*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Friday, April 23, 2010

ருத்ரகுமாரன் தேர்தலில் போட்டி! நாடுகடந்த அரசாங்கத் தேர்தல் சூடு பிடிக்கிறது!!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான செயற்பாட்டுக்குழுவின் இணைப்பாளரும் பிரபல சட்டத்தரணியுமான திரு விசுவநாதன் ருத்ரகுமாரன், அமெரிக்காவில் நடைபெறும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் தேசிய வேட்பாளராகப் போட்டியிட உள்ளதாக அங்கு இத் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தேர்தலானது பிராந்தியரீதியாகவும் தேசியரீதியாகவும் நடத்தப்படவுள்ளது. தமிழர்கள் வாழும் பகுதிகள் 8 பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் ஒருவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதியாக தெரிவு செய்யப்படும் அதேவேளை தேசியரீதியிலும் இருவர் தெரிவு செய்யப்படவுள்ளனர். பிராந்தியந்திய அடிப்படையில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அக் குறிப்பி;ட்ட பிராந்தியத்தில் வாழ்ந்து வரும் தகமையுள்ள வாக்காளர் மட்டுமே வாக்களிக்க முடியும். வாக்களிக்கத் தகமையுள்ள அனைத்து வாக்காளர்களும் தேசிய மட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும். ஒரு வாக்காளர் தமது பிராந்தியத்தில் போட்டியிடும் ஒரு வேட்பாளருக்கும் தேசிய மட்டத்தில் போட்டியிடும் இரு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க முடியும். அமெரிக்காவின் நாடுகடந்த அரசாங்கத்தின் தேர்தலைப் பொறுப்பேற்று நடத்தும் தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில (http://www.tgte-us.org/) வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பெயர் விபரங்கள் பின்வருமாறு: பிரதேச ரீதியாகப் போட்டியிடும் வேட்பாளர் விபரம்: நியூ இங்கிலன்ட்: சுபா சுந்தரலிங்கம் நியூ யோர்க்: டாக்டர் செல்லத்துரை கே. தயாபரன், சிவஞானம் கணேசன், ஜெயபிரகாஷ் ஜெயலிங்கம் மிட் அட்லான்டிக்: பிரபாரன் பொன்னத்துரை சவுத்: டாக்டர் போல் குறொசெற் மிட் வெஸ்ற்: டாக்டர் தவே தவேந்திரராஜா நோர்த் வெஸ்ட்: சிவ சங்கரி சவுத் வெஸ்ட்: அலெக்ஸ் டொஸ் தேசிய ரீதியாக போட்டியிடும் வேட்பாளர்கள்: டாக்டர் ஜெராட் பிரான்சிஸ் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் எதிர்வரும் மே 2ம் திகதி உலகம் முழுவதும் தமிழர் வாழும் பிரதேசங்களில் நடத்தப்படவுள்ளது. பல்வேறு நாடுகளிலும் தற்போது வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான காலம் முடிவடைந்து வேட்பாளர் விபரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. வேட்பாளர்கள் பலரும் தேர்தல் களத்தில் குதித்துள்ள நிலையில் தேர்தல் சகல இடங்களிலும் சூடுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.




No comments:

Post a Comment