*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Tuesday, April 6, 2010

அற்ப‌ ஆசைக‌ளுக்காக‌ தாய்தேச‌த்தை விற்றுப்பிழைக்கும் த‌மிழின‌ப் பிசாசுக‌ள்.....உண‌ருமா த‌மிழின‌ம்?





இன்று தாய்த்த‌மிழீழ‌ம் பேரின‌வாத‌ ச‌க்திக‌ளின் ஆக்கிர‌மிப்புக்குள் சிக்கியுள்ள‌ இந்த‌ நேர‌த்தில் எம‌து உற‌வுக‌ள் இருக்க‌ வீடு , உடுக்க‌ உடை , உண்ண‌ உண‌வு இல்லாம‌ல் இன்னும் முகாம்க‌ளிலும் முட்க‌ம்பி வேலிக‌ளுக்கிடையிலும் குடிசைக‌ளிலும் வ‌தைமுகாம்க‌ளிலும் சிக்கித்த‌வித்துக்கொண்டிருக்கின்ற‌ன‌ர். ஆனால் யாழ் ம‌ண்ணில் சில‌ த‌மிழின‌த்துரோகிக‌ள் த‌ங்க‌ளின் தாய் நில‌த்தை அன்னிய‌ ச‌க்திக‌ளுக்கு பேர‌ம்பேசி விற்ப‌னை செய்துகொண்டிருக்கின்ற‌ன‌ர். . இது த‌விர‌ சில‌ துரோகிக‌ள் த‌ங்க‌ள் வீடுக‌ளில் இருந்த‌ த‌ங்க‌ள் உற‌வுக‌ளை துர‌த்திவிட்டு த‌ங்க‌ள் வீடுக‌ளை பேரின‌வாதிக‌ளுக்கு வாட‌கைக்கு கொடுத்துள்ளன‌ர்.
எம் தாய‌க‌ ம‌ண்ணில் எம‌து த‌மிழீழ‌ ம‌க்க‌ள் ச‌ந்தோச‌மாக‌வும் நிம்ம‌தியாக‌வும் சுத‌ந்திர‌மாக‌வும் வாழ்வ‌த‌ற்காக‌ த‌ம‌து இன் உயிர்க‌ளை தியாக‌ம் செய்து தேச‌ விடுத‌லைக்காக‌ போராடி வித்தாகிய‌ மாவீர‌ர்க‌ளின் க‌ன‌வுக‌ளை குழிதோண்டிப் புதைத்துக்கொண்டிருக்கின்ற‌‌ன‌ர்.
இது எங்க‌ள் தேச‌ம் இதை நாம் யாருக்காக‌வும் எத‌ற்காக‌வும் எந்த‌க்கார‌ண‌த்திற்காக‌வும் விட்டுக்கொடுக்க‌ப்போவ‌தில்லை...

இதை துரோகிக‌ளுக்கு உண‌ர்த்த‌ வேண்டிய‌ கால‌க‌ட்ட‌மாகும்....
ந‌யினாதீவு நாக‌விகாரை புனித‌ பிர‌தேச‌மாம். . . . ஆனால் ந‌ல்லூர் க‌ந்த‌சாமி ஆல‌ய‌ம். . . .? ? ? உண‌ர்ந்து கொள்ளுங்க‌ள். . புரிந்துகொள்ளுங்க‌ள். . ஈழ உற‌வுக‌ளே !





No comments:

Post a Comment