*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Saturday, April 10, 2010

விமான விபத்தில் போலந்து அதிபர் உள்பட 132 பேர் பலி

ரஷ்யாவில் போலந்து அதிபர் பயணம் செய்த விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 132 பேரும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவில் உள்ள மோலென்ஸ்க் நகரில், கத்யன் படுகொலை சம்பவத்தின் 70 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைப் பிடிக்கப்பட்டது.
இதில் கலந்து கொள்வதற்காக வாசா நகரில் இருந்து போலந்து அதிபர் லெக் கசின்ஸ்கி விமானத்தில் சென்றார். அவரது விமானம் மோலென்ஸ்க் நகர விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.
இதில் போலந்து அதிபர் லெச் காச்ஷின்ஸ்கி மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட அந்த விமானத்தில் பயணம் செய்த 132 பேர் இருந்ததாகவும், மேற்கு ரஷ்யாவிலுள்ள ஸ்மோலென்ஸ்க் என்ற நகர் அருகே அந்த விமானம் விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் போலந்து அதிபரும், அவரது மனைவியும் இருந்ததை போலந்து அயலுறவுத் துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.
இதனிடையே ரஷ்ய அரசின் பேச்சாளர் ஒருவரும் இந்த விபத்தை உறுதிபடுத்தியுள்ளார். ஆனால் விபத்து குறித்து மேலும் விவரங்களை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
இருப்பினும் விமானம் தரையிறங்கும்போது விமானத்தின் இடதுபுற இறக்கை மரம் ஒன்றின் மீது மோதியதில், விமானம் இரண்டு துண்டாக பிளந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதாகவும், அடர்த்தியான பனி மூட்டம் காரணமாகவே இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்றும் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.




No comments:

Post a Comment