*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Saturday, April 17, 2010

இந்தியாவை சிறிலங்கா ஏமாற்றி விட்டதா? சிபிஐ கோரிக்கை ஏற்படுத்தும் சந்தேகம்!

தமிழீழ தேசியத் தலைவர் கொல்லப்பட்டுவிட்டதாக அறிவித்திருந்த சிறிலங்கா, அதனை இந்தியாவிற்கும் தெரிவித்து ஆவணங்களையும் வழங்கிவிட்டதாக கூறியிருந்தது.எனினும், அண்மையில் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் பிரபாகரனின் மரணச் சான்றிதழை சிறிலங்கா தங்களிடம் வழங்கிவிட்டதென சிபிஐ தெரிவித்தாக கூறியது அந்நாட்டில் பல வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்திருந்த நிலையில், அவ்வாறான உறுதிப்படுத்தும் ஆவணங்களை (மரணச் சான்றிதழ்) வழங்கவில்லை என இந்திய மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தெரிவித்திருந்தது.இந்நிலையில், தற்போது தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் இறப்பு சான்றிதழின் மூல பிரதியினையும் வழங்குமாறு சிறிலங்காவிடம் இந்திய மத்திய புலனாய்வு அமைப்பு எழுத்து மூலமாகக் கோரியுள்ளது.அத்துடன், கே.பி. பத்மநாதன் அவர்களை விசாரணை செய்யவும் அவரது வங்கி கணக்குகளை பரிசீலிக்கவும் உரிய ஏற்பாட்டினை செய்து தருமாறு இந்தியா சிறிலங்காவிடம் மீண்டும் கேட்டுள்ளனர். பத்மநாதன் சிறிலங்கா சென்றடைந்தபோதும் இந்திய அதிகாரிகள் இவ்வாறு கோரிக்கை ஒன்றினை விடுத்தனர்.அதாவது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இவர் இருப்பதால் விசாரிப்பதற்கு அனுமதி கோரியிருந்தது. ஆனால் சிறிலங்கா சாதகமாக பதில் அளிக்கவில்லை என இந்திய மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்தது.தற்போது மீண்டும் கே.பியை விசாரிக்க கடித மூலம் உத்தியோகபூர்வமாக கேட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது




No comments:

Post a Comment