு போயுள்ள புலம்பெயர் குழுக்களில் ஒரு குழுவினரின் உந்துதலே கூட்டமைப்பில் இருந்து திரு.கஜேந்திரகுமார் வெளியேற காரணம் என ஊகங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. புலம் பெயர் நாடுகளில் இவர்களின் சில வேலைகளிற்கு முன்னிறுத்துவதற்கு பதவிகளுடன் சிலர் தேவைப் படுகின்றனர். அதற்க்கான முயற்சியே இந்த பிளவு படுத்தல். திரு.கஜேந்திரன் திருமதி.பத்மினி ஆகியோர் தாங்கள் வழங்கிய சில செவ்விகளில் தாங்கள் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்க நினைத்தும் வெளிநாடுகளில் உள்ள சிலரின் முயற்சியாலேயே தேர்தலில் நிற்பதாக கூறியுள்ளனர். திரு.கஜேந்திரன் திருமதி.பத்மினி ஆகியோரின் விடுதலை உணர்வையோ தேசியத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்கினையோ யாரும் குறைத்து மதிப்பிட முடியாது ஆனால் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் ஒரு சிலரின் உந்துதலினால் நீங்கள் தமிழரின் வாக்குகளை பிளவு படுத்துவது வேதனைக்குரியது. போரின் இறுதிக்கட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்தது என்ன? இரகசிய தீர்வுத்திட்டம் தயாரித்து இந்தியாவிற்கு வழங்கியுள்ளனர் என்பன போன்ற நீங்கள் இப்போது கூறும் குற்றச்சாட்டுக்களை ஏன் ஆரம்பத்திலேயே நீங்கள் மக்களிடம் முன்வைக்கவில்லை?.இறுதிக்கட்ட போர் முடிந்து 10 மாதங்களாகியும் மௌனமாக இருந்துவிட்டு ஆசனங்கள் கிடைக்கவில்லை என்றவுடன் குற்றம் சொல்வது எந்த விதத்தில் நியாயப் படுத்த முடியும்? தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை புலம்பெயர் மக்களுடன் பேசவில்லை அவர்களின் கருத்துக்களை அறிய முற்படவில்லை என குறைப்பட்டு கொள்பவர்கள் யாருடன் அவர்கள் பேச வேண்டுமென எதிர்பாக்கிறார்கள்?. ஈழத்தமிழரின் மிகப் பலம் பொருந்திய சக்தியாக இருந்த புலம்பெயர் மக்கள் சக்தி இன்று சிலரின் நடவடிக்கைகளினால் செயலிழந்து செல்கின்றது. யார் தலைமை தாங்குவது என்ற அதிகராப் போட்டிகள் இன்னும் புலம்பெயர் நாடுகளில் முடியவில்லை. ஆய்வுகளும் மறுஆய்வுகளும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. நிர்வாக ரீதியாக அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கக் கூடியதான ஒரு பலமான அமைப்பை நிறுவுவதில் இன்றுவரை வெற்றி கிட்டவில்லை. இவ்வாறான ஒரு அமைப்பு இருந்திருந்தால் கூட்டமைப்பை அழைத்து பேசியிருக்கலாம் பிளவுகளை தடுத்திருக்கலாம். கூட்டமைப்பில் பிளவுகள் ஏற்படும் போது புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புக்கள் எவையுமே தமது கருத்துக்களை பகிரங்கமாக கூறவில்லை. தமிழர்களின் வாக்குகளை பிரிப்பதற்காக அரசு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.அவற்றை எமது மக்கள் தீர்க்கமாக முறியடிப்பார்கள்.ஆனால் கடந்த தேர்தலில் ஒன்றாக இருந்து மக்களிடம் பெரும அபிமானத்தை பெற்ற தலைமைகள் இப்போது ஒருவரையொருவர் குறை கூறுவது அரசியல் சுதந்திரம் சமூகம் போன்றவற்றில் மக்களிற்கு இருக்கும் நம்பிக்கையை சிதைக்கவே வழி வகுக்கும். பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவியுடன் மட்டும் தமிழரின் தேசியத்தை காக்க முடியுமென்றால் தமிழர் பிரைச்சனை எப்போதே முடிந்திருக்கும். ஈழத்தமிழ் மக்களும் தமது அரசியல் அபிலாசைகளை பல தேர்தல்களில் தெளிவாக வழங்கியுள்ளார்கள்.தேசியம் தாயகம் தன்னாட்சி என்ற கருப்பொருளுக்கு செயலுருவம் கொடுத்தவர்கள் என்ற பெருமை தேசியத்தலைவரையும் அவர்தம் போராளிகளையுமே சாரும்.தன்னாட்சி பெற்ற தமிழர்களின் தேசம் எப்படி இருக்கும் என்று அவர்கள் காலத்திலேயே நேரடியாக கண்டுகொண்டோம். தமிழ் தேசியத்தை காக்க இறுதிவரை உறுதியுடன் போராடியவர்கள் அவர்களின் அன்பு உறவுகள் முட்கம்பி வேலிக்குள் இன்றுவரை முடங்கிப் போயுள்ளார்கள். இயக்க கொடுப்பனவுகளில் வாழ்ந்த எத்தனை ஆயிரம் குடும்பங்கள் இன்று எதிர்காலம் சூனியம் ஆக்கப் பட்ட நிலையில் உள்ளார்கள். கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பெண் போராளி ஒருவர் இடுப்புக்கு கீழே செயற்பட முடியாமல் சக்கர நாற்காலியில் இருப்பவர் மே 19 வரை இயக்க பராமரிப்பில் இருந்தார். இராணுவத்தினரிடம் பிடிபட்டு பின்பு முகாமில் இருந்து ஒருவாறு வெளியேறி தாயாருடன் சேர்ந்து கொண்டார் இப்போரளிக்கு ஒவ்வொரு நாளும் ஊசி போடவேண்டும் விலை அதிகமான ஊசி வறுமையான அந்த தாய் என்ன செய்வார்? எதாவது ஒருவகையில் உதவி வந்து சேரும் என இன்றும் எதிர்பாத்து கொண்டிருக்கிராறாம். இவரைப்போல இன்னும் எத்தனை ஆயிரம் பேர். அண்ணை எல்லாத்தையும் பார்த்துக் கொள்வர் என சொல்லிவிட்டுப் போன போராளிகளின் குடும்பங்கள் பற்றி யார் சிந்திப்பது? தமிழர் பகுதிகளில் செயற்பட்ட தமிழர் சார்பு நிறுவனங்கள் யாவும் முடக்கப்பட்ட நிலையில் புலம் பெயர் நாடுகளில் பெரியளவில் தேசிய வளங்களுடன் இருப்பவர்களுடன் மிகவும் நெருக்கமான உறவுகளை பேணி வருகின்ற திரு.கஜேந்திரன் போன்றவர்கள் புலம்பெயர் அமைப்புக்களையும் இணைத்து ஈழத்தில் எதாவது நிவாரண வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கலாம். வெறும் வாக்குறுதிகளால் தேசம் மீட்க முடியாது. தனியாக தேர்தலில் போட்டியிட்டு தன்னாட்சி பெற்றுத் தர தைரியமுள்ள உங்களால் ஏன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறு உதவிகளைக் கூட செய்யமுடியாமல் போனது?.தேசத்திற்கான பணிகள் எவ்வளவோ உங்கள் முன்னலுள்ளபோது அவற்றை விடுத்து தேர்தல் அரசியலில் ஈடுபடுவது மிகவும் வேதனைக்குரியது. மாறிவரும் சர்வதேச சூழ்நிலைகளுக்கு அமைய எமது அடுத்த கட்ட உரிமைப் போரை நடத்துவதற்கு உணர்வுகள் சிதைக்கப் படாமல் தாயகத்தில் உள்ள தமிழர்கள் ஒற்றுமையாக ஓரணியில் இருக்க வேண்டியது இன்றைய அவசிய தேவையாகவுள்ளது. ஸ்ரீலங்கா அரசானது ஒவ்வொரு தமிழ்த் தேர்தல் மாவட்டங்களிலும் பெருமளவிலான சுயேட்சை குழுக்களை களமிறக்கி ஒவ்வொருவரும் 1000 வாக்குகளையாவது பிரிக்க வேண்டுமென்ற செயல்திட்டத்தை பெரும் பணச்செலவுடன் அரங்கேற்றியுள்ளது. கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களின் செயற்பாடுகள் இவர்களுக்கு துணைபோகுமே தவிர தமிழினத்துக்கு எவ்வித நன்மைகளையும் செய்யப்போவதில்லை. இவற்றை கருத்தில் கொண்டு பிரிந்து சென்றவர்கள் தமிழ்தேசியத்திற்கு தங்கள் வரலாற்று கடமையை செய்ய வேண்டுமென்பதே பெரும்பாலான தமிழர்களின் வேண்டுகோளாக இருக்கின்றது.

திருமாறன்





No comments:

Post a Comment