*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Friday, April 16, 2010

வெடிக்காத குண்டுகளுடன் புறப்பட்ட வான் புலிகள்: அதிர்ச்சித் தக‌வ‌ல்


இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கின்றது என்பதை சிந்திக்க முதலில், நாம் ஒரு விடையத்தை முதலில் கவனிக்கவேண்டும். அன்றைய தினம் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் எக் குண்டுகளும் வெடிக்கவில்லை என்பதேயாகும். இதனிடையே குண்டுகளைத் தான் வீச முடியவில்லை, தான் கட்டிடம் ஒன்றில் மோதினால் அக்குண்டுகள் வெடிக்கும் என நினைத்த விமானி அருகில் இருந்த வருமான வரி திணைக்களக் கட்டிடத்தின் மேல் மோதியுள்ளார். இருப்பினும் அக் குண்டுகள் வெடிக்கவில்லை. அதனால் விமானம் கட்டிடத்துடன் மோதும் போது ஏற்பட்ட தீ விபத்தைத் தவிர வேறு எந்த வெடிப்புகளும் அங்கு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வழமையாக புலிகளின் தாக்குதல் விமானம் ஒன்று 4 குண்டுகளை சுமந்து செல்ல வல்லது. அவை ஒவ்வொன்றும் சுமார் 25KG எடையுள்ளவை. அவற்றில் ஒன்று வெடித்திருந்தாலே, கட்டிடத்திற்கு கணிசமான சேதம் உண்டாகியிருக்கும். விமானத்தில் சுமார் 200KG வெடிபொருட்கள் இருந்திருக்கிறது, அவை வெடித்திருந்தால், வருமான வரி திணைக்கள அலுவலகம் முற்றாக இடிந்திருக்கும். ஆனால் கட்டிடத்தில் பெரும் தீ மூண்டதே அன்றி ஒரு பாரிய வெடிப்பு எதுவும் நிகழவில்லை என்பது உண்மையாகும். அதே போல கட்டுநாயக்க விமான நிலையத் தாக்குதலிலும் போடப்பட்ட குண்டுகள் வெடிக்கவில்லை என இராணுவம் கூறியுள்ளது. அக் குண்டுகள் வெடித்திருந்தால் விமான எதிர்ப்பு நிலையம் சேதமடைந்திருக்கும். பின்னர் விமானத்தை சுட்டு வீழ்த்த முடியாத நிலை தோன்றியிருக்கும்.அதாவது பல காட்டிக் கொடுப்புகளாலும் துரோகங்களாலும், எமது போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்திருக்கிறது. தற்போது அவை மெல்ல மெல்ல வெளிவந்தவண்ணம் உள்ளன. இத் தகவல்களை நாம் பரபரப்புக்காக பிரசுரிக்கவில்லை. மாறாக என்ன நடந்தேறியுள்ளது என மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம்! இனி இவ்வாறான நிகழ்வுகள் எமது சமூகத்தில் நடப்பதை தடுக்க விரும்புகிறோம். அரசியல் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள எம்மை இதுபோல எதிரி ஆழ ஊடுருவி அளிக்கக்கூடும், யாரையும் தரக்குறைவாக எடைபோடாமல், எம்மில் ஊடுருவியுள்ள சிங்கள சக்திகளை இனம் கண்டு, அவர்களைக் களைந்து நாம் எமது போராட்டத்தில் வெற்றிபெறவேண்டும், இது ஒரு தோல்வியல்ல, இது எமக்கு ஒரு பாடம், இந்த தடைக்கல்லை நாம் படிக்கல்லாக மாற்றவேண்டும்.முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய பல துரோகச் செயல்கள் குலை நடுங்கவைக்கும் சம்பவங்களாக இருக்கின்றன. இதை நாம் திரும்பத் திரும்ப ஏன் பேசவேண்டும் எனச் சிலர் எண்ணுவர். இது குறித்து நாம் அறிந்துவைத்திருப்பது நல்லது. நடந்து முடிந்த சில சம்பவங்கள் எமக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும். நடந்தேறிய துரோகங்கள் அனைத்தையும் அறிந்து தெளிவுபெறவேண்டும், எதிரி எவ்வடிவில் வந்தாலும், நாம் தற்போது அறிந்தவை, எமது கடந்த கால அனுபவங்களை பயன்படுத்தி எமது போராட்டத்தில் நாம் வெற்றிவாகை சூடவேண்டும்.







No comments:

Post a Comment