*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Sunday, April 11, 2010

மீண்டும் இடி அமின் சிறிலங்காவில் ஆட்சிபீடம் ஏறுகிறார்

நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போதைய சிறிலங்கா அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ”எந்தவழியை” பயன்படுத்தியேனும் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் உண்டு. குறிப்பிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாங்கப்படுவார்கள் என்று கூட அமெரிக்கா உயரதிகாரி ஒருவர் அண்மையில் கருத்துவெளியிட்டிருந்தார். இவ்வாறான பின்னனியில் சிறிலங்கா அரசியலின் உள் நிலமைகள்பற்றி ஆராய்கிறார் நாலக குமாரசிங்க.
‘சிறிலங்காவில் விருப்பு வாக்கு முறைமை மூலம் இறுதியாக இடம்பெறுகின்ற இறுதித் தேர்தல் இதுவாகவே இருக்கும்’, என போக்குவரவுத் துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அண்மையில் மகாவலி நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இது நாடாளுமன்றத் தேர்தல் நடாத்தப்படுவதற்கு முன்னரே அதன் முடிவை அரசாங்கம் அறிந்துள்ளது என்பதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அரசாங்கம் ஏப்ரல் 8 ஆம் திகதி அன்று நாடாளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்குத் தீர்மானித்திருக்காவிட்டால், தற்போதுள்ள விருப்பு வாக்கு முறைமையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதென்பது அதற்கு சாத்தியமற்றதென அவர்கள் கூறுகின்றனர். அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்கு அத்தகைய பெரும்பான்மை அவசியமாகும்.
மகிந்த ராஜபக்ச பதவி ஆசையால் பீடிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அரசதலைவர் தேர்தலில் வெற்றிகொண்ட பின்னர், அரசாங்கத்தில் ராஜபக்ச குடும்பத்தின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களே பிரதமர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சிறிலங்கா அரசதலைவர் தனது மகன் நாமல் ராஜபக்சவை குடும்ப வாரிசாக அரசியலில் அறிமுகம் செய்துள்ளார். நிறைவேற்று அதிகாரமுள்ள அரசதலைவர் முறைமையையும் விருப்பு வாக்கு முறைமையையும் நீக்குவதற்கேற்ற முறையில் அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்கே அரசாங்கம் தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விரும்புகிறது. ஆளுங் கட்சியின் எல்லா பிசாசுகளும் நிறைவேற்று அதிகாரமுடைய அரச தலைவர் ஊடாகவே வருவதாக வாக்காளர்கள் நம்பவைக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவிலுள்ள மக்கள் ஏற்கனவே ராஜபக்சவை ‘இடி அமின்’ என்றும் ‘சர்வாதிகாரி’ என்றும் அழைக்கத் தொடங்கிவிட்டனர். அநேகமாக சர்வாதிகார ஆட்சியின் கொடூரத்தை அவர்கள் உணர்ந்திருக்கக்கூடும். ஆனால் அது இன்னமும் முழுமையாக வெளிக்காட்டப்படவில்லை
கொழும்பு, வாட் பிளேசில் அமைந்துள்ள பிரத்தியேக வாசஸ்தலத்திற்கு முகவரியிட்டு, 1983 இல் சிறிலங்கா அரசதலைவர் ஜெ.ஆர் ஜெயவர்த்தனவுக்கு நான் எழுதிய அநாமதேயக் கடிதத்தில் அவரை இடி அமின்’ என்று குறிப்பிட்டிருந்தேன். உண்மையில் அவர் தேசியம் என்ற ஆடையை அணிந்திருந்த ஒரு சர்வாதிகாரி என்றவகையில், எவருமே இதனை வெளிப்படையாகத் துணிந்திருக்கமாட்டார்கள். ஆச்சரியம் தரும்வகையில், ஒரு வாரத்திற்குப் பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் ‘மக்கள் இப்போது என்னை சர்வாதிகாரி என்று அழைக்கிறார்கள்’, என்று குறிப்பிட்டார்.
ஜே.ஆர் ஜெயவர்த்தன நாடாளுமன்றத்தில் ஐந்திலொரு பெரும்பான்மை பலத்துடன் 1977 இல் ஆட்சிக்கு வந்தபோது, நான் பேராதனை பல்கலைக்கழக மாணவனாக இருந்தேன். ஜே. ஆரின் ஆதரவாளர்கள் அவரது எதிராளிகளைக் கொன்றும் அவர்களது வீடுகளை எரித்தும் அவரது வெற்றியைக் கொண்டாடினார்கள். அதற்குக் காரணமும் வைத்திருந்தார்கள். 1970 இல் அவருக்கு முன் பதவிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் வலியுறுத்தினார். பிரித்தானிய ஆட்சியிசியாளர்களிடமிருந்து உண்மையான சுதந்திரத்தினை நாட்டுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக நாட்டினது அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவரும் வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பண்டாரநாயக்க பெற்றிருந்தார். இரண்டாவது தடவையாக நாட்டினது பிரதமாராக சிறிமாவோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒரு வருடத்தின் பின்னர், சிறிமாவோ பண்டாரநாயக்கவினது அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி வெடித்தபோது அவர் தனது இராணுவ இயந்திரத்தினைக் கட்டவிழ்த்துவிட்டார். 17,000 பேர் கொல்லப்பட்டார்கள். 20,000 பேர் கைதுசெய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். இவ்வாறகக் கொல்லப்பட்ட மற்றும் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களே. பிரித்தானியர்கள் சிறிலங்காவினை ஆண்ட 150 வருட காலத்தில்கூட இதுபோன்றதொரு படுகொலை இடம்பெற்றதில்லை.
ஊரடங்கு உத்தரவு தொடராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் கிராமங்களுக்கு வரும் பொலிசாரும் இராணுவத்தினரும் சந்தேகத்திற்கிடமாவர்களைக் கொலைசெய்த மற்றும் இழுத்துச்சென்ற அந்தப் பயங்கரமான எனது சிறுவயது அனுபவத்தினை நினைத்துப் பார்க்கிறேன். கிளர்ச்சியாளர்கள் காடுகளுக்குள் சென்று மறைந்துகொள்ள, கிராமங்களில் வசித்த அவர்களது உறவினர்கள் படையினரால் கொலைசெய்யப்பட்டார்கள். அவர்களது உடமைகள் எரியூட்டி அழிக்கப்பட்டன. குறிப்பிட்ட சில மக்கள் உயிருடன் எரித்துக் கொலைசெய்யப்பட்டார்கள்.
ஓர் சர்வாதிகாரிபோல நாட்டினை ஆண்ட பண்டாரநாயக்கா
அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்த அந்தக் காலப்பகுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்க ஓர் சர்வாதிகாரி போலவே நாட்டினை ஆண்டுவந்தார். பொதுக்கூட்டங்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் என அனைத்துமே தடைசெய்யப்பட்டன. சில ஊடக நிறுவனங்களும் பத்திரிகைகளும் மூடப்பட்டன. நாட்டினது மிகப்பெரிய பத்திரிகை நிறுவனமாக இருந்த ஏரிக்கரை பத்திரிகை நிறுவனம் அரசுடமை ஆக்கப்பட்டது. ஓர் இராணுவ ஆட்சியின் கீழ் வாழுவதைப் போலவே மக்கள் தங்களது நாட்களை ஓட்டினர். சிறிமாவோ எதனைச் சொல்கிறாரோ அதற்கு ஆமாம் போடுபவர்களாகவே அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தார்கள். தர்மசிறி பண்டாரநாயக்கா மற்றும் சைமன் நவகத்தகம போன்ற முன்னணி நாடகக் கலைஞர்கள் “ஏக அதிபதி“ மற்றும் ‘சுய பாசா(Suba Yasa)’ போன்ற நாடகங்களை அரங்கேற்றினார்கள்.
எந்தவிதமான மக்கள் ஆணையுமின்றி சிறிமாவோ மேலும் இரண்டு வருடங்களுக்கு ஆட்சியில் தொடர்ந்தார். பெரதெனியா பல்கலைக்கழக மாணவர்களின் மீது பொலிசார் தாக்குதல்களை நடாத்தியதைத் தொடர்ந்து சிறிமாவோவினது ஆட்சி குலைந்துபோனது. இவ்வாறாக ஒரு பேய்க்குணத்தினைத் தன்னகத்தே கொண்டிருந்த சிறிமாவோ, ‘போரற்ற இந்து சமூத்திரப் பிராந்தியம்’ ஏற்படுத்தப்படவேண்டும் என வாதாடினார். சிறிமாவோவின் பிரச்சார இயந்திரங்கள் அவரை ஓர் ‘அமைதியின் தூதுவராகவே’ சித்தரித்தன.
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸ் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலின் பின்னர் அவரது அரசாங்கம் வீழ்ச்சி கண்டது. அத்தகைய கொடூரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த அதேவேளையில் ‘போர் அற்ற இந்து சமுத்திரத்தை’ உருவாக்கவுள்ளதாக அவர் பிரசாரம் செய்துகொண்டார். அவரது பிரசார இயந்திரம் அவரை ஒரு ‘சமாதான தூதுவராக’ வர்ணித்தது. ‘உக சமாதான தூதுவர்! எங்களின் கொலையாளி!’, பேராதனை பல்கலைக்கழகத்தில் இரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கும்போது, இந்து சமுத்திரம் போரற்ற வலயமாக விளங்கட்டும்’ போன்ற சுலோகங்களை மாணவர்கள் தாங்கிச் சென்றர். எதிர்க் கட்சிகள் அவரது ஆட்சியை ‘எழு வருடங்களுக்குத் தம்மைப் பீடித்த ஒரு பீடையாகவே’ கருதினர்.
ஜே ஆர் தலைமையிலான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இந்த சந்தர்ப்பத்தை புத்திசாதுரியமாகப் பயன்படுத்தி ‘நீதியானதும் நேர்மையானதுமான ஒரு சமூகத்தை’ உருவாக்குவதாக வாக்குறுதியளித்தது. அவர் அவசரகாலச் சட்டமின்றி சனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று கோரினார். பாராளுமன்றத்தில் ஐந்திலொரு பெம்பான்மையுடன் ஐக்கியதேசியக் கட்சி எதிர்பார்க்காத அளவு வெற்றியைப் பெற்றது. ஆனால் என்ன நடந்தது? தான் நிறைவேற்று அதிகாரமுடைய அரச தலைவராக வரக்கூடிய வகையில் ஜே. ஆர் அரசியலமைப்பை மாற்றி அமைத்தார். மக்கள் அவராவது ஏதாவது செய்யவேண்டும் என எதிர்பார்த்த, சிறிமாவோ பண்டாரநாக்காவினால் உருவாக்கப்பட்ட பொதுமக்களின் உரிமைகள் தொடர்பான சரத்தை அவர் இல்லாது செய்தார். ‘தனது பாராளுமன்றத்தால் ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர எதனையும் செய்ய முடியும்’ என அவர் வீம்புரைத்துக் கொண்டார். ஆனால் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவைக் குறைக்குமாறு எதிர்க் கட்சிகள் அவருக்கு சவால் விடுத்தன.
பண்டாரநாயக்க மற்றும் சேனநாயக்க குடும்ப ஆட்சிகளை அவர் வெறுத்தார். அவருக்கும் தற்போதைய அதிபர் ராஜபக்ச போன்று பதவி ஆசை இருந்தது. அபார வெற்றிக்குப் பின்னரும் அவரது பேச்சுக்களை கேட்குமளவுக்கு மக்களுக்குப் பொறுமை இருக்கவில்லை. ஆனால், பெருமளவு மக்களாணையுடன் வெற்றி பெற்றுக் கொண்டு பாராளுமன்றத்தை அமைப்பது என்பதையே அவர் உறுதிப்படுத்திக்கொண்டார். புராதன அரசர்கள் தமது குடிமக்களுக்கு உரையாற்றும் புனித பல் வைக்கப்பட்டிருக்கின்ற பத்திரிப்புவ எனும் இடத்தில் தனது வெற்றி உரையை ஆற்றுவதற்காக அவர் காத்திருந்தார். கண்டியில், வீதிகள் யாவும் அரசாங்கத்தாலும் அதன் ஆதரவாளர்களாலும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. அவரது மனநிலையைப் புரிந்துகொண்ட சில அமைச்சர்கள் அவர் மன்னராக முடிசூடிக் கொள்ளவேண்டும் என ஆலோசனை வழங்கினர். (ராஜபக்சவின் பிரசார இயந்திரமும் சில விடயங்களில் ஜே. ஆர் இனது நடவடிக்கைகளை ஒத்திருந்தன. விடுதலைப்புலிகளை வெற்றிகொண்ட பின்னர், உத்தியோகபூர்வமின்றி அவருக்கு சிறந்த அரசன் என்ற பட்டம் வழங்கப்பட்டது. அவருக்கு ‘மகிந்து VII அரசன்’ என்ற பட்டமும் அவரது ஆதரவாளர்களால் வழங்கப்பட்டது.)
ஜே. ஆர் அரசாங்கத்தை அமைத்த சிறிது காலத்தினுள்ளேயே தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டு அவர்களது சொத்துக்களும் எரிக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கு எதிரான பாரபட்சமும் வன்முறைகளுமே விடுதலைப்புலி பயங்கரவாதத்தைத் தோற்றுவித்த விதைகள். 1982-1984 இல் நான் யாழ்ப்பாணத்தில் ஆசிரியராகக் கடமையாற்றினேன். ஜே.ஆர் இனுடைய இராணுவம் எப்படி நடந்துகொண்டது என்பதை நான் அங்கு கண்டேன். எந்தவொரு ஆக்கிரமிப்பு இராணுவத்தையும்விட மோசமாக அவர்கள் நடந்துகொண்டார்கள். இராணுவத் தொடரணிகள் வருகின்றபோது, யாழ்-வவுனியா வீதியில் பயணிக்கின்ற அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு நிறுத்தத் தவறினால், கீழ்த்தரமான தண்டனைகளைப் பெறவேண்டும். ஒரு தடவை பேருந்து சாரதி ஒருவரை பேருந்திலிருந்து கீழே இழுத்து விழுத்தி பேருந்திலிருந்த மக்களுக்கு முன்னால் இராணுவத்தினர் அடிப்பதைக் கண்டேன். ‘அவன் ஒரு அப்பாவி மனிதன். அவ்வாறு அடிக்காதீர்கள்’, என நான் சிங்களத்தில் கத்தினேன். பின்னர் அந்தப் படையினன் அடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
படைத் தொடரணிகள் வரும்போது நிறுத்தாத வாகனங்களின் கண்ணாடிகளை உடைப்பதற்கென படையினர் எப்போதும் கைகளில் மரக் கட்டைகளை வைத்திருப்பர். 1983 இல் விடுதலைப்புலிகள் ஆயுதத்தைக் கையிலெடுத்தபோது, நாடு தழுவிய ரீதியிலான சமூகக் கலவரத்திற்கு அரசாங்கம் ஆதரவளித்தது. தமிழர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களில் இணைந்துகொண்டனர். தனக்கெதிரான எதிர்ப்பை அடக்குவதற்கு ஜே.ஆர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார். சமூக அமைதியையும் தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதையும் வலியுறுத்திய அரசியல் கட்சிகள் வன்முறைக்குத் துணைபோவதாகத் தடை செய்யப்பட்டன. அதேவேளையில், பொன்சேகாவின் விடுதலைக்குக் குரல்கொடுக்கும் மக்களி விடுதலை முன்னணியும்(ஜேவிபி)தலைமறைவாகும் நிலை ஏற்பட்டது. இவ்வாறே ஜே ஆர் இரண்டு உள்நாட்டு யுத்தங்களைத் தோற்றுவித்தார்.
1984 இல் ஒரு நாள் நான் யாழ் நகர மத்தியில் நின்றுகொண்டிருந்தபோது, சிறிலங்கா விமானப்படையினர் மக்களைக் கொன்றுவருவதாக சத்தத்தைக் கேட்டு மக்கள் சிதறி ஓடினர். ஒரு மணிநேர்ததின் பின்னர், சிங்கள ஆசிரியர் ஒருவரின் தாயார், பயத்தால் நடுங்கிக்கொண்டே பாடசாலைக்கு வந்தார். ‘நான் சுண்ணாகம் சந்தையடியில் நின்றிருந்தேன். வான்வழி வந்த படையினர் கண்மூடித் தனமாக மக்கள்மீது தாக்குதல் நடாத்தினர். பலர் கொல்லப்பட்டனர். அவர்களுள் பாடசாலை சிறுவர்களும் அடங்குவர். கர்ப்பிணித் தாய் ஒருவர் மோசமாகக் காயமடைந்துள்ளார்’, என்று கூறினார். அன்று மாலை அரச வானொலியில்: 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டது. மறுநாள் யாழ் நகரில் இந்தக் கொலைகளைப் பார்த்து புத்தர் கண்ணீர் வடிப்பதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததைக் கண்டேன். இதனாலேயே ஜே. ஆர் ‘இடி அமின்’ என அழைக்கப்படுவதற்குப் பொருத்தமானவர்.
பணவீக்கத்தின் காரணமாக தொழிலாளர்கள் 300 ரூபா(8 டொலர்) சம்பள உயர்வு கோரியபோது, அரசாங்கம் 100,000 மேற்பட்ட தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கியது. ஊடகங்கள் அச்சுறுத்தப்பட்டு செய்திகளும் தணிக்கைகக்கு உள்ளாக்கப்பட்டன. ‘வுhந வுசரவா’ போன்ற சில பத்திரிகைகள் வெற்றிடங்களுடன் வெளிவந்தன. சட்டத்திற்குப் புறம்பான கொலைகளுக்குப் பச்சைக்கொடி காட்டியவேளையில், மரண தண்டனை வழங்கப்படுவதை அவர் இடைநிறுத்தினார். எனினும், ஜே ஆரினுடைய பிரசார இயந்திரம் அவரை ஆசியாவின் தலைசிறந்த அரசியல்வாதி என்று புகழாரம் சூட்டியது. இதன் பிரதிபலன்கள் வித்தியாசமாக இருந்தன. பாராளுமன்றத்தில் அவர் ஒரு கூட்டத்திற்குத் தலைமை தாங்கிக்கொண்டிருந்தபோது குண்டு ஒன்று வெடித்தது. அவர் உயிர் தப்பினார். 1987 இல் ஜே ஆர் இந்தியாவுடனான அமைதி உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு அதன் விளைவாக இந்திய இராணுவம் வந்திறங்கியது.
கடைசியில் அவர் போய்விட்டார். அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த அதிபர் பிறேமதாச ஜே ஆர் உருவாக்கிய பாரங்களை சுமந்தார். அவர் வடக்கிலும் தெற்கிலும் இரண்டு உள்நாட்டு யுத்தங்களை எதிர்கொண்டார். ஜேவிபி யின் ஆயுதப் போராட்டத்தை பிறேமதாச அரசாங்கம் 1989 இல் அடக்கியது. கட்சித் தகவல்களின்படி, அரசாங்கம் 100,000 இற்கு மேற்பட்ட அதன் உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கொன்றுகுவித்தது. அந்த சூழ்நிலையில், அமைச்சரவை அதற்கு இரத்தத்தை விலையாகக் கொடுக்கவேண்டியிருந்தது. அதிபர் பிறேமதாச மற்றும் ஜே ஆரின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்கள் சிலர் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டனர். இந்தக் குழப்பத்திற்கு அரச பயங்கரவாதத்தின்மீது குற்றஞ் சாட்டவேண்டும். எனது பார்வையில் ரஜீவ் காந்திகூட ஜே ஆர் ஏற்படுத்திய சூழ்நிலையின் பலிக்கடாவே. உத்தியோகபூர்வ தகவல்களின்படி, 26 வருட கால யுத்தத்தில் 80,000 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
‘எமக்கு ஒரு சர்வாதிகாரி வேண்டுமா அல்லது சனநாயகம் வேண்டுமா?’ என சிறிலங்கா வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு இரு முறையல்ல, பலமுறை சிந்தித்திருக்க வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் இரத்த ஆறு ஓடுவதும் தொடரும். அரசாங்கம் விருப்பு வாக்கு முறைமையை நீக்குவதாக வாக்குறுதியளித்திருக்கிறது. தற்போதைய முறைமையின்படி, தனக்கு விருப்பமான ஒரு பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்வதற்குப் பாராளுமன்ற உறுப்பினருக்கு உரிமை உள்ளது. இது இல்லாவிட்டால், கட்சியின் தலைமைப் பீடமே உங்களுக்கான தெரிவுகளை வழங்கும். அது சர்வாதிகார ஆட்சி முறைமையை நோக்கிய ஒரு நகர்வாகும். தசாப்தங்களாகக் கிடைத்த பயங்கர அனுபவங்களுக்குப் பின்னர் மக்கள் சனநாயக சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும். சிறந்த ஆட்சி முறைமைக்கு பலமான எதிர்க்கட்சியும் அவசியமாகும்.
மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரமுள்ள அரச தலைவர் முறைமையை ஒழிக்க விரும்பினால் எதிர்க்கட்சிகளும் ஆதரவு வழங்கும் என நான் நம்புகிறேன். நிறைவேற்று அதிகாரமுள்ள அரச தலைவர் முறைமையை ஒழிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருந்தபோதும் சிறிலங்கா அரசதலைவர் சந்திரிகா குமாரதுங்க தனது அதிகாரங்களை இழப்பதற்கு விரும்பவில்லை.




No comments:

Post a Comment