இன்று தாய்த்தமிழீழம் பேரினவாத சக்திகளின் ஆக்கிரமிப்புக்குள் சிக்கியுள்ள இந்த நேரத்தில் எமது உறவுகள் இருக்க வீடு , உடுக்க உடை , உண்ண உணவு இல்லாமல் இன்னும் முகாம்களிலும் முட்கம்பி வேலிகளுக்கிடையிலும் குடிசைகளிலும் வதைமுகாம்களிலும் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் யாழ் மண்ணில் சில தமிழினத்துரோகிகள் தங்களின் தாய் நிலத்தை அன்னிய சக்திகளுக்கு பேரம்பேசி விற்பனை செய்துகொண்டிருக்கின்றனர். . இது தவிர சில துரோகிகள் தங்கள் வீடுகளில் இருந்த தங்கள் உறவுகளை துரத்திவிட்டு தங்கள் வீடுகளை பேரினவாதிகளுக்கு வாடகைக்கு கொடுத்துள்ளனர்.
எம் தாயக மண்ணில் எமது தமிழீழ மக்கள் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்காக தமது இன் உயிர்களை தியாகம் செய்து தேச விடுதலைக்காக போராடி வித்தாகிய மாவீரர்களின் கனவுகளை குழிதோண்டிப் புதைத்துக்கொண்டிருக்கின்றனர்.
இது எங்கள் தேசம் இதை நாம் யாருக்காகவும் எதற்காகவும் எந்தக்காரணத்திற்காகவும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை...
இதை துரோகிகளுக்கு உணர்த்த வேண்டிய காலகட்டமாகும்....
நயினாதீவு நாகவிகாரை புனித பிரதேசமாம். . . . ஆனால் நல்லூர் கந்தசாமி ஆலயம். . . .? ? ? உணர்ந்து கொள்ளுங்கள். . புரிந்துகொள்ளுங்கள். . ஈழ உறவுகளே !
நயினாதீவு நாகவிகாரை புனித பிரதேசமாம். . . . ஆனால் நல்லூர் கந்தசாமி ஆலயம். . . .? ? ? உணர்ந்து கொள்ளுங்கள். . புரிந்துகொள்ளுங்கள். . ஈழ உறவுகளே !
No comments:
Post a Comment