*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Wednesday, April 21, 2010

யாழ் மக்களே உங்களால் பதில் கூற முடியுமா : ஒரு வேண்டுகோள் !

இறுதி யுத்தம் நடைபெற்று சுமார் 25,000 த்திற்கும் மேற்பட்ட தமிழ் உறவுகள் கொல்லப்பட்டு, போராடிய போராளிகள் பலர் இராணுவத்தால் அம்மணமாக கைகள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு, பெண் போராளிகளின் பிறப்பு உறுப்பில் வெடிபொருட்களை உட் செலுத்தி வெடிக்க வைத்து, கர்பிணியாக இருந்த தமிழ் தாய்மாரை கொலை செய்து பிறக்காத குழந்தையைக் கூட வெளியே எடுத்து கொலை செய்து, பதுங்கு குழிகளுக்குள் இருந்த எமது உறவுகளை அப்படியே கைக் குண்டை வீசி எறிந்து கொலை செய்து, தமிழ் பெண்களை மான பந்தப் படுத்தி பாலூட்டும் மார்புகளை அறுத்தெறிந்து அவமானப் படுத்திய சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து யாழ் தமிழ் இளைஞர்கள் இயங்குவதா ?என்ன கொடுமை இது ? என்ன கலாச்சார அழிவு இது. யாழ் மக்களே விழிப்புணர்வு பெறும் நேரம் நெருங்கிவிட்டது. உலகம் முழுதும் தமிழீழ உணர்வுகள் பொங்கி எழும் இத் தருணத்தில் யாழில் வசிக்கும் சில தமிழீழ தேசத்துரோகிகள், துணை இரானுவக் குழுக்களுடனும் இராணுவத்துடனும் இணைந்து தமது கைவரிசையை காட்டத்தொடங்கி இருகின்றனர். இவர்கள் யாழ் இளைஞர்களுக்கு ஆபாசப்பட குறுந்தகடுகளையும் போதை பொருட்களையும் இலவசமாக வழங்கிவருகின்றனர் இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதாவது போராட்டப் பாதையில் இளைஞர்கள் செல்லாதிருக்க இராணுவம் கையாளும் யுக்திகள் இவை.உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறன் 1999 மே மாதம் யாழ் சுன்னாகம் பேரூந்து நிலையத்தின் அருகே, மாணவி ஒருவரின் கையை பிடித்து இழுத்து ஆபாசமாக நடந்துகொள்ள முயன்ற சிங்கள ராணுவத்தினர் மூவரை அருகே உள்ள அரசமரத்தில் கட்டிவைத்து நையப்புடைத்தனர் யாழ் மக்கள். இதன் மூலம் அவர்கள் தங்களின் கலாச்சார விழுமியங்களையும் தங்களின் விலைபோகாத மானத்தையும் நிரூபித்தனர்.ஆனால் இன்று சில விஷமிகளின் செயலால் யாழ்நகர் கலாச்சார சீரழிவுக்கு உள்ளாகி இருப்பதை நாம் மறுத்துவிடமுடியாது . புலு பிலிம் என்று அழைக்கப்படும் ஆபாச வீடியோக்கள், போதைப் பொருட்கள் இன்று யாழில் தாராளமாகக் கிடைக்கிறது. அண்மையில் அதிர்வுச் செய்தியில், யாழ் ராணுவத்துடன் யாழ் இளைஞர்கள் அணியும் பெண் இராணுவத்தினருடன் பெண்கள் அணியும் கிரிக்கட் விளையாடினார்கள் என்று அறிந்தோம். அப் போட்டி நன்றாகத்தானே நடந்தது, ஏன் விளையாடுவதுடன் நிறுத்தி கொண்டீர்கள் ராணுவத்துடன் சென்று அன்றைய தினத்தை சிறப்பித்துவிட்டு வரவேண்டியது தானே! எம் இனத்தையே சிதைத்தவனிடம் நீங்கள் செய்ய வேண்டிய செயல் இது தானா ? உங்களுக்கு வெக்கமாக இல்லையா ? செம்மணி முதல் முள்ளிவாய்க்கால் வரைக்கும் உங்கள் அக்கா தங்கையர்களை கெடுத்து புதைகுழி தோண்டி புதைத்தவனுடன் சென்று விளையாடப்போவதா ? நமக்காக குருதி சிந்தி போராடிய போராளிகளுக்கும் புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்கும் செய்யக்கூடிய நன்றிக்கடனா ! இது ? எண்ணிப்பாருங்கள் !புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள், குளிரிலும் , பனியிலும் , காற்றிலும் மழையிலும் கஷ்டப்பட்டு உளைத்து அனுப்பும் பணத்தை இதற்கா செலவிடுவது ? நாம் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா ??தெல்லிப்பளை யுனியன் கல்லூரி மற்றும் மகாஜனா கல்லூரி மாணவிகளில் சிலர் கல்லூரிக்கு செல்லும் போது ராணுவத்தினர் அவர்களை பார்த்து ஹாய் ! என்றுசொல்லி நையாண்டி செய்வதும் பதிலுக்கு ஒருசில மாணவிகள் ஹாய்! சொல்லுவதும் அவர்களை பார்த்து சிரித்து காதல் களியாட்டங்களில் ஈடுபடுவது எமக்கு மிகுந்த மனவேதனையை தருகிறது . இதனை நாம் அறிவோம்.இது தவிர மேலும் சில கல்லூரி மாணவிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது இயல்பாகி போய்விட்டது . ஏன் யாழ்நகரில் தமிழ் ஆண்களே இல்லையா ? போயும் போயும் எங்கள் அக்கா தங்கைகளின் உறுப்புகளில் துப்பாக்கிகளை விட்டு உயிருடன் வைத்து சுட்டு விளையடியவனிடமா நீங்கள் உறவாட விரும்புவது ???உணர்ச்சி நரம்பு அறுந்துவிட்டதா உங்களுக்கு ? உங்களுக்கு மூளை இல்லையா ? வெறும் ஜந்துகளா நீங்கள் ? ராணுவத்தின் கைப்பொம்மைகளா நீங்கள்? போராளிகள் செய்த தியாகங்கள் நீங்கள் ராணுவத்துடன் உறவாட தானா ? எண்ணிப் பாருங்கள் மக்களே !இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க யாழ் பஸ் நிலையத்திலும், ஆரியகுளம் சந்தியிலும் , இன்னும் சில இடங்களிலும் மாலை ஆறு மணியானதும் கூட்டம் கூடுகிறது ஏன் தெரியுமா ? அங்கே சிங்கள விலை மாதுக்கள் வந்து விடுவார்கள். அவர்களுடன் விலைபேசி அவர்களை ராணுவ முகாம்களுக்குள் சென்று காமக்களியாட்டங்களை அரகேற்றி கொள்ளத்தான்.அன்பார்ந்த யாழ் மக்களே தாயாக விடுதலைக்காய் நாம் கொடுத்துகொண்டிருகிற விலைகள் உங்களுக்கு தெரியும். இத்தருணத்தில் யாழில் நடந்து வரும் சம்பவங்கள் எம்மை மிகவும் வருத்தமடைய செய்கின்றன. நாம் இதனை பிரசுரிக்கவேண்டாம் என பல நாள் நினைத்தது உண்டு. ஆனால் இது காலத்தின் கட்டாயம். நீங்கள் தான் இந்த விஷகிருமிகளை இனம்கண்டு அவர்களை சமுதாயத்தின் மீது நிறுத்தி அவர்களையும் அவர்களின் செயல்களையும் உலகின் வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் .என்றுமே சிங்களவனுடன் நக்கி பிழைக்கிறவர்கள் நாங்கள் அல்ல என்பதை வழமை போல நீங்கள் நிருபிக்கவேண்டும். அதுமட்டுமில்லாது யாழ்நகரின் கலாச்சார விழுமியங்களையும் அதன் தடையங்களையும் காக்க வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு என்பதை உணர்ந்து செயல்பட தயாராகுங்கள் . உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை இது எனவே அதை பேணிப் பராமரியுங்கள்.





1 comment:

  1. சிலது சொன்னா திருந்தும் சிலது பட்டாத்தான் திருந்தும் அங்க சிங்கக்கொடி பறங்க்க வெட்கமில்லாம பாத்து கொண்டிருக்கானுகள் நான் நெக்கிறன் யாழ்ப்பாணத்தில ஆம்பிளயளே இல்லப்போல எல்லாமே பொட்டப்பயலுகள். ஒண்டு ரெண்டு ஆம்பிளையள் இருந்தா இரவோடு இரவா சிங்கக்கொடிய கொளுத்து சிங்களவனோடகதைக்குற பொட்டையளுக்கு செவிடு திரும்ப ரெண்டு அறை குடுத்து அனுப்புங்கடா

    ReplyDelete