*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Saturday, April 10, 2010

மாவை சேனாதிராசாவுக்கு ஓர் அன்பு மடல் வலம்புரி ஆசிரியர் தலையங்கம்

அன்புக்குரிய மாவை சேனாதிராசாவுக்கு! அன்பு வணக்கம். யாழ்.மாவட்டத்தில் ஐந்து ஆசனங்கள் பெற்றீர்கள் என்ற செய்தியறிந்து மகிழ்வடைந்தோம். அதிலும் விருப்பு வாக்குக் கிடைத்த ஒழுங்கு கண்டு இன்னும் மகிழ்வு.வாக்காளப் பெருமக்கள்? சேர்ந்து திட்டமிட்டு விருப்பு வாக்கை ஒழுங்கமைத்திருக்கின்றார்கள்.
முதலில் உங்களுக்கு. இரண்டாவது உங்களோடு இருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு. மூன்றாவது முதுமையிலும் காங்கிரஸைத் தூக்கி எறிந்து விட்டு தங்களிடம் வந்த விநாயகமூர்த்திக்கு. இப்படியே உங்கள் விருப்பு ஒழுங்கு அமைந் திருக்கின்றது. இறைவனே நேரில் வந்து நின்று ஒழுங்குபடுத்தினாலும் இப்படியயாரு ஒழுங்கு கிடைப்பது அரிது.
அந்த அரிதான விடயம் உங்கள் கட்சிக்குக் கிடைத்திருக்கின்றது. இருந்தும் உங்களோடு அன்று தொடக்கம் இன்று வரை இருந்து கட்சிக் காகப்பாடுபட்ட கட்சியின் செயலாளர் எக்ஸ். குலநாயகத்தையும்இ சீ.வீ.கே.சிவஞானத்தையும் விருப்பு வாக்குத் திட்டமிடலில் சேர்த்திருக்கலாம். என்ன செய்வது இப்போது உங்கள் கட்சியைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கூட உங்களிடம் இல்லை என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
‘வீடு' என்ற தேர்தல் பிரசாரப் பத்திரிகையை யாழ்ப்பாணத்தில் அச்சடித்து விட்டு கனடாவில் அச்சடித்ததாகக் கூறி உங்கள் தரப்பினர் வெளியிட்ட போது, உங்கள் கட்சியில் போட்டியிட்ட பலர் எங்களிடம் முறையிட்டார்கள்.கட்சிக்குள்ளேயே இப்படியொரு கழுத்தறுப்பு நடப்பதாக அவர்கள் குற்றஞ்சுமத்தினார்கள். இருந்தும் நாங்கள் நாகரிகம் கருதி அவர்களின் குற்றச்சாட்டுக்களை வெளியிட விரும்பவில்லை.
நீங்கள் விரும்பினால் குற்றஞ்சுமத்திய உங்கள் கட்சி வேட்பாளர்களின் கருத்துக்களை பிரசுரிக்க முடியும்.தேர்தல் முடிபுகள் வர முன்னதாக-விருப்பு வாக்குகள் எண்ணுவதற்கு முன்பாக உங்கள் தரப்பால் வெடி கொளுத்தி ஆர்ப்பரிக்க எப்படி முடிந்தது? எதுவாயினும் உங்கள் மீது மதிப் புண்டு. உங்களிடம் அன்பாகத் தெரிவிப்பதுஇ வன்னி யில் வெடிகுண்டுகளுக்குத் தங்கள் பிள்ளைகளை - உறவுகளைப் பலிகொடுத்து விட்டு வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் மனிதங்கள்இ உங்கள் வெற்றியாளர்கள் சிலரின் வெடி கொளுத்தலில் திடுக்கிட்டு கலங்குகின்றன.
வென்றது மகிழ்வுதான். அதற்காக வெடி கொளுத்துவது உங்கள் மனச்சாட்சிக்கு உடன்பாடானதா? என்று சொல்லுங்கள். உங்கள் குடும்பங்களில் அப்படியொரு இழப்பென்றால் வெடிகொளுத்துவீர்களா? இடப்பெயர்வுஇ முகாம் வாழ்வு என்றெல்லாம் துன்பம் அளந்த நீங்கள் ஒரு கணத்தில் அதையல்லாம் மறந்து வெடிகொளுத்துவீர்களாயின், உங்களுக்குள்ளும்... புகுந்து விட்டதென்றல்லவா எண்ணத் தோன்றுகின்றது.
ஏதோ கவனம்! கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்




No comments:

Post a Comment