*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Monday, March 15, 2010

ஈழம் இனி............தோழர் தியாகு.


நான்காம் ஈழப்போர் ஒரு கசப்பான முடிவை அடைந்து விட்டதாக தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். படையியல் நோக்கில் இதனை மிகப் பெரும் தோல்வியாகத்தான் கருத முடியும். ஈழவிடுதலைப் போரின் வருங்காலம் பற்றிய பல வினாக்களை இந்தத் தோல்வி எழுப்பியுள்ளது. மரபு வழிப்போர் முறையிலிருந்து கரந்தடிப்ஒ போர் முறைக்குத் திரும்பி செல்ல முடியுமா? தமிழீழ மக்களில் ஒரு பகுதியினர் சிறை முகாம்களில் அடைபட்டிருக்க, மற்றொரு பகுதியினர் கடும் அடக்குமுறைக்கு நடுவில் திறந்தவெளிச் சிறைச்சாலைகள் போன்ற சூழலில் உரிமையற்றுக் கிடக்க, மற்றுமொரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்று அயல்நாடுகளில் பிழைப்பு தேடித் தங்கள் தாயக உறவுகளுக்காக போராடிப் போராடி களைத்துப் போயிருக்க, விடுதலைப்போராட்டம் எவ்வழியிலேனும் தொடர வழியுண்டா? எப்படியாவது தொடருமென்றாலும் வெற்றிக்கு வாய்ப்பு உண்டா?
இந்த விளக்கங்களோடு தலைமை பற்றிய மைய வினாவும் ஓங்கி நிற்கிறது. இந்த வினாக்களுக்கெல்லாம் உரிய விடைகளையும் விளக்கங்களையும் வெட்டிக் கட்டிக் கையில் வைத்துக் கொண்டு நிற்கவில்லை நாம். நாமாக என்ன முயன்றாலும் உடனடியாக விடைகள் கிடைக்க போவதில்லை. அப்படியே கிடைத்தாலும் அவை உறுதியான விடைகளாக இருக்கப் போவதில்லை. குழப்பங்கள் தெளிந்து ஒளிவிளக்கம் கிடைக்கும் வரை கைக்கட்டி இருக்க வேண்டும் என்பதன்று நம் கருத்து. அப்படி நாம் இருந்து விடுவோமானால் அதுவே நம் பகைவர்களுக்கு செய்யும் பெருந்தொண்டாகிவிடும்.
நாம் இப்போதும் செயல்பட வேண்டும். இப்போதே செயல்பட வேண்டும். செயல்படுவதற்கான தேவை மறைந்து விடவோ, குறைந்து விடவோ இல்லை. கொள்கை சாராத குருட்டு செயல்பாட்டில் நாம் எந்நிலையிலும் நம்பிக்கை வைக்கக்கூடாது. தமிழீழ மக்களை பொறுத்த அளவில் நம் அடிப்படை கொள்கையை மாற்றி கொள்ளலாம். அப்படியொரு தேவை எழுந்துள்ளதா? என்று கேட்டால் இல்லை என்பதே நம் விடை. வெற்றி பெற வாய்ப்புள்ளதா? என்று விசாரித்தறிந்து எவரும் விடுதலைப் போர் தொடுப்பதில்லை. விடுதலை தேவை என்றால் அதற்காக போரிடுவதும் தேவை என்றால், விடுதலைப் போர் தொடங்குவதற்கு இந்தக் காரணங்களே போதும்.
களத் தோல்விகள் எவ்வளவு பெரியவை என்றாலும் விடுதலை குறிக்கோளைத் தேவையற்றதாக்கி விடுவதில்லை.தமிழீழ விடுதலை - சிங்கள அரசிடமிருந்து விடுப்பட்ட தமிழீழ தனியரசு - ஒரு வரலாற்று தேவை என்ற அடிப்படைக் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதா? தமிழர்கள் உரிமையோடு வாழத்தான் தனியரசுக் கேட்டார்கள் முதலில். அவர்கள் உயிரோடு வாழ்வதற்கே தனியரசு தேவை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது இப்போது. தமிழீழத்திற்கான தேவை வளர்ந்து தான் உள்ளது.இனப்படுகொலை செய்யும் அரசிடம் இரந்து கேட்டு சில சலுகைகளைப் பெறலாம் எனக் கருதுவோர், தமிழீழ விடுதலைக் கொள்கையைக் கைக்கழுவப் பார்ப்பார்கள். அதற்கு இப்போதைய நெருக்கடியைப் பயன்படுத்தி கொள்வார்கள்.
ஆனால் இது தமிழர்களுக்கு எவ்வித விடிவும் தராது. தமிழீழ மக்களும், அவர்களின் நலனில் அக்கறை கொண்ட அனைவரும் தமிழீழ விடுதலைக் கொள்கையில் உறுதியான நம்பிக்கை வைக்க வேண்டும்.அதேபோல் உடனடிக் கடமைகளையும் மறந்துவிடக் கூடாது. தமிழீழ மக்கள் மீது பாரிய இன அழிப்பை நிகழ்த்தியுள்ள மகிந்த ராஜபட்சே, கோத்தபய ராஜபட்சே, சரன் பொன்சேக கும்பல் அதன் குற்றங்களை மறைக்க அனைத்து வகை மோசடிகளிலும் ஈடுபட்டுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரம் அப்பாவிப் பொதுமக்களை சிங்கள இராணுவத்தினர் இரக்கமின்றி படுகொலை செய்த உண்மை வெளிச்சத்துக்கு வந்து விட்டது.
ஆயுதங்களின்றி வெள்ளைக் கொடியோடு சரணடைய வந்த நடேசன், புலித்தேவன் உள்ளிட்டத் தலைவர்களையும், மற்றவர்களையும் படுகொலை செய்த போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்களை பாதுகாக்கும் கேடயமாக இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தில் சீனத்துடனும் பாகிஸ்தானுடனும் சேர்ந்து இந்தியா தான் சிங்கள அரசின் மீது துரும்பும் விழாமல் பார்த்துக் கொண்டது. அது மட்டுமல்ல, தன்னைத் தானே மெச்சிக் கொள்ளும் வகையில் சிங்கள அரசு கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியாவும் சேர்ந்து நிறைவேற்றிக் கொடுத்துள்ளது.
போரை நடத்துவதற்கு மட்டுமில்லாமல் போரின் விளைவுகளை மறைப்பதற்கும், இனக்கொலைக் குற்றவாளிகளைக் காப்பதற்கும் இந்திய அரசு தான் உதவி வருகிறது. இல்லை இல்லை, வழிகாட்டி வருகிறது. இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்று ராஜபட்சே வெளிப்படையாக அறிவித்திருப்பதும் சிங்கள தரப்பின் ஒரு குழுவும், இந்தியத் தரப்பின் எம்.கே.நாராயணன், சிவசங்கரமேனன் உள்ளிட்ட ஒரு குழுவும் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்து செயல்பட்ட விதத்தை கோத்தபய ராஜபட்சே எடுத்துக்காட்டியிருப்பதும் இந்தியாவின் பங்கை தெளிவாகக் காட்டுகின்றன.
போரின் இறுதிக்கட்டத்தில் 20,000 தமிழ்மக்கள் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவும் உடந்தையாக இருந்தது என்று அமைதிப்படைத் தளபதி அசோக் மேத்தா குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய அரசு சார்பில் யாரும் இதை மறுக்கவில்லை.தமிழீழ மக்களுக்கு எதிரான இனக்கொலைப் போரில் இந்தியாவின் முனைப்பான பங்கை இனியும் மறைக்க முடியாது. ஆகவே தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான குற்றங்களுக்காக மகிந்த ராஜபட்சே வகையறாவை கூண்டில் ஏற்றினால் போதாது, மன்மோகன்சிங் வகையறாவையும் கூண்டிலேற்ற வேண்டும்.
தமிழர்களின் அவலநிலையை பயன்படுத்தி இலங்கைத் தீவை முழுச் சிங்கள நாடாக மாற்றும் முயற்சியில் மகிந்த அரசு ஈடுபட்டுள்ளது. அகதிகள் மறுவாழ்வுக்கென்று உலகெங்கும் பணம் திரட்டி, தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதுதான் அதன் நோக்கம். இதனை சிங்கள பேரினவாதிகள் அவ்வளவாக மறைக்கவும் இல்லை. தமிழர்களைத் தமிழ்ப்பகுதிகளில் மீளக் குடியேற்றவா இவ்வளவு பெரிய போரை நடத்தி இவ்வளவு பெரும் இழப்புகளைச் சந்தித்தோம் என்று அவர்கள் கேட்கிறார்கள்.ஈழத் தமிழர்களுக்கு உதவுவதன் பேரால் சிங்கள அரசுக்கு நிதி கொடுப்பதும் மற்றவர்களை கொடுக்கச் சொல்வதும் சிங்கள பேரினவாதத்தை வலுப்படுத்த பயன்படுமே தவிர யார் உதவ நினைத்தாலும் மகிந்த அரசின் வழியாக உதவ முடியாது.
ஐ.நா. உதவி நிறுவனங்களும் பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளும் நேரடியாக பொறுப்பேற்று தமிழர் மறு வாழ்வுக்கு உதவ வேண்டும். இதற்கு ஒத்துக் கொள்ளும்படி சிங்கள அரசை நெருக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் செய்திடல் வேண்டும்.போரில் பலியான, காயமுற்ற, வீடிழந்த, பல்வேறு வகையிலும் வாழ்விழந்த ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் சிங்கள அரசு கணக்குப் பொறுப்பு உடையதாகும். ஒவ்வோர் இழப்புக்கும் அது கணக்குத் தருவதோடு உரிய இழப்பீடும் தந்தாக வேண்டும்.நான்காம் போரில் நடந்தவை குறித்தெல்லாம் புலனாய்வு செய்து விசாரணை நடத்துவதற்கு பன்னாட்டு அளவிலான ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை நாம் ஐ.நா.விடமும் பன்னாட்டுச் சமுதாயத்திடமும் எழுப்புவோம். இந்த கோரிக்கைகளுக்குத் தமிழ் உணர்வாளர்களையும் சனநாயக ஆற்றல்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் அணி திரட்டிப் போராட வேண்டும். இதற்கான ஒரு தொடக்க முயற்சியை தமிழர் ஒருங்கிணைப்பு வாயிலாக பெரியார் திராவிடர் கழகம், தமிழ்தேசப் பொதுவுடமைக் கட்சி ஆகியவற்றுடன் சேர்ந்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பை மேலும் விரிவாக்கி மேலும் செறிவாக்கி வளர்த்து செல்வோம்.
இறுதியாக ஒன்று. கடந்த ஆறேழு மாத காலத்தில் தமிழர்களாகிய நாம் இன அழிப்புப் போரை நிறுத்தக் கோரி என்னென்னவோ செய்தோம். எப்படியெல்லாமோ போராடினோம். தமிழக தமிழர்கள் மட்டுமல்ல, உலக தமிழர்களும் போராடினார்கள். நம் முயற்சி தோற்றுவிட்டது. நம் போராட்டங்கள் வெற்றி பெறவில்லை. ஆம், இறுதிவரை நாம்மால் போரை நிறுத்த முடியவில்லை. பகைவன் நினைத்ததை நிறைவேற்றி முடித்த பிறகு தான் ஓய்ந்தான். இந்தத் தோல்வி தமிழ் மனத்தில் ஏற்படுத்தியுள்ள காயம் ஆழமானது. நூறாண்டு ஆனாலும் ஆறாத வடு இது. ஆறுதலில்லாத இந்த வேதனை என்றாவது மாறுமா தெரியாது.
நம் கையறு நிலையை எண்ணி வருந்தினால் போதாது. இறுதியாக பார்த்தால் இது நம் இனத்தின் கையறு நிலை என்று தெரிய வரும். தமிழ்நாட்டுக்கென்று அயலுறவுத் துறை அமைச்சர் இருந்திருந்தால் நாம் இந்தியாவின் பிரணாப் முகர்ஜியை அய்யா தயவு செய்து கொழும்பு செல்லுங்கள் என்று கேட்டிருப்போமா? நமக்கென்று செல்வ வளம் இருந்திருந்தால் ஈழத் தமிழர் துயர் தணிப்புக்கு உதவுங்கள் என்று தில்லியிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்குமா? தமிழ் நாட்டிற்கென்று ஐ.நா.வில் பேராளர் இருந்திருந்தால் நாமே உலக அரசில் சிங்களத்தை கூண்டில் நிறுத்தியிருக்க மாட்டோமா?
சுருங்கச் சொல்லின் தமிழ்த் தேசம் இறையாண்மை அற்றிருப்பதால் தாம் நம்மால் நாம் விரும்பியபடி தமிழீழ மக்களை காக்க முடியாது போயிற்று. தமிழர்களாகிய நாம் இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவிலும் அடிமைகளாய் இருப்பதை புரிய வைத்து விட்டது.அவர்கள் அடிமைகள் என்றாலும் விடுதலைக்காக போராடும் அடிமைகள்..





No comments:

Post a Comment