*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Tuesday, April 20, 2010

என்ன நடந்தது இவர்கள் வாழ்க்கையில்?

அவ்வப்போது சினிமாவில் நடித்து வந்த பெரியார்தாசன் அண்மையில் ஆத்திகரானார். அதுமட்டுமில்ல- இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.இவர் மாதிரியே பெரியாரின் தீவிர பற்றாளர் மணிவண்ணன். இவர் இப்போது சாய்பாபா பக்கம் சாய்ந்திருக்கிறார்.சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவ இயல் பேராசிரியராக பணிபுரிந்த பெரியார்தாசனை பாரதிராஜா சினிமாவுக்கு கொண்டு வந்தார். நடிப்போடு ரியல் எஸ்டேட், மல்டி லெவல் மார்க்கெட்டிங்கிலும் கால் பதித்தார்.கடந்த 2004ம் ஆண்டு அன்பு பாலா நடித்த அம்மா,அப்பா,செல்லம் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது. இதற்காக சென்னையில் இருந்து நான்,(பேட்டி எடுக்க)பெரியார்தாசன்,நடிகை சபீதா ஆனந்த்(நடிக்க) மூவரும் ஒரு காரில் புதுச்சேரி சென்றோம்.அப்போது பெரியார்தாசன், தனது மகன் வ.சி.வளவன் திருமணம் அழைப்பிதழ் கொடுத்தார். அது ஒரு புத்தகமாகவே இருந்தது. அந்த திருமண அழைப்பிதழில் பெரியாரின் படம் அச்சிடப்பட்டிருந்தது. உள்ளே திருக்குறள் இன்பத்து பாலுக்கு பெரியார்தாசன் எழுதிய விளக்கவுரை.ஏன் பெரியாரின் படத்தை திருமண அழைப்பிதழில் அச்சிட்டுள்ளேன் என்று நினைப்பீர்கள்? என்று அவராகவே கேட்டு அவராக விளக்கம் சொல்லிக்கொண்டு வந்தார்.சேசாசலம் என்கிற என் பெயரையே பெரியார்தாசன்னு மாத்திக்கிட்டேன்னா பார்த்துக்குங்க..என்று பெரியார் மீது தான் கொண்ட பற்று பற்றி, கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் ஆரம்பித்து மரக்காணம் வரை சொல்லிக்கொண்டு வந்தார்.நொங்கு கடை, இளநீர் கடைகளில் கார் நின்ற போது மட்டும் இடைவேளை.ஐந்து வருடங்களில் அவர் வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்ததோ....தற்போது இறைவன் மீது நாட்டம் கொண்டிருக்கிறார். அதுவும் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.இதே போல் பெரியாரின் தீவிர பற்றாளர் மணிவண்ணன். இதனால்தான் இவருக்கும் நடிகர் சத்யராஜூக்கும் நெருக்கம் அதிகமானது.இவர் இப்போது அடுத்த அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் மஹாராஷ்டிராவில் இருக்கும் சீரடி சாய்பாபா சன்னதிக்கு சென்று வந்திருக்கிறார்.கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் அளவிற்கு என்ன நடந்தது இவர்கள் வாழ்க்கையில்?




No comments:

Post a Comment