*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Saturday, April 10, 2010

"விடுதலைக்குத் தோள்கொடுத்த சுவிஸ்வாழ் உறவுகளே" "விடுதலைப் புலிகளின் தியாகம் வீண்போகாது" உறுதியுடன் செயலாற்றுவோம் முன்வாருங்கள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு சுவிஸ் வாழ் தமிழீழ மக்கள் ஆற்றிய பங்களிப்பையும் அதற்காக பணியாளர்கள் வழங்கி வந்த பெரும் உழைப்பையும் நாம் நன்கு அறிவோம். இந்த வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெற்றிக்கும் நீங்கள் உறுதுணையாக நிற்பீர்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம். எமது எதிர்பார்ப்புக்கு உறுதுணையாக நிற்பீர்கள் என்ற நம்பிக்கையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக சுவிஸ் நாட்டில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டிய 10 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தலை மே 2 ஆம் திகதி ஒழுங்கு செய்து நடாத்துவதற்கான சுவிஸ் செயற்பாட்டுக்குழுவை நாம் நியமித்துள்ளோம். இக் குழுவில் எல்லோரின் ஒன்றுபட்ட பேராதரவும் பங்குபற்றலும் இருத்தல் அவசியமானதென நாம் உணர்கிறோம்.
இதன் நிமித்தம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான விபரங்களையும் இத் திட்டம் தொடர்பாக உங்கள் மத்தியில் இருக்கக்கூடிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களையும் கலந்து பேசுவதற்கான சந்திப்பொன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்குழுவின் அனைத்துலகச் செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. என குறிப்பிட்டு சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்குழுவின் அனைத்துலகச் செயலகத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பிதழின் விபரம் வருமாறு

அன்புடையீர்!
11.04.2010, பிற்பகல்: 3 மணிக்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பது குறித்த சந்திப்பு! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை மே மாதம் 2 ஆம் திகதி உலகளாவியரீதியில் நடாத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதனைத் தாங்கள் அறிவீர்கள். இவ்வாறு தேர்தல்களை குறிப்பிட்ட காலத்தில் நடாத்தி முடித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வினை மே மாதம் 17-19 காலப்பகுதிக்குள் கூட்டுவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை இக் காலப்பகுதிக்குள் கூடுவது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு ஈழத் தமிழர் தேசம் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான வழிகாட்டிக் கோட்பாடுகளில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசை அமைப்பதற்காகப் பாடுபடும் என மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக அமையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வெற்றிகரமாக அமைத்திட உழைப்பது நமது தாயக விடுதலையை நேசிக்கும் அனைவரினதும் கடமையாகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு சுவிஸ் வாழ் தமிழீழ மக்கள் ஆற்றிய பங்களிப்பையும் அதற்காக பணியாளர்கள் வழங்கி வந்த பெரும் உழைப்பையும் நாம் நன்கு அறிவோம். இந்த வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெற்றிக்கும் நீங்கள் உறுதுணையாக நிற்பீர்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாகவும் இவ் அரசாங்கத்தின் முதலாவது அரசவைக்கு சுவிசில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டிய 10 பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடாத்தப்படவுள்ளதேர்தல் தொடர்பாகவும் சுவிசின் அனைத்துப்பாகங்களிலும் நாடு கடந்த அரசு தொடர்பான கருத்தமர்வுகள் நடைபெற்று வருகின்றன. இம்மாதம் முதல் இடம் பெற்றுவரும் கருத்தமர்வுகளில் இணப்பாளர் திரு.விஸ்வநாதன் உருத்திரகுமாரன் செய்மதிமூலமான தொடர்பாடலூடாக பங்கு பற்றி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் தேர்தல் விளக்கங்களை வழங்குவதோடு மக்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தும் வருகின்றார் . எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 2ம் நாள் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களில் புலம்பெயர் தமிழ் மக்கள் பெருவாரியாக அணிதிரண்டு வாக்களிப்பதன் ஊடாக அனைத்துலக சமூகத்திற்கு காத்திரமான செய்தியை தெரிவிக்க முடியும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்க செயற்குழு இணைப்பாளர் வி. உருத்ரகுமாரன் அழைப்பு விடுத்துள்ளார். சுவிசின் பிரதான நகரங்களில் இவ்வார இறுதியில் நடைபெற்ற நாடு கடந்த அரசாங்கம் தொடர்பான விளக்கக்கூட்டங்களில் காணொலி ஊடாக நேரடியாக உரையாற்றும் போதே உருத்ரகுமாரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கமென்ற அரசியல் வலுமையம், ஜனநாயகப் பண்பாட்டின் உச்ச வெளிப்பாடாக எமது சமூகத்திலிருந்து வெளிப்படவேண்டுமென்ற எதிர்பார்ப்பு எமக்கு உண்டு. இம்முயற்சியின் பலம் என்பது மக்கள் பலத்திலிருந்துதான் கட்டியெழுப்பப்படவுள்ளது. எனவே புலம்பெயர் தமிழ் மக்கள், மே 2ம் நாள் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில், தமிழர் தாயகத்தில் வாக்களிப்பில் பங்கேற்கும் மக்களின் தொகையை ஒத்ததாக பங்கேற்று வாக்களிக்கும் பட்சத்தில் அது அனைத்துலக சமூகத்தின் அவதானிப்பினைப்பெறும். மே 18-19ஆம் நாட்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வைக் கூட்டுவதன் மூலம், ஈழத் தமிழினம் நொந்துபோன ஒரு இனமாக, அவர்களின் விடுதலை உணர்வைச் சிதைத்துவிட்டதாக கொக்கரிக்கும் சிறிலங்கா பேரினவாத அரசுக்கு தகுந்த பதிலடியைக் கொடுப்பதோடு, தமிழ் மக்களின் விடுதலை வேணவாவை உலகறியச் செய்ய முடியுமெனவும் அவர் உறுதிபடக் கூறினார்
அந்த வகையில் சுவிஸ் சூரிச்சில் நடைபெறும் பிரதான கருத்தமர்விலும் சுவிஸ் வாழ் தமிழீழ மக்கள் பங்கு பற்றுவதுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்பாட்டிலும் இணைத்து நமது வரலாற்றுப்பணியை ஆற்றிட ஒன்றிணையுமாறு உரிமையுடன் வேண்டுகிறோம்.
இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான சுவிஸ் செயற்குழுவின் அனைத்துலகச் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றுகூடல் நடைபெறும் இடம்: சூரிச்
Salzweg 1, 8048 Zurich 11.04.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி தொடர்புகளுக்கு: சசி 078 850 90 22
காலம்: 11.04.2010, பிற்பகல்: 3.00 மணி
கூட்ட ஏற்பாடுகள்:
நாடுகடந்த அரசு அமைப்பதற்கான சுவிஸ் செயற்பாட்டுக் குழு அனைத்துலகச் செயலகம், தொடர்புகளுக்கு: info@govtamileelam.org
மேலதிக தகவல்களை விபரமாக அறிந்து கொள்ள
http://govtamileelam.org/gov/ அல்லது
http://www.tgte-swiss.ch/,

தொடர்புகளுக்கு: 022 734 00 63





No comments:

Post a Comment