*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Friday, April 9, 2010

ஆனையிறவு: சிங்களவர்கள் நினைவுச் சின்னமெனப் ஒளிப்படமெடுக்கும் இடமாக மாறியிருக்கிறது

விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கொடூரமான மோதல்களின் ஒளிப்படங்கள் ஆனையிறவுப் பகுதியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.போர் இடம்பெற்ற இந்தப் பகுதிகளுக்குத் தற்போது ஆயிரக்கணக்கானோர் சென்று வருகிறார்கள். கடந்த மே 2009இல் முடிவுக்குவந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த பிரிவினைவாதப் போரின்போது சிறிலங்கா இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான உக்கிர மோதல்கள் இடம்பெறும் களமாகவே ஆனையிறவு இருந்து வந்திருக்கிறது.இவ்வாறு, அனைத்துலக முன்னணி செய்தி நிறுவனமான Inter Press Service - IPSன் செய்தியாளர் Adithya Alles ஆனையிறவில் இருந்து செய்திக் கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார். அதனை புதினப்பலகை-க்காகத் தமிழாக்கியவர் தி.வண்ணமதி.அவர் தொடர்ந்து எழுதியுள்ளதாவது: யாழ்ப்பாணக் குடாநாட்டினையும் நாட்டினது ஏனைய பகுதியையும் இணைக்கும் ஓர் ஒடுங்கிய நிலப்பகுதியே இது. சிறிலங்காவில் இடம்பெற்றுவந்த இன மோதல்களின் விளைவாக யாழ்ப்பாணக் குடாநாடு நாட்டினது ஏனைய பாகங்களிலிருந்து துண்டிக்கப்பட்டே இருந்துவந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான ஒரேயொரு தரைவழிப் பாதையாகிய ஏ9 நெடுஞ்சாலை திறக்கப்படுவதற்கு ஏழு மாதங்கள் எடுத்திருக்கிறது. கடந்த சனவரி முதல் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான பொதுமக்களின் போக்குவரவு நிறுத்த இயலாத அளவிற்கு அதிகரித்துக் காணப்பட்டது. 'வார இறுதியில் ஆகக்கூடியது 200,000 போர் விகாரைக்கு வந்துசெல்கிறார்கள்' என யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அப்பால் நயினாதீவில் அமைந்திருக்கும் நாகதீப விகாரையின் பிரதமகுரு சஸ்தரவேதி சிறீ விமல தேரர் குறிப்பிடுகிறார். குடாநாட்டிலிருந்து 20 நிமிடப் படகுப் பயணத்தினை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் நாகதீப விகாரைக்குச் செல்கிறார்கள். உள்ளூர்த் தமிழ் மக்களுக்கும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் இடையிலான இடைத்தொடர்புகள் அதிகரிக்கும்போது போரினால் ஏற்பட்ட வடுக்கள் மறையும் எனத் தெரிவித்த இந்த பௌத்த மதகுரு, பெரும்பான்மை இனச் சிங்களவர்களுக்கும் சிறுபான்மைத் தமிழர்களுக்குமிடையே நம்பிக்கையீனம் அதிகரித்துக் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.'போரானது இரண்டு சமூகத்தவர்களையும் பிரித்து வைத்திருந்தது. தற்போது அவர்கள் சாதாரண மக்கள்போல ஒன்றாக இணைந்து தமக்கிடையேயான இடைத்தொடர்புகளை வளர்த்துக்கொள்ளலாம்' என காவல்துறை ஆணையாளர் தெரிவித்தார். 'கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குடாநாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறார்கள். தெற்கிற்கும் வடக்கிற்கும் இடையிலான உறவினை இதுபோன்ற பயணங்கள் நிச்சயமாக மேம்படுத்தும்' என யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயம் தெரிவித்தார். யாழ் - கண்டி நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் அமைக்கப்பட்டிருக்கும் போர் நினைவுச் சின்னங்களைப் பார்ப்பதற்காகவே தெற்கிலிருந்து வடக்கிற்குச் சிங்களவர்கள் படையெடுக்கிறார்கள். குண்டு துளைக்காத இருப்புத் தகடுகள் பொருத்தப்பட்ட புள்டோசர் ஒன்று ஆனையிறவில், கொங்கிறீற்றினால் அமைக்கப்பட்ட அடித்தளத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. 1991ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதலின் போது விடுதலைப் புலிகள் இந்த வாகனத்தினைப் பயன்படுத்தியிருந்தார்கள். கவசத் தடுப்பாக இரும்புத் தகடுகள் பொருத்தப்பட்டிருந்த இந்தப் புள்டோசர் தொடர்ந்தும் முன்னேறுவதைத் தடுக்கும் வகையில் படைவீரர் ஒருவர் புள்டோசரில் ஏறி அதன் உள்ளே குண்டு ஒன்றைக் கழற்றி வெடிக்கவைத்திருந்தார். இந்தச் சம்பவத்தில் அந்தப் படை சிப்பாயும் கொல்லப்பட்டார். ஹசலகா காமினி என்ற அந்தப் சிப்பாயின் நினைவாக அந்தப் புள்டோசர் அங்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஏ9 வீதியில் பயணிக்கும் சிங்களவர்கள் குறித்த இந்த இடத்தில் இறங்கி மலர்மாலையிட்டு வணங்குவதோடு இந்தப் புள்டோசரை ஆச்சரியத்தோடு நோக்குகிறார்கள். வீதியின் மறுபுறத்தில் மேலும் இரண்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஒன்று, உழவு இயந்திரம் மற்றையது பிக்கப் ரக வாகனம். அண்மைய மோதல்களின்போது விடுதலைப் புலிகள் இந்த வாகனங்களை முன்னணிப் பாதுகாப்பு நிலைகளுக்கு அண்மையில் வைத்துப் பயன்படுத்தியிருந்தனராம். இந்த இரண்டு வாகனங்களுக்கும் குண்டு துளைக்காத இருப்புத் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கின்றபோதும் ஆங்காங்கே குண்டுத் துளைகளை அவதானிக்க முடிகிறது. ஏ9 வீதியில் பயணம் செய்வோருக்கு, குறிப்பாகத் தென்பகுதிச் சிங்களவர்கள் நினைவுச் சின்னமெனப் ஒளிப்படமெடுக்கும் இடமாக அண்மைய நாட்களில் இது மாறியிருக்கிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் ஆயிரக்கணக்கான சிங்களவர்களின் வரவினை எதிர்பார்த்து யாழ்ப்பாண நகரம் காத்திருக்கிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள ஒருசில விடுதிகளிலும் நான்கு மாதத்தின் முன்னரே முன்பதிவுகள் செய்யப்பட்டுவிடுகின்றன. பெருந்தொகையில் வரும் சிங்களவர்களிடமிருந்து பணத்தினைப் பெறுவதற்கு வியாபாரிகள் பல்வேறுபட்ட உத்திகளைக் கையாழுகிறார்கள். போரினால் சேதமடைந்த வீடுகளைத் திருத்தி அரைகுறை வசதிகளுடன் வாடகைக்கு விடுகிறார்கள். உணவு விடுதிகளிலும் கடைத்தெருக்களிலும் வார இறுதி நாட்களில் அதிகளவு வியாபாரம் நடைபெறுகிறது. இந்தியத் தயாரிப்புப் பேருந்துகளில் சாரை சாரையாக தென்பகுதிச் சிங்கள மக்கள் குடாநாட்டுக்கு வருகிறார்கள். பேருந்துகளின் கூரைகளில் விறகுகளும் சமையல் பாத்திரங்களும் காணப்படுகின்றன. எது எவ்வாறிருப்பினும் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான இனரீதியான பிளவினைச் சீர் செய்வதற்கு நீண்ட நெடுங்காலம் எடுக்கும். உதாரணமாக, யாழ்ப்பாணத்தின் நகர வீதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் பெரும்பாலான தமிழர்களுக்குச் சிங்களம் தெரியாது. ஆனால் இவர்களிடத்தில் தற்போது வந்து குவியும் வாடிக்கையாளர்களுக்கோ தமிழ் தெரியாது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளின் கலவையாகவும் வெறும் சைககளாலுமே வியாபாரிகளுக்கும் சிங்களவர்களுக்குமிடையே தொடர்பாடல் நடக்கிறது. 'நீண்ட நெடுங் காலமாக இரண்டு சமூகங்களும் பிரிந்திருக்கின்றன. இரண்டு சமூகத்தவர்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயற்படுவதற்கு நாளெடுக்கும்' என சிறிலங்காவின் வட மத்திய மாகாணத்திலிருந்து யாழ்ப்பணத்திற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் சரத் ரத்தினசிறி தெரிவிக்கிறார்.இது இவ்வாறிருக்க, பெருந்திரளான சிங்களவர்கள் குடாநாட்டுக்குப் படையெடுப்பது தொடர்பில் சில தமிழ் அரசியல்வாதிகள் தங்களது கவலையினை வெளியிடுகிறார்கள். குடாநாட்டு மக்களுக்கும் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப்பயணம் செய்யும் சிங்களவர்களுக்கும் இடையில் பகைமையுணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. 'தெற்கிலிருந்து மக்கள் குடாநாட்டுக்கு வருவதையிட்டு நாங்கள் மகிழ்வடைகிறோம். இதுபோன்ற சுற்றுப்பயணங்கள் நிலைமை வழமைக்குத் திரும்புவதற்கு வழிவகுக்கும்' என பத்மநாதன் சயேந்திரன் தெரிவித்தார். நீண்ட காலம் தொடர்ந்த போரினால் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து குடாநாடு இதுநாள் வரைக்கும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணத்தினை அபிவிருத்தி செய்யும் சிறப்பானதொரு முனைப்பாகவே தென்பகுதிச் சிங்களவர்களின் யாழ்ப்பாணத்திற்கான வருகையினைக் குடாநாட்டு மக்கள் கருதுகிறார்கள். குடாநாட்டினைப் பொறுத்தவரையில் போரினால் அழிந்த கட்டடங்கள் எங்கும் தென்பட்டாலும், வன்னிப் பகுதியில் நிலைமைகள் மேலும் மோசமானதாகவே இருக்கின்றன. குடாநாட்டிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கும்போது வன்னிப் பெருநிலப்பரப்பின் நுழைவாயிலில், 2006ம் ஆண்டு தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற கடுமையான மோதல்களிலிருந்து தப்பிய கட்டடங்களையோ அல்லது கட்டமைப்புக்களையோ காணமுடியவில்லை.ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரத்தின்படி இறுதிப்போரின் பின்னர் 280,000 பொதுமக்கள் இடம்பெயர்ந்திருந்தார்கள். இவர்களில் 190,000 பேர் அவர்களது சொந்த இடங்களில் ஏற்கனவே மீளக்குடியேற்றப்பட்டு விட்டார்கள். 160,000 வீடுகள் முற்றாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்திருப்பதாக ஐ.நா மேலும் தெரிவிக்கிறது. சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழர்களுக்குத் தனிநாடு கோரி விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பிரிவினைவாதப் போரின்போது அண்ணளவாக 70,000 பொதுமக்கள் மடிந்திருக்கிறார்கள். கடந்த காலத்தில் தங்கள் எத்தகைய இடர்களுக்கு முகம்கொடுத்தார்கள் என்பது தொடர்பில் யாழ்ப்பாணத்து மக்கள் எவருமே முறையிடவில்லை. 'முன்னர் இருந்ததைவிட குடாநாட்டில் நிலைமைகள் மாறியிருக்கின்றன. இராணுவத்தினர் வீதிகளில் சுற்றித் திரிந்தாலும் சோதனை நடவடிக்கைகள் பெரிதும் குறைந்திருக்கின்றன. போரின் சின்னங்களாக இருந்த பல அம்சங்கள் அகற்றப்பட்டுவிட்டன. குடாநாட்டில் இராணுவமயப்படுத்தல் படிப்படியாகக் குறைந்துவருகிறது' என ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்தார்.




No comments:

Post a Comment