*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Thursday, March 18, 2010

உண்மையிலேயே உடைகின்றதா தமிழரின் தேசியத் தலைமை?

தமிழ்மக்கள் கடந்த முப்பதாண்டுகளாக நடந்த போரால் நொந்து நூலாகிப் போயிருக்கின்ற நிலையில்-கூட்டமைப்பு தலைவர்கள் தமது அரசியல் சித்து விளையாடல்களை அரங்கேற்ற முனைவது அபத்தமான செயல். இது நிச்சயமாக தமிழ்மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்றாக இருக்காது. என மாதமிருமுறை வெளிவரும் தாய் நாடு இணைய பத்திரிகை தனது ஆசிரியர் பகுதியில் குறிப்பிட்டுள்ளது.
கடும் போட்டிகள், சவால்கள் நிறைந்துள்ள இந்தத் தேர்தல் களத்தில் கூட்டமைப்புத் தலைமை செய்யும் காரியங்கள் அதனை பலவீனப்படுத்துவதாகவே அமையப் போகிறது. இதுதான் யதார்த்தம்.
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரசியல் யுத்தம் ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலைப் போலவே இந்தத் தேர்தலும் தமிழ்மக்களுக்குப் பெரும் தலைவலியைக் கொடுக்கின்ற ஒன்றாக மாறிவருகிறது. இதற்கு வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது. என்றைக்கும் தமது உரிமைக்காகப் போராடும்- தமிழ்த் தேசியத்தைக் கட்டிக் காப்பாற்றும் என்று நம்பியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இதற்குக் காரணமாகியுள்ளது. இந்தமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அணுகுமுறைகள் தொடர்பாக வெளியாகும் செய்திகளை, தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் தமிழருக்கு நியாயமான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்று விரும்பும் எவராலுமே ஜீரணிக்க முடியாததாக உள்ளன.
ஜனாதிபதித் தேர்தலின் போது கூட்டமைப்பின் தலைமை எடுத்த பக்கச் சார்புடைய தீர்மானத்துக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை, இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்காமல்- ஒதுக்கி வைக்கும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு இருப்பதாகத் தெரிகிறது. இந்த முடிவைக் கூட்டமைப்பு எடுக்குமேயானால், அது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை- அது பின் நோக்கித் தள்ளத் தயாராகி விட்டது என்பதை உணர்த்துவதாகவே அமையும்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 பேர் மீதும் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் ஏராளமான விமர்சனங்களைக் கொண்டிருந்தார்கள். காரணம் அவர்கள் ஒரு போதும் - அது சம்பந்தனாக இருந்தாலும் சரி சிவாஜிலிங்கமாக இருந்தாலும் சரி சுரேஸ் பிறேமச்சந்திரனாக இருந்தாலும் சரி கஜேந்திரனாக இருந்தாலும் சரி- மக்களுடன் மக்களாக வாழவோ அல்லது அவர்களுக்கான பணிகளில் ஈடுபடவோ இல்லை என்பது வெளிப்படை.
அப்படியிருந்த போதும் தமிழ் மக்கள் கூட்டமைப்பை ஆதரிக்க எடுத்த முடிவுக்குக் காரணமே, அவர்கள் தமிழ்த் தேசியத்தையும்- தமிழரின் அரசியல் போராட்டத்தையும் தலைமை தாங்கவல்ல சக்திகளாக இருப்பார்கள் என்பதற்காகவே. ஆனால் அந்த நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் கூட்டமைப்பு தலைமை செயற்படத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
கடும் போட்டிகள், சவால்கள் நிறைந்துள்ள இந்தத் தேர்தல் களத்தில் கூட்டமைப்புத் தலைமை செய்யும் காரியங்கள் அதனை பலவீனப்படுத்துவதாகவே அமையப் போகிறது. இதுதான் யதார்த்தம். ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலில் எடுத்த தவறானதொரு முடிவினால் தான் கூட்டமைப்புக்கு இந்த நிலை வந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்தநிலையில் பொதுத்தேர்தலில் பலரையும் ஓரங்கட்டும் முடிவை எடுத்தால்- அது அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தமிழரின் எதிர்பார்ப்புக்கு முரணான காரியமாகவே அமையும். மாறாக எவரையாவது கழற்றி விட்டுத் தனியானதொரு பாதையில் கூட்டமைப்பு பயணிக்க நேர்ந்தால்- அது நிச்சயம் அதன் தனித்துவத்தை மட்டுமன்றி மக்களின் ஆதரவையும் இழக்க நேரிடும். இதைக் கூட்டமைப்பின் பழம்பெரும் அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்மக்கள் கடந்த முப்பதாண்டுகளாக நடந்த போரால் நொந்து நூலாகிப் போயிருக்கின்ற நிலையில்-கூட்டமைப்பு தலைவர்கள் தமது அரசியல் சித்து விளையாடல்களை அரங்கேற்ற முனைவது அபத்தமான செயல். இது நிச்சயமாக தமிழ்மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்றாக இருக்காது.
இப்படியான செயல்களின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு விலகி செல்லவே நேரிடும். அதையே கூட்டமைப்பு தலைவர்கள் செய்ய நினைக்கிறார்கள் என்றால், அவர்கள் சிங்களப் பேரினவாத சக்திகளுக்கும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளுக்கும் விலை போகத் தயாராகி விட்டார்கள் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும்.

உண்மையிலேயே உடைகின்றதா தமிழரின் தேசியத் தலைமை?


ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஆளும் கட்சியான ஐ. ம. சு. முன்னணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து இவர்கள் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இவர்களுக்கு ஆசன ஒதுக்கீட்டை வழங்க கூட்டமைப்பின் தலைமை மறுத்துவிட்டதை அடுத்தே ஆளும் கட்சியில் இணைந்து தோ்தலில் போட்டியிட இவர்கள் தீர்மானித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி, வன்னி மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர் மற்றும் எஸ்.கனகரத்னம் ஆகியோரே ஆளும் கட்சியில் இணைந்து பொதுத் தோ்தலில் போட்டியிடவுள்ளனர். தங்கேஸ்வரி மட்டக்களப்பு மாவட்டத்திலும், கிஷோர் சிவநாதன் வன்னித் தோ்தல் மாவட்டத்திலும், கனகரட்ணம் யாழ்ப்பாணம் தோ்தல் மாவட்டத்திலும் போட்டியிடவிருக்கின்றார்கள்.

இதே வேளையில் - கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.கே.சிவாஜிலிங்கம், என்.சிறிகாந்தா, பத்மினி சிதம்பரநாதன் மற்றும் எஸ்.கஜேந்திரன் ஆகியோர் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பாக தோ்தல் களத்தில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் அரசரப் பேச்சுக்கள் இடம்பெற்ற போதிலும் இன்று அல்லது நாளை இது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகின்றது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை 26 ஆம் திகதிதான் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான இறுதித் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
2001 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது அதன் அடிப்படைகளாக இருந்த - தமிழர் தேசியம், தன்னாட்சி உரிமை, தமிழர் தாயகம் ஆகிய கொள்கைகளில் இருந்து கூட்டமைப்பு தடம் மாறி விட்டதாகக் குறி்ப்பிட்டு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதிலிருந்து வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் -

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் சிறிகாந்தா ஆகியோர் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளனர். கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டனர். புதிய கட்சியின் தலைவராக சிறிகாந்தா செயற்படுவார் எனவும், செயலாளராக சிவாஜிலிங்கம் இயங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
புதிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கில உள்ள ஐந்து மாவட்டங்களிலும் விக்கிரமபாகு கருணாரட்ணவின் இடதுசாரி விடுதலை முன்னணியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடவுள்ளது. ஏனைய 17 மாவட்டங்ளிலும் இடதுசாரி விடுதலை முன்னணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட சிவாஜிலிங்கம் - “தமிழ் மக்களைக் கொலை செய்ய துணை போன இந்தியாவுக்கு உடந்தையாகவும் சோனியாவின் காங்கிரஸ் அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்பவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இயங்கியது. இது தொடர்பான எந்தவொரு பகிரங்க விவாதத்திற்கும் நான் தயாராக இருக்கிறேன். இந்தப் போரை ஆரம்பித்தது இந்தியா தான் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே கூறியிருந்தார்.
மாவிலாறு பிரச்சினையில் போர் தொடங்கிய தருணத்தில் - தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூதுக் குழு இந்தியாவுக்கு சென்றது. எனினும் பிரதமர் மன்மோகன் சிங்கை அவர்களால் சந்திக்க முடியவில்லை. அதே ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழு இந்தியப் பிரதமரை சந்தித்தது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 28 மாதங்களாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழு இந்தியாவில் காலடி எடுத்து வைக்கவில்லை.
2007ஆம் ஆண்டில் சுமார் 15 வரையான வெளிநாடுகளுக்குச் சென்று போரை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்த இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோர் இந்தியாவுக்கு மட்டும் செல்லாதது ஏன்?
இந்திய பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏமாற்று முயற்சிகளிலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பகடைக்காய்களாக பயன்படுத்தப்பட்டது. இவர்களும் அதில் விரும்பியே கலந்து கொண்டார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
அதே வேளை இங்கு கருத்து வெளியிட்ட சிறிகாந்தா - “சோனியா அரசுக்கு விசுவாசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழு இருக்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது. கிளர்ச்சியாளர்கள், தட்டிக்கேட்பவர்கள், இந்தியாவின் துரோகத்தைப் பற்றி கடந்த காலத்தில் பேசியவர்கள் இருக்கக் கூடாது என்பதில் இந்திய காங்கிரஸ் அரசாங்கம் தீர்மானமாக இருக்கிறது” என்று குறிப்பட்டார்.




No comments:

Post a Comment